தெரிந்துகொள்வோம்
நோபல் பரிசு
பரிசு கிடைக்கிறது என்றால், அதனால் மகிழ்ச்சியடையாதவரோ, அதனைப் பாராட்டாத-வரோ இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. பள்ளிகளில், கல்லூரிகளில் மாவட்ட அளவில், மாநில அளவில் பரி-சு வாங்குவோரைப் பார்த்திருக்கலாம். நாடுகள் என்று எடுத்துக் கொண்டால், உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் பல வகையான பரிசுகள் பல்வகைத் துறைகளின் திறமைகளுக்காக வழங்கப்படுகின்றன.
இப்படிப் பலவகையான பரிசுகள் வழங்கப்பட்டாலும், நோபல் பரிசுக்கு இணையாக வேறு எந்தப் பரிசும் இல்லை. நோபல் பரிசு பெறும் பரிசாளரை உலகமே மதித்துப் போற்றுகிறது. இந்த நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார்? அவரின் தனித்தன்மைகள் என்ன? நோபல் என்ற பெயர்வரக் காரணம் என்ன என்பன-வற்றைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.
நோபல் பரிசை நிறுவியவர் அறிவியல் அறிஞர் ஆல்ஃப்ரெட் நோபல் என்பவர் ஆவார். இவர் ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர். வேதியியல் கண்டு-பிடிப்புகளுக்காகவும் அவற்றின் அபிவிருத்திக்-காகவும் தன் வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்தவர். முதன் முதலில் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். இது, நோபலின் உடன்பிறந்த சகோதரனையே கொன்றது. இதனால், மேலும் சற்று உயர்ந்த ரக வெடி-மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, Dynamite யைக் கண்டுபிடித்தார். வெற்றியடைந்து பிரபலமானார். பெரும் பொருள் ஈட்டினார்.
ரஷ்யா என்றழைக்கப்-படும் சோவியத் நாட்டில் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனம் தொடங்கி அதிலும் அதிகமாகப் பணம் சம்பாதித்தார். திருமணம் செய்து கொள்ளாதவர். ஸ்வீடிஷ், ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்ச், ஜெர்மனி ஆகிய 5 மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
உலகில் சமாதானம் தழைத்தோங்கிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தவர். நாடுகள் தங்கள் பிரச்சினைகளை, பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்; உலக நாடுகள் அளவில் ஒரு சமாதானப்படையை வைத்திருக்க வேண்டும் என விரும்பியவர். அவர் வாழ்ந்த காலத்தில் அய்.நா.சபை கிடையாது. அன்றே அய்.நா.சபை போன்றதொரு அமைப்பு தேவை என்று கூறியவர்.
அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்த பணத்தினை, அவர்பெயரிலேயே “Nobel foundations” என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். 1896 இல் அவர் இயற்கை எய்திய போது அவர் சம்பாதித்திருந்த சொத்து 33 மில்லியன் சுவிஸ் பணமாகும். அமெரிக்க டாலர் மதிப்பில் 6 மில்லியன் டாலர்கள். சொத்தின் மதிப்பு இன்று 1.7பில்லியன் சுவிஸ் பணமாகும். அதாவது, 261 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் சொல்வதானால் தோராயமாக ரூ 1,096 கோடி. இந்த வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டித் தொகையை, ஆண்டுதோறும் இலக்கியம், வேதியியல், இயற்பியல், மருத்துவம் அல்லது மருந்து, சமாதானம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து, நோபல் மரணமடைந்த டிசம்பர் 10 இல், 1901 முதல் வழங்கி வருகிறது இந்த அறக்கட்டளைக் குழு.
1987வரை 3 லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 99 லட்சம் ரூபாய் கொடுக்கப்-பட்டு வந்தது. 1992 இல் இருந்து 12 மில்லியன் டாலர், அதாவது 3 கோடியே 60 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகக் கொடுக்கப்பட்டது. தற்போது 6வு கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு மதிப்பு வாய்ந்த பரி-சுத் தொகை வேறு எந்த நாட்டிலும் இல்லை. எனவே, உலகிலேயே தலைசிறந்த பரிசாக - பெருமைக்குரிய பரிசாகப் போற்றப்படும் தனிச்சிறப்பு நோபல் பரிசுக்கு மட்டுமே உள்ளது!
2010 இல் நோபல் பரிசு பெற்றவர்கள்
- சோதனைக் குழாய் முறையில் செயற் கையாகக் கருவுறும் முறையைக் கண்டறிந்த பிரிட்டன் மருத்துவர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு இந்த ஆண்டின் மருத்து வத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
- வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் ஹெக், ஜப்பானிய விஞ்ஞானிகள் எய்இச்சி நெஜிஷி, அகிரா சுசூகி ஆகியோருக்கும், இயற்பியல் சம்பந்தப் பட்ட கண்டு பிடிப்புக்கான நோபல் பரிசு இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக இயற்பியல் துறை ஆண்ட்ரீ கெய்ம், கான்ஸ்டான்டின் நொவோ செலேவ் ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெரு நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் மரியோ வர்காஸ் லோசாவும், அமைதிக் கான நோபல் பரிசினை சீன அரசு எதிர்ப்பாளரும் ஆட்சியைக் கவிழ்க்க போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவருமான லியூ ஷியோபோவும் பெறுகிறார்கள்.
- சமாதானத்திற்கான நோபல் பரிசு கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் என்பவருக்குக் கிடைத்துள்ளது.