• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்

2011_september_5-2
செப்டம்பர்

அனஸ்தீசியா

– மேகா

நம் கவனக்குறைவால் இடித்துக்கொண்டு உடம்பில் சிறு காயம் ஏற்பட்டாலே நம்மால் வலியைத் தாங்க முடிவதில்லை. பெரிய அளவில் அடிபட்டு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும்போதோ அல்லது நமது உடம்பில் தோன்றும் கட்டிகள் அல்லது வேறு சில நோய்களைக் குணப்படுத்த நடைபெறும் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் வலியை எப்படித் தாங்கிக் கொள்கிறோம்?

மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யும்போது நோயாளியின் உடம்பில் வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கொடுப்பர். மயக்க ஊசி போடுவதை அனஸ்தீசியா என்று கூறுவர். மயக்க ஊசி போட்டதும் குறிப்பிட்ட இடம் மரத்துப் போய்விடும். இந்த மயக்க மருந்தினைக் கண்டுபிடித்தவர் சர். ஹம்ப்ரி டேவி என்பவராவார்.

இங்கிலாந்தில் இயற்கை எழில் கொஞ்சும் பென்சான்சு நகரில் 1778ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்தவர் டேவி. 16 வயதில் தந்தையை இழந்த டேவி, பசியினாலும் வறுமையினாலும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேடினார். ஒரு மருத்துவரின் உதவியாளரானார். மருத்துவரிடம் தனக்கென்று தனி அறை ஒன்றினைக் கொடுக்கச் சொல்லி ரசாயன சோதனைகளைச் செய்து பார்த்தார்.

புகழ்பெற்ற ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணி கேட்டு, தமது 22ஆம் வயதில் கடிதம் எழுதினார். அப்போது அங்கிருந்த லார்டு ராம்போர்டு என்பவர் உடனடியாக வரச்சொன்னார். டேவியை நேரில் பார்த்ததும், உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது; வயதிலும் மிகவும் சிறியவனாக இருக்கிறாய் என்றார் லார்டு ராம்போர்டு.

தயவுசெய்து என் சொற்பொழிவினைக் கேட்டுவிட்டு, பின்பு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினார். சரி என்று அனுமதி கொடுத்தார் லார்டு ராம்போர்டு. டேவியின் பேச்சினைக் கேட்டுவிட்டுப் புகழ்ந்தார். ரசாயனப் பேராசிரியராக வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், பேச்சாற்றலாலும் அறிவியல் கருத்துகளை விதைத்தார் டேவி.

அறுவைச் சிசிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அனுபவிக்கும் துன்பத்தினைக் கண்ட டேவி, வலி தெரியாமலிருக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். கடுமையாக உழைத்தார். வாயு ஒன்றினை வைத்து மட்டுமே வலியினை மரத்துப் போகச் செய்யும் தன்மையினைக் காணமுடியும் என யூகித்தார்.

பல வாயுக்களை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தார். எந்த வாயுவினால் பயன் கிடைக்கும் என்று ஆராய்ந்தார். யாரை வைத்துச் சோதனை செய்வது என்று குழம்பினார். உடன் பணிபுரியும் மருத்துவர்கள், உயிருடன் விளையாடும் இச்செயல் வேண்டாம் என எச்சரித்தனர்.

எனவே, பல உயிர்களைக் காப்பதற்காக தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து நைட்ரஸ் ஆக்சைடு வாயுவைத் தொடர்ந்து நுகர்ந்து கொண்டே இருந்தார். தலைசுற்றல் ஏற்பட்டு உடம்பு மெதுவாக ஆடத் தொடங்கியது. பின்பு மயக்கமடைந்தார்.

சிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பியுள்ளது. இவ்வாறு, பலமுறை நுகர்ந்து பரிசோதித்துப் பார்த்தார். பிறகு, சக மருத்துவர்களிடமும் விஞ்ஞானிகளிடமும் சோதனை செய்து விளக்கிக் காட்டினார். பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தன.

மேலும், குளோரினுக்கு வெளுக்கும் சக்தி இருப்பதற்கான விளக்கமளித்தார். கார்பன் எனப்படும் கரியின் வடிவமே வைரம் என்று சுட்டிக் காட்டினார். டேவியின் புகழ் உலகமெங்கும் பரவியது. இத்தாலியிலிருந்து இவரது பெயரை மட்டும் எழுதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் டேவியின் கைகளில் கிடைத்தது என்றால் அவரது உலகப் புகழினை அறிந்து கொள்ளலாம்.

உருகிய எரிசோடாவின் மூலம் மின்சாரத்தைச் செலுத்தி அதிலிருந்து சோடியம் என்னும் உலோகத்தைப் பிரித்தெடுத்தார். பொட்டாசியம் கண்டார். ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினார். எனவே, மின்சார ரசாயனத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவரது கடின உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்த ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

தற்போதுள்ள குளோராபார்ம், ஈதர் வாயுக்களை மயக்க மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு டேவிதான் வழிகாட்டி. டேவி மறைந்தாலும், நோயாளிக்கு அனஸ்தீசியா கொடுக்கும் மருத்துவர்கள் டேவியை நினைவுகூர்வர்.

13
குட்டிக்கதை6th September 2011
பெரியார் 133 தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 176th September 2011பெரியார் 133  தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17

மற்ற படைப்புகள்

2011_september_thirukuralputhir
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

திருக்குறள் புதிர்

Read More
2011_september_science-practical
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அறிவியல் சோதனை

Read More
2011_september_5-2
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்

Read More
2011_september_sethi
செப்டம்பர்
5th September 2011 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2011_september_3-6
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

அடங்கா ஆர்வம்

Read More
2011_september_kalan1
செப்டம்பர்
6th September 2011 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p