• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

ஜனவரி

அனுபவம் புதுமை

இந்தியாவின் பெரிய சுரங்கப்பாதை

இந்தியாவிலேயே மிகப்பெரிய 4 சக்கர வாகனங்கள் செல்லும் போக்குவரத்து சுரங்கப் பாதை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. இது ஜம்முவிலிருந்து சிறீநகர் செல்லும் முதன்மைச் சாலை எச்.என்.1இல் அமைந்துள் ளது. சுரங்கம் தன் முன்னால் பனிஹால் என்ற ஊரையும் தன் பின்னால் காசிகுண்ட் என்ற ஊரையும் கொண்டுள்ளது. சிறீநகர் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் கார்கில் பயணிகள் அனைவரும் இந்தச் சுரங்கத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதன் நீளம் 2,758 மீட்டர். இதனுள் 5 அவசர வெளியேறும் வழிகள் (Emergency Exit), 19 அவசர தொலைப்பேசிகள் உள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அகலப் பாதைகளும் உள்ளன. சுரங்கத்தின் மேல் இராணுவக் குடியிருப்பு முகாம்கள் (Army Camp Stayed) இருக்கின்றன. பொதுவாக, 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் சரியாக 15 நிமிடங்களில் சுரங்கத்தைக் கடந்துவிடலாம். சுரங்கத்தின் பெயர் ஜவகர் [JAWAHAR TUNNEL].

(சொந்த அனுபவம்) It’s my own experience.

பி.மணிமேகலை, இளநிலை மருந்தியல் முதலாம் ஆண்டு, பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி-21.


அறிந்து கொள்வோம்

மலை உருவாகும் விதம்

மலை என்பது அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள நிலப் பகுதியிலிருந்து உயர்ந்துள்ள ஒரு நிலமாகும். எரிமலை வெடிப்பினாலோ அல்லது அரிப்புச் செயல்களாலோ அல்லது புவியின் உட்புறம் தோற்றுவிக்கப்படும் நிலவியல் விசையினாலோ மலைகள் உருவாகின்றன.

க.கார்த்திகா, 8ஆம் வகுப்பு அ பிரிவு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை



கிழமைகளுக்குப் பெயர் வந்தது எப்படி?

ஒரு வாரத்திற்கு 7 நாள்கள் என்ற முறையை எகிப்தியர்கள் பின்பற்றினர். நாள்களுக்கு 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர். ரோமானியர்கள் எகிப்தியர்கள் வைத்த பெயர்களைப் பின்பற்றினர்.

சூரியனின் பெயர் ஞாயிறு எனப்பட்டது. சந்திரனின் பெயர் திங்கள் என்றாயிற்று. மார்ஸ் அல்லது டியூ ரோமானியர்களின் போர்த் தெய்வமாகும். அந்தப் பெயர் செவ்வாய் எனப்பட்டது. மெர்குரி என்பதற்குப் பதிலாக மற்றோர் தெய்வத்தின் பெயர் (ஓடன்) புதன் என்றாயிற்று.

தர் என்பது ரோமானியர்களின் இடித் தெய்வப் பெயர். இது தர்ஸ்டே – வியாழன் ஆனது. பரீக் என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவியின் பெயர். அது ஃபிரைடே – வெள்ளி எனப்பட்டது. சனிக் கிரகப் பெயர் சனி என்று பெயரிடப்பட்டது.

சூரியன் உதயமான நேரத்திற்கும் மறையும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள்ளிரவு முதல் அடுத்த நள்ளிரவு வரையுள்ள காலத்தை ஒரு நாளாகக் கொண்டனர் ரோமானியர்கள். அந்த முறையைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்றன.

கு.மீனா, விளாத்திகுளம்

19
அன்றைய தமிழர் விளையாட்டுக்கள்அன்றைய தமிழர் விளையாட்டுக்கள்30th December 2011
பிஞ்சு சொன்ன கதை30th December 2011பிஞ்சு சொன்ன கதை

மற்ற படைப்புகள்

2012_january_pinju-jan-2012-29
ஜனவரி
1st January 2012 by ஆசிரியர்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read More
2012_january_pinju-jan-2012-12
ஜனவரி
1st January 2012 by ஆசிரியர்

திராவிடக் கணக்கு ஆரியக்கணக்கு

Read More
ஜனவரி
30th December 2011 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2012_january_pinju-jan-2012-32
ஜனவரி
1st January 2012 by ஆசிரியர்

ஜனவரியில்..

Read More
2012_january_ff
ஜனவரி
29th December 2011 by ஆசிரியர்

ஆகாயத்தில் பறக்கப் போறோம்

Read More
2012_january_pinju-jan-2012-22
ஜனவரி
30th December 2011 by ஆசிரியர்

அன்றைய தமிழர் விளையாட்டுக்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p