• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ‘சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

செ.நு. தொடர் – 7 : அல்காரிதம்

4
கட்டுரைஜனவரி 2024பிஞ்சு 2024

செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கணினி எப்படி இயங்குகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கணினி இயங்குவதற்கு அடிப்படையான தேவை மென்பொருட்கள். ஒரு மென்பொருள் என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிரல்களின் (Programs) தொகுப்பு.
கணினியைப் பொருத்தவரை அது என்ன செய்ய வேண்டும் எப்படி இயங்க வேண்டும் என்பதை ஏற்கனவே நாம் கட்டளைகளாக எழுதிச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரல் என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கட்டளைகள்.
இந்தக் கட்டளைகள் ஒரு சிக்கலுக்கான தீர்வாக இருக்கலாம். அப்படி ஒரு சிக்கலுக்கான தீர்வைப் படிப்படியாகச் சொல்லுவதைத் தான் அல்காரிதம் (Algorithm) என்கிறோம்.
நீங்கள் சமைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படிச் சமைக்க வேண்டும், எந்த வரிசையில் சமையல் பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்பதை ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாகச் சொல்லுவார்கள் அல்லவா… இதை ஓர் அல்காரிதம் எனப் புரிந்து கொள்ளலாம்.
அல்லது உங்களிடம் ஓர் இடத்திற்குச் செல்ல வழி கேட்கிறார்கள்; நீங்கள் வழியைச் சொல்லுவீர்கள் அல்லவா… அதை ஓர் அல்காரிதம் எனப் புரிந்து கொள்ளலாம்.

இப்படியாக ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்கு கணினி எப்படி இயங்க வேண்டும் என்பதை முதலில் ஓர் ‘அல்காரிதம்’ ஆக உருவாக்குவார்கள். பின்பு தங்களுக்கு எந்த விதமான கணினி மொழி வேண்டுமோ அதில் அந்த அல்காரிதத்திற்கான நிரலை உருவாக்கி விடுவார்கள்.
இந்த ‘அல்காரிதம்’ என்ற வார்த்தையின் பெயர்க் காரணம் கூட மிகவும் சுவாரசியமானது. உண்மையில் அல்காரிதம் என்பது ஒரு மனிதனின் பெயர். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு கணித நிபுணரான அல்-க்வாரிசிமி அவர்களின் பெயர் தான் இந்நாட்களில் அல்காரிதம் என மாறிவிட்டது. அல்-க்வாரிசிமி கணிதத்தில் கொடுக்கப்பட்ட சிக்கல்களை எல்லாம் படி முறைகளாக எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றி மிக விரிவாக எழுதியிருந்தார். அவரது புத்தகத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கும் போது அல் – க்வாரிசிமி என்பதை அல்-க்வரதமி என மாற்றி விட்டார்கள். பின் நாட்களில் படி முறைகளாக கணிதத்தைத் தீர்ப்பது அல்-க்வரதமி என்றாகி இறுதியில் அல்-காரிதம் என அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.

செயற்கை நுண்ணறிவுக் கணினியைப் பொருத்தவரை எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் அதைத் தீர்ப்பதற்கு அந்தக் கணினியே தனக்கான அல்காரிதங்களை உருவாக்க வேண்டும். ஆரம்பக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் ஒவ்வொரு சிக்கலையும் எடுத்து, அதற்கான ஓர் அடிப்படை அல்காரிதத்தை உருவாக்கி, அந்த அல்காரிதத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நிரல்களைத் தான் செயற்கை நுண்ணறிவு என அழைத்துக் கொண்டு இருந்தார்கள்.
நிச்சயம் ஒரு மனிதன் கொடுக்கும் தீர்வைச் செயற்கை நுண்ணறிவு என நாம் அழைக்க முடியாதுதானே?
உங்களிடம் நான் ஒரு கணிதத்தைக் கொடுக்கிறேன்; அதற்கு நீங்கள் தீர்வைக் கொடுத்தால்தான் நுண்ணறிவு. ஏற்கனவே ஒரு தீர்வை உங்களிடம் சொல்லிவிட்டு அதையே திரும்பச் சொல்லச் சொன்னால் அது எப்படி நுண்ணறிவாகும்?
ஆரம்பக் காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு என்பது முழுக்க முழுக்க கொடுக்கப்பட்ட தீர்வுகளின் அடிப்படையில் இருந்தது. பின் நாட்களில்தான் கணினிகள் ஒவ்வொரு பிரச்சனைக்குமான தீர்வை, தாமே உருவாக்கிக் கொள்வதற்கான திட்டம் ஒன்றை நிபுணர் மார்வின் மின்ஸ்கி உருவாக்கினார்.

26
வருக வருக புத்தாண்டே!வருக வருக புத்தாண்டே!1st January 2024
ஊருக்குப் போய் வந்த கரடி - 5 : டீச்சர்... கரடீ...!1st January 2024ஊருக்குப் போய் வந்த கரடி - 5 : டீச்சர்... கரடீ...!

மற்ற படைப்புகள்

2019_jul_a26
கட்டுரைஜூலை 2019
27th June 2019 by ஆசிரியர்

பயணம் – பாடம்

Read More
35
ஜனவரி 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்
2nd January 2024 by ஆசிரியர்

ஓவியம் வரையலாம், வாங்க!

Read More
31
ஜூலை 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்
16th July 2024 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
19
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 5: இரண்டாம் நோபல் பரிசு

Read More
12
கதைபிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? ஒரு குட்டிப் பேயும் நான்கு நண்பர்களும்

Read More
3
2024பாடல்கள்மே 2024
30th April 2024 by ஆ.ச.மாரியப்பன்

சூழல் காப்பு : மரம் வளர்ப்போம்! 

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p