• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! புத்தகம் வரைவோம்!

28
பிஞ்சு 2024பிப்ரவரி 2024வரைந்து பழகுவோம்

ஓவியம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் பெரியார் பிஞ்சு நண்பர்களே!
“சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்’’
என்பது பொன்மொழி.

நீங்கள் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ள படத்தை கவனமாகப் பார்த்து ஒரு முறைக்கு இரண்டு முறை வரைந்து பார்த்தால் எல்லோரும் ஓவியராகலாம்.
ஓவியக் கலையின் அடிப்படையே உற்று நோக்குதல், நினைவில் வைத்தல், பொறுமை காத்தல் ஆகியவையாகும்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லாத்துறையும் வளர்ந்துள்ளது போல் ஓவியத்துறையும் வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் செய்யுள் வடிவில் இருந்த இலக்கியங்கள், தற்போது உரைநடை முறையிலும், பிறகு புதுக்கவிதை வடிவிலும் இப்போது ஹைக்கூ வடிவிலும், மாறியுள்ளன. அதுபோல குகைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் இன்று கூகுள் வரை காட்சிப்படுத்தப்பட்டு வளர்ந்துள்ளன. இவ்வாறு சிறப்புப் பெற்ற ஓவியக் கலையில் இன்று நாம் வரையப் போகும் ஓவியம் புத்தகம்.

பெரியார் பிஞ்சுகளே! படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறியவர்களின் கருத்தைப் பாருங்கள்.
* படுக்கின்ற அறையைக் கூட படிப்பகத்தின் அருகாமையில் கேட்டவர் அண்ணல் அம்பேத்கர்.
* தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்வரை படித்துக்கொண்டே இருந்தவர் தோழர் பகத்சிங்.
* படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறுவை சிகிச்சையைக் கூட அடுத்த நாளைக்கு மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.
* தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துக்கொண்டே இருந்தவர் உமர் முக்தார்.
* இந்த உலகையே மாற்றக்கூடிய ஆயுதம் புத்தகம் என்றார் நெல்சன் மண்டேலா.
* நூலகத்திற்குப் போ! நீ எவ்வளவு முட்டாள் என்பதை புத்தகம் சொல்லும் என்றவர் ஜெயகாந்தன்.
* படிக்காமல் இருப்பதைவிட, மறக்காமல் இருப்பது மேல் என்றவர் பிளேட்டோ.
* படித்தால் மட்டுமே நீங்கள் அத்தனை பேரும் இந்தப் பாரை ஆளமுடியும் என்பதை படித்துப் படித்துக் கூறியவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.
* யாரெல்லாம் புத்தகத்தின் முன் தலைகுனிந்து படிக்கிறார்களோ அவர்களெல்லாம் நாளை தலைநிமிர்ந்து வாழ்வார்கள் என்று கூறியவர் லெனின்.
புத்தகங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா பிஞ்சுகளே!
பிக்காஸோவின் – ஓவியத்தைவிட,
பித்தோவானின் – செய்யுளைவிட, இசையைவிட,
ஆபிரகாம் லிங்கனின் – ஓர் உரையைவிட
புத்தகத்தின் மவுனம் இந்த உலகையே வெல்ல வழிகாட்டும் இத்தகைய பெருமை பெற்ற புத்தகத்தைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாங்க நாம் ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் புத்தகம் எவ்வாறு வரையலாம் என்று பார்ப்போம்.
இதற்குத் தேவையான எழுத்துக்கள் லி மற்றும் சி மட்டுமே.

23
க்ளாப்ஸ்க்ளாப்ஸ்7th February 2024
பரிசு வேண்டுமா?குறுக்கெழுத்துப் போட்டி7th February 2024

மற்ற படைப்புகள்

12
ஏப்ரல் 2024கதை
2nd April 2024 by விஷ்ணுபுரம் சரவணன்

நடந்த கதை – 7: புத்துயிர் தந்த பெரியார்

Read More
21
டிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by ஆசிரியர்

போட்டிக்கு வாரீங்களா…!

Read More
14
அக்டோபர் 2024கதைபிஞ்சு 2024
4th October 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? கடவுளும் குண்டூசியும்!

Read More
10
ஆகஸ்ட் 2024கதைபிஞ்சு 2024
5th August 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? மறுபடியும் புதிதாய்ப் பிறந்தேன்!

Read More
15
அக்டோபர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th October 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

கவிதை: அலைகள்

Read More
1
2024செப்டம்பர் 2024பாடல்கள்
2nd September 2024 by - ஆ.ச.மாரியப்பன்

சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p