• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

2012_april_periyarpinju-38
ஏப்ரல்

கண்ணின் அமைப்பு

கண் நமது முக்கியப் புலனுறுப்பு ஆகும். இரு கண்களும் மண்டையோட்டின் கண் குழிகளில் அமைந்துள்ளன. கண்கோளம் மூன்று அடுக்குகளால் ஆனது. அவை பின்வருமாறு:

வெளி அடுக்கு (ஸ்கிளிரா):

புறத்தே உள்ள விழிவெளிப் படலமானது கண்ணின் முன்பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் வெண்மை நிறமாகக் காணப்படுகிறது. இப்படலம் விழியின் முன் பகுதியில் ஒளியை ஊடுருவக்கூடிய விழிவெண் படலமாக மாறி காணப்படும்.

நடு அடுக்கு (விழியடிக் கரும்படலம்):

இதில் உள்ள இரத்தக் குழாய்களில் உள்ள இரத்தமானது செறிவுமிக்க அடர்ந்த நிறமிகளைக் கொண்டது. விழியடிக் கரும்படலமானது, விழியின் முன் பகுதியில் சிலியரி உறுப்பினையும், அய்ரிஸ் என்னும் ஒளிக் குறுக்கு அமைப்பினையும், விழிலென்ஸ்சயும் உருவாக்குகிறது. அய்ரிஸ்க்கு நடுவில் கண்பாவை என்ற துவாரம் உள்ளது.

மனிதனின் கண்களில் விழிலென்சு ஒன்று உள்ளது. பொருளின் பிம்பத்தை இந்த விழிலென்சு விழித்திரை மீது விழுமாறு செய்கிறது. விழித்திரை ஒளி உணர்வு நரம்புகளால் சூழப்பட்டுள்ளது. பார்வை நரம்புகள் மூலம் பிம்பத்தை மூளைக்கு எடுத்துச் செல்கிறது.

மனிதனின் கண் வெவ்வேறு பொருள்களின் வெவ்வேறு தொலைவிற்கு ஏற்ப விழிலென்சின் குவியத் தூரத்தை மாற்றி பிம்பத்தை விழச் செய்கிறது.

சீலியரித் தசைகள் சுருங்குவதாலும், விரிவதாலும் விழிலென்சின் குவியத் தூரம் மாற்றம் அடைகிறது. இச்செயலே கண்தக அமைதல் ஆகும்.

குறைபாடற்ற கண்பார்வை கொண்ட ஒருவருக்கு ஒரு பொருளைத் தெளிவாகக் காணக்கூடிய மிகக் குறைந்த அளவு 25 செ.மீ.  ஆகும். இது தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவு ஆகும். கண்ணால் தெளிவாகக் காணக்கூடிய குறைந்தபட்ச தொலைவு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடும்.

க.கார்த்திகா, எட்டாம் வகுப்பு, அருப்புக்கோட்டை

வெங்காயம்

  • நீரோ மன்னன் தனது குரல் வளத்துக்காக நாள்தோறும் பச்சை வெங்காயத்தை உண்டு வந்தான்.
  • பிஸினி என்னும் வரலாற்று ஆசிரியர் வெங்காயம் 27 நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுடையது என்கிறார்.
  • எகிப்தியர்கள் வெங்காயத்தையும், வெள்ளைப் பூண்டையும் தெய்வமாக வணங்கினர். இவற்றின் மீத ஆணையிட்டும் வந்தனர்.
  • ஜாவா, சுமத்ரா போன்ற தீவுகளில் வசிப்பவர் நோயாளிகள் படுத்து இருக்கும் அறைகளில் நச்சுக் கிருமிகளை அழிக்கும் பொருட்டு தினமும் வெங்காயத்தைப் போட்டு வைப்பார்கள்.

செ. ஜெய சிவா, 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

கை நாட்டு வந்தது எப்படி?

படிக்காதவர்கள் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைரேகையைப் பதிப்பாங்க. ஆனால், படித்தாலும்கூட, சில முக்கிய பத்திரங்களில் கைரேகையை பதிய வைக்கிறாங்க. இது ஏன் தெரியுமா? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக கைரேகை இருக்கிறது. அது ஒவ்வொரு விரலுக்கும்கூட மாறுபடுகிறது.

அது சரி, முதல்ல இந்தப் பழக்கம் எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லைன்னு கேட்கிறீர்களா? அவசரப்படாதீங்க, குட்டீஸ். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசர்கள் கைரேகைகளில் இத்தனை விஷயம் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.

ஸ்ரீ. சூரியநாராயணன், 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை.

அரிசிக்கு இத்தனை பெயர்கள்

அடிசில், அமலை, அமித்து, அயினி, அமி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொன்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.

ம. செந்தில்குமார், 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

யார் வயதானவர்?

அம்மா வயதானவரா?மகள் வயதானவரா? அம்மா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இமய மலையின் மகளான கங்கை நதி வயதில் மூத்தவள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆம், இமயமலை உருவாவதற்கு முன்னறே கங்கை நதி ஓடியிருக்கிறது.

ச. செந்தூரபாண்டி, 4ஆம் வகுப்பு ஈ பிரிவு, தூய மரியன்னை ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, மதுரை

19
குறுக்கெழுத்துப் புதிர்குறுக்கெழுத்துப் புதிர்10th April 2012
உலக நாடுகள் - சுவீடன் (Sweden)10th April 2012உலக நாடுகள் - சுவீடன் (Sweden)

மற்ற படைப்புகள்

2012_april_periyarpinju-2
ஏப்ரல்
6th April 2012 by ஆசிரியர்

பகுத்தறிவுடையோர் பகுத்தறிவாளரா?

Read More
2012_april_periyarpinju-52
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

ஏப்ரல் மாதத்தில்…

Read More
2012_april_periyarpinju-37
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் புதிர்

Read More
2012_april_periyarpinju-14
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

Famous Quotes

Read More
2012_april_periyarpinju-50
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

சின்னகதை

Read More
2012_april_periyarpinju-45
ஏப்ரல்
10th April 2012 by ஆசிரியர்

உயிரினம் அறிவோமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p