• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by சரவணா இராசேந்திரன்

வரலாறு அறிவோம் : காகித வரலாற்றுக்குள் ஒரு காலப் பயணம்

3
ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்

இன்றிலிருந்து 3000 ஆண்டுகளுக்குப் பின்னால் காலப் பயணம் சென்றால், தென் சீனாவின் மூங்கில் காட்டில் வாழ்ந்த பாண்டா கரடிகள் தின்று போட்ட சக்கைகள் காய்ந்த பிறகு அவை இன்று நாம் பயன்படுத்தும் அட்டைத் துண்டுகள் போல் காணப்படவே சீனர்கள் அவற்றைச் சேகரித்து வீட்டின் சுவர்களில் ஒட்டி அதில் எழுதத் தொடங்கியிருப்பதைக் காணலாம்.
அப்படி என்ன எழுதினார்கள்? அவர்கள் கிழக்கில் எந்த விண்மீன் தோன்றினால் மழை வரும், மேற்கில் எந்த விண்மீன் தோன்றினால் குளிர்காலம் துவங்கும், எப்போது விதைப்பது, எப்போது அறுவடைக் காலம், கால்நடைகளை மேய்ச்சலுக்கு எப்போது அழைத்துச் செல்லவேண்டும் என்பன போன்ற குறிப்புகளை எழுதத் துவங்கினர்.

ஆம், இதுவரை ஒவ்வொரு முறையும் விவசாயத்தில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் அறிவுரைகளைக் காதால்கேட்டு வாய்வழித் தொடர்பு மட்டுமே கொண்டிருந்த மக்கள், அவர்கள் கூறியதை அட்டையில் எழுதி வைக்கத் தொடங்கினர்.
அப்படி எழுதப்பட்ட ஒரு துண்டு அட்டையை ஆமை ஓட்டில் ஒட்டி, எந்தச் சிதிலமும் அடையாமல் சுமார் 3000 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்துள்ளார்கள் என்பது மிகவும் வியப்பான ஒன்று.
பாண்டாக்கள் சவைத்துப்போட்ட மூங்கில் சக்கையிலிருந்து அட்டை எடுக்கும் போது நாமே ஏன் அப்படிச் செய்யக்கூடாது என்ற சிந்தனையின் விளைவு தான் இன்று நாம் பயன்படுத்தும் காகிதம்.

முதன்முதலில் அட்டையில் சீனர்கள் எழுதத் துவங்கிய சில நூறு ஆண்டுகளிலேயே எருமைகள் பூட்டிய அரவைக் கருவிகளை இயக்கி மூங்கில் கூழ் உருவாக்கி அதனை அட்டைபோல் தட்டையாக்கிக் காய வைத்தனர்.
இப்போது பெரிய பெரிய காகிதங்கள் பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. காகிதத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்ட சீனர்கள், அவற்றை இன்று நாம் எழுதும் பல்வேறு வகையிலான குறிப்பேடுகளின் வடிவில் வெட்டி, தோல் மற்றும் அட்டைகளால் பைண்டிங் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சீனர்களின் அதிகமான காகிதப் பயன்பாடு விவசாயம், கணிதம், வானியல் மற்றும் மருத்துவம் தொடர்பாகத்தான் இருந்தது.
இதற்கு முக்கியக் காரணம் விளைபொருளைச் சந்தைப்படுத்தக் கணிதம் தேவைப்பட்டது, வானியல் விவசாயத்திற்குத் தேவையான கால நிலை மாற்றத்தைக் கணித்தது. இவை அனைத்தையும் செய்ய உடல் நலம் பேணுவதற்கு மருத்துவம் மனிதருக்கும் கால்நடைக்கும் தேவைப்பட்டது.
அவர்களின் அரிய கண்டுபிடிப்பான காகிதத்தை மூடநம்பிக்கைக் கதைக்கும், கடவுள் கதைகளுக்கும் தொடர்புபடுத்தவில்லை.

இந்த நிலையில் காகிதங்களின் பயன்பாடு சீனம் முழுவதும் பரவத் துவங்கியது. அங்கு பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு பார்க்காமல் காகிதம் அனைவரின் கைகளுக்கும் எளிதில் சென்றது.
இதன் விளைவாக வெகு விரைவாகவே தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான பொருளாகக் காகிதத்தைச் சீனர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
(தொடரும்)

8
கதை கேளு... கதை கேளு...நிகரிலா Loading...கதை கேளு... கதை கேளு...நிகரிலா Loading...5th June 2024
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை5th June 2024

மற்ற படைப்புகள்

17
அக்டோபர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
7th October 2023 by பி. இளங்கோ

ஓவியராகலாம் வாங்க! : கிளி

Read More
2021_jan_v11
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

விபத்தாய் கிடைத்த வெடிமருந்து!

Read More
2020_jun_v16
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

கொக்கு மீனைத் திங்குமா? அதுக்கு வழி கிடைக்குமா?

Read More
17
பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2024
5th March 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம் : பள்ளி பிள்ளைகள் மூலம் அரசியல் பிரச்சாரம்! எச்சரிக்கை

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
2022_april_20
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd April 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p