• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 5 : பனங்காடை

17
சூழலியல்ஜூலை 2024பிஞ்சு 2024

பரிணாம வளர்ச்சியில் எண்ணற்ற உயிரினர்கள் அழகாலும், திறமையாலும் நம்மை வியப்புக்கு ஆளாக்குகின்றன. அந்த வகையில் பலவகையான நீலவண்ணங்களைத் தன்னுள் கொண்ட பறவைதான் பனங்காடை.
நீலநிறம் கொண்ட பனங்காடை தன் சிறகை விரித்துப் பறக்கும் போது வானில் சிறு வர்ணஜாலமே நடக்கும் அளவிற்கு அழகானது. பனங்காடை இந்தியாவில் மட்டுமல்லாது ஈரான், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் பிகார், ஒடிசா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் மாநிலப் பறவையாக இருப்பது இதன் சிறப்பாகும். இவை திறந்த புல்வெளிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் வாழ்கின்றன. நமது கிராமங்களில் சாலையோர மரங்களிலும், மின்கம்பிகளிலும் கூட அமர்ந்திருப்பதை நம்மால் காணமுடியும்.
இப்பறவை 30 – 40 செ.மீ நீளமும் சுமார் 166 கிராம் முதல் 176 கிராம் வரை எடையும் கொண்டவை.
பனங்காடை ஆங்கிலத்தில் ‘இண்டியன் ரோவர்’ என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இப்பறவை மொட்டைப் பனைமரத்தில் துளையிட்டு வசிப்பிடமாகக் கொண்டு வாழ்வதால் பனங்காடை என்று அழைக்கப்படுகிறது. இவை வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் சிறு சிறு பூச்சிகளையும், தவளைகளையும், எலிகளையும் உணவாக உட்கொள்வதன் மூலம் பயிர்களைப் பாதுகாக்கின்றன. இதனால் பனங்காடையை விவசாயிகளின் நண்பன் என்று கூறுகிறார்கள். பொதுவாக தனியாகவே காணப்படும் இப்பறவை, சில சமயங்களில் இணைப் பறவையோடு சேர்ந்திருக்கும்.

மார்ச் முதல் ஜூன் வரையிலான காலம் இவற்றின் இனப்பெருக்கக் காலமாகும். இக்காலத்தில் தனக்கான இணையை ஈர்ப்பதற்காக ஆண் பறவைகள் வானத்தின் மேலே உயர, உயரப் பறந்து மேலிருந்து கீழ்நோக்கிக் குட்டிக்கர்ணம் அடித்துக்கொண்டே கீழே வந்து மீண்டும் மேல் நோக்கிப் பறக்கின்றன. இப்படியாக எந்த ஓர் ஆண் பறவை அதிக எண்ணிக்கையில் குட்டிக்கர்ணம் அடிக்கிறதோ அந்த ஆண் பறவையோடுதான் பெண் பறவை இணைசேரும். இனப்பெருக்கக் காலத்தில் பட்டுப் போன பனைமரப் பொந்துகளிலும், பாறையிடுக்குகளிலும் கூடுகட்டும். சுமார் 3 முதல் 5 முட்டைகள் வரை இட்டு அவற்றை 17 முதல் 19 நாட்கள் வரை அடைகாத்துக் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. அவை சுமார் 30 – 35 நாட்களில் வளர்ந்து விடுகின்றன.

முன்பு மேலைநாட்டுச் சீமாட்டிகள் உடையலங்காரத்திற்குப் பனங்காடையின் இறகுகளைப் பயன்படுத்தியதும், அதற்காக இவை வேட்டையாடப்பட்டு இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதும், அக்காலத்தில் இப்பறவை இனம் குறைவதற்கு காரணமாக அமைந்திருந்தது இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் பல்வேறு காரணங்களின் மூலம் பறவை இனத்தை அழித்துக்கொண்டே வருவதனை நாம் காணலாம். பறவை இனம் முற்றிலும் இல்லாமல் போகுமாயின், அது மனித இனத்தின் அழிவுப் பாதைக்கான அறிகுறியாகும்.
மனித இனத்தைத் தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பறவைகள் நமது சுற்றுச்சூழலுக்கும் மற்றும் அதன் சமநிலைக்கும் இன்றியமையாதவை. எனவே, பறவை இனத்தைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும். பனங்காடை போன்ற அழகான பறவைகளும் அதில் தானே அடக்கம்.
பறவைகளைக் காப்போம்!
பசுமையை மீட்போம்!

18
குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்16th July 2024
வண்ணம் தீட்டி மகிழுவோம்16th July 2024

மற்ற படைப்புகள்

7
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
30th April 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 15

Read More
15
பாடல்கள்பிஞ்சு 2024மே 2023
29th April 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறுவர் கதைப் பாடல்

Read More
19
அறிவியல்டிசம்பர் 2024பிஞ்சு 2024
7th December 2024 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 5: இரண்டாம் நோபல் பரிசு

Read More
2023_mar_3
மார்ச் 2023மீள்வோம் மீட்போம்
1st March 2023 by ஆசிரியர்

மீள்வோம்! மீட்போம்!: நில நடுக்கம் ஏற்பட்டால் தப்புவது எப்படி?

Read More
28
பிஞ்சு 2024பிப்ரவரி 2024வரைந்து பழகுவோம்
7th February 2024 by பி. இளங்கோ

ஓவியம் வரையலாம், வாங்க! புத்தகம் வரைவோம்!

Read More
11
அக்டோபர் 2024அறிவியல்பிஞ்சு 2024
4th October 2024 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – 3: செயற்கை நுண்ணறிவு செயலிகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p