வாய்க்குள் கண் தவளைக்கு நடந்த மரபணு மர்மம்
| ம |
ிகச் சுவையான உணவைச் சாப்பிடும் போது கண்ணை மூடி ரசித்துச் சாப்பிடுவோம் இல்லையா?
தவளைகள் கூட உணவு உண்ணும்போது கண்களை மூடிக்கொள்கின்றனவாம், ஆனால் அது வேறு காரணத்திற்காக… உணவை விழுங்குவதற்காக! விழுங்கும் செயலுக்கு உதவ, தங்கள் கண்களை உள்நோக்கித் தள்ளுகின்றன. ஆனால், நான் பேச வந்தது, இதைவிட விநோதமான ஒன்றைப் பற்றி!
வாய்க்குள் கண்களுடன் ஒரு தவளை – ஓர் உண்மையான மரபணு மர்மம்.
1992 இல், ஹாமில்டன் ஸ்பெக்டேட்டர் பத்திரிகைக்காகப் பணிபுரிந்த புகைப்படக் கலைஞர் ஸ்காட் கார்ட்னர் ஒரு விநோதமான படத்தைப் பிடித்தார்.
கனடா நாட்டின் ஒன்டாரியோவின் பர்லிங்டன் கவுண்டியில் பணிபுரியும் போது, அவருக்கு ஒரு வித்தியாசமான ரேடியோ தகவல் கிடைத்தது: வாய்க்குள் கண்களைக் கொண்ட ஒரு தவளை கண்டுபிடிக்கப்பட்டது என்று!
முதலில், கார்ட்னர் அதை ஒரு வேடிக்கையான பொய் என்று நினைத்தார் – ஆனால் ஆர்வம் அவரை ஒரு வீட்டின் பின்புற முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் ஒரு அரிய பெரிய பிறழ்வு (macromutation) கொண்ட ஒரு தவளையைக் கண்டார்:
அதன் கண்கள், வழக்கமான இடத்தில் தலையின் மேல்புறம் இல்லாமல், கீழே வாய்க்குள் மேல் அன்னத்தில் இருந்தன.விலங்குகளின் அமைப்பைத் தீவிரமாக மாற்றும் பெரிய மரபணு மாற்றமான பிறழ்வு இது என்று நிபுணர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
ஆச்சரியமாக, அதன் தோற்றம் விசித்திரமாக இருந்தபோதிலும், அந்தத் தவளை ஒப்பீட்டளவில் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தது. இருப்பினும் அதன் அசாதாரண உடற்கூறியல் காரணமாக அது எப்போதும் வாயைத் திறந்தே வைத்திருக்க வேண்டியிருந்தது.
இதுபோன்ற அசாதாரணங்கள் அரிதானவை, ஆனால் கேள்விப்படாதவை அல்ல!
இருந்தாலும் வாயைத் திறந்து வைத்துக் கொண்டே இருப்பதெல்லாம் கடினம் தானே! <
