கோடை விடுமுறையில் எனது ஆசை
கோடை விடுமுறைக் காலத்தில் எனக்கு குறிப்பாக மூன்று செயல்களை உறுதியாகச் செய்ய வேண்டும். முதலாவது, வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் நமது பாரம்பரிய உணவுகள் கம்பு, கேழ்வரகு போன்றவை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கும். அதைக் கூழாகக் கரைத்துச் சின்ன வெங்காயம், மோர் மிளகாயோடு உண்டு மகிழ வேண்டும். இரண்டாவது, தாத்தா – பாட்டி வீட்டிற்குச் சென்று அவர்களோடு மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாட வேண்டும்.
மூன்றாவது, பெரியாரின் செயல்கள் அனைத்தையும் தேடி, அவரின் கொள்கைகளை ஆராய வேண்டும்.
இது மூன்றும் தான் என் கோடை விடுமுறையில், நான் செய்ய விரும்புவது!
– சு.அ.யாழினி,
திருச்சி.