ஆலமரம்
ஆலமரம் ஆலமரம்
ஆயிரங்கை கொண்ட மரம்
காலத்தை வென்றமரம்
கல்வெட்டாய் நின்றமரம்!
படை கொண்ட மன்னவர்க்கும்
பரந்த நிழல் தந்தமரம்
நடைகொண்ட ஆண்டிக்கும்
நல்லநிழல் தந்தமரம்!
சந்நியாசி போலிருக்கும்
சடைமுடியாய் விழுதிருக்கும்
சந்ததிக்கே பெருவாழ்வு
தந்திருக்கும் ஆலமரம்!
மந்திகளின் தாயாகி
மடிமீது விளையாட
அந்திப் பகல் குடியமர்த்தும்
அற்புதமே ஆலமரம்!
பவளம்போல் ஆலம்பழம்
பைங்கிளிக்கு விருந்தாகும்!
நிவந்திருக்கும் ஆலமரம்
நிழல்தரவே வளர்ந்தமரம்!
கோடை வெயில் தெரியாமல்
குளிர்ச்சிதரும் அடர்ந்தமரம்
காற்றுமழை வெள்ளத்தும்
கடும்புயலுக்கும் அசையாமரம்!
ஊர்நடுவே ஆலமரம்
ஊரார்க்கும் உதவிடுமே!
பார்முழுதும் பயன்தருமே
பரந்திருக்கும் நிழல் மரமே!!<
– ஆ.ச. மாரியப்பன்