மாடியில் மயில்
பத்தாம் மாடியில் என் வீடு
பலவும் பார்த்து மகிழ்கின்றேன்
ஆட்டுக் குட்டி வருகிறது
“அண்ணா” என்று சொல்கிறது
மயிலோ ஆடி வருகிறது
“மாமா” என்று அழைக்கிறது
சேவல் கூவி வருகிறது
சேதி ஒன்று சொல்கிறது
மாடி ஏறி இவைவருமா?
வருமே கணினி உண்டிங்கே!
விசையைத் தட்டி விட்டாலே
வேண்டும் எல்லாம் பார்த்திடலாம்!
இணையம் செய்யும் புதுமைகளால்
எத்தனை நன்மை பெறுகின்றோம்!<
– முனைவர் முரசு நெடுமாறன்