பச்சைக் கிளி(சிறார் பாடல்)

பச்சை வண்ணக் கிளியழகு
பவள மூக்குத் தனியழகு
கொச்சைத் தமிழில் பேசித்தான்
கொஞ்சும் பேச்சுப் பேரழகு!
சிறகை வெற்றிலைப் போல்விரித்து
சிட்டாய்ப் பறக்கும் பைங்கிளியோ
பறவை இனத்தில் பச்சைநிறம்
பட்டு மேனி மரகதமோ!
பாலும் பழமும் தந்திடுவார்
பவள மூக்கை ரசித்திடுவார்!
ஆல மரத்தில் வாழ்ந்திருக்கும்
அழகாய் வானில் சிறகடிக்கும்!
காட்டுக் கிளியைப் பிடிப்பதுமேன்?
கைதியைப் போல மனிதர்கள்
வீட்டுக் கூண்டில் அடைப்பதுமேன்?
விடுதலை பறவைக்கும் உரிமையன்றோ!!!<
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை


