• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அய்ன்ஸ்டினின் இறுதிக் காலம்

2012_august_33
ஆகஸ்ட்

– மேர்வின்

தன்னுடைய கண்டுபிடிப்பினால் பலர் பாதிக்கப்பட்டு விட்டார்களே என்ற வேதனை அவரை வாட்டி வதைத்தது. மிகுந்த கவலை யுடனும் ஆழ்ந்த யோசனையுடனும் இருந்தார்.

தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அணுவை நாச வேலைக்குப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.

அணுவை ஆக்கவேலைக்குப் பயன்படுத்தத் தூண்டுவதற்கு வழி என்ன என்பதைப் பற்றியே அவர் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.

நாசவேலைக்கு அணுசக்தியைப் பயன்படுத்து வதால் ஏற்படும் தீமைகளை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.

இதனைக் குறித்துதான் அவருடைய மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்து, இதற்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்பமட ஆரம்பித்தார்.

விஞ்ஞானப் படிப்புப் படிக்க வந்த மாணவர்களிடமும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அவர்கள் தங்களுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

பல கல்லூரிகளில் விஞ்ஞானச் சிறப்பைப் பற்றி விளக்கினார். ஆனால் முன்புபோல் எல்லோருக்கும் அவர் பேசுவது பற்றித் தெரிவிக் கவில்லை. ரகசியமாகவே அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்து வந்த சொற்பொழிவினால் அவருடைய உடல் தளர்ந்துகொண்டே வந்தது. 1955ஆம் ஆண்டு அவர் எழுபத்தாறாவது வயதை அடைந்திருந்தார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வெளியே செல்லும்போது எல்லாம் கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டுதான் செல்வார். நாட்கள் செல்லச் செல்ல அவர் மிகவும் பலவீனமடைந்தார்.

அவருடைய மருத்துவர் மிகவும் கவலைப்பட்டார். வீட்டில் இருந்து கவனிப்பதை விட மருத்துவமனையில் நன்றாகக் கவனிக்க முடியும் என்று மருத்துவர் கருதினார்.

அதனால் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் சேர்ந்தார். மிகவும் அக்கறையுடன் அய்ன்ஸ்டி னைக் கவனித்து வந்தார் மருத்துவர்.

மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் அன்பாகப் பேசினார். மருத்துவமனையில் உள்ளவர்களுக்குத்தான் அதிகக் கஷ்டம் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நள்ளிரவில் அய்ன்ஸ்டினுக்கு அருகில் நர்ஸ் நின்றுகொண்டி ருந்தார். அப்பொழுது அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் கஷ்டப்படுவது அவளுக்குத் தெரிந்தது.

உடனே மருத்துவரை அழைத்து வருவதற்காக வெளியே சென்றாள். அப்பொழுது அய்ன்ஸ்டின் ஜெர்மன் மொழியில் ஏதோ கூறுவது அவளுடைய காதில் கேட்டது.

அவருடைய படுக்கைக்கு ஓடினாள். அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

உலக மக்களில் அதிகமான பேர் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.

உலகின் விஞ்ஞான மேதையாக இருந்த அய்ன்ஸ்டின் உயிர் பிரிந்துவிட்டது.

அய்ன்ஸ்டினுடைய வாழ்நாளில் அவர் எந்த இடத்தில் எது சொல்லி இருந்தாலும் அது மிகவும் மதிக்கப்பட்டது. போற்றப்பட்டது.

ஆனால் கடைசியாக அவர் சொன்ன சொல் நர்ஸுக்குப் புரியாதபடியினால் என்ன சொன்னார் என்பது புரியாமலே போய்விட்டது.

அணுவின் தந்தையாகப் போற்றப்பட்ட அய்ன்ஸ்டின் அகிலத்தாருக்கு இறுதியாக ஒன்றும் கூறாமலே சென்றுவிட்டார்.

17
ஆகஸ்ட் மாதத்தில்....ஆகஸ்ட் மாதத்தில்....7th August 2012
துகளிலும் இல்லாத கடவுள்7th August 2012துகளிலும் இல்லாத கடவுள்

மற்ற படைப்புகள்

2012_august_3
ஆகஸ்ட்
8th August 2012 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2012_august_4
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

நினைவு நிலைக்க – மறக்காமலிருக்க

Read More
2012_august_19-1
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

விண்ணில்…

Read More
2012_august_27-1
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

சூழல் காப்போம்-4

Read More
2012_august_22
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

சைவமா? அசைவமா?

Read More
2012_august_18-1
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

மண்ணில்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p