• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கூடைப் பந்தாட்டம்(Basketball)

2013_aug_59
ஆகஸ்ட்

பந்தினை எறிவது, தட்டுவது, வேறு திசைப் பக்கம் தட்டிப் பறித்துக் கொண்டு ஓடுவது, இரும்பு  வளையத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெள்ளை நூல்களால் பின்னப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் வலைகளுக்குள் போடுவது போன்ற சிறப்புகளைக் கொண்டது கூடைப் பந்தாட்டம் .

அய்க்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதனுள் பந்தைப் போட முயன்று 1891இல் விளையாடியதே கூடைப்பந்து விளையாட்டு தோன்றக் காரணமாக அமைந்தது. ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு மிக வேகமாக சில வினாடிகளுக்குள் சென்று திரும்பும் இந்த விளையாட்டு சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது.

எதிர் அணியினரின் கூடைக்குள் பந்தை எறிவதும், தம் பகுதியில் உள்ள கூடைக்குள் பந்தினை எதிர் அணியினர் எறிய விடாமல் தடுப்பதுமே இந்த விளையாட்டின் குறிக்கோளாகும். 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களிலும் சேர்த்து 10 பேர் விளையாடுவர். மாற்று ஆட்டக்காரர்களாக 5 பேர் இருப்பர்.

ஆட்ட நேரம்

50 நிமிடங்கள் கொண்ட இந்த விளையாட்டில், 20 நிமிடம் ஒரு அணியினர் விளையாடுவர். 10 நிமிட இடைவேளை. பின்பு 20 நிமிடங்கள் இன்னொரு அணியினர் விளையாடுவர்.

ஆடுகளம்

பந்தைக் கையினால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும்போது பந்து எழும்புவதற்கேற்ற கடினமான, சமமான 28 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்துடன் கூடிய தரை தேவை. களத்தின் இரு முனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் கூடை போன்ற அமைப்புடைய 45 செ.மீட்டர் விட்டமுள்ள இரும்பு வளையமும் அந்த வளையத்திலிருந்து வட்டமாகத் தொங்கும் அடிப்பாகம் திறந்த கயிற்று வலையும் இருக்க வேண்டும்.

விதிமுறைகள்

எதிரணியின் பகுதிக்கும், அவர்களது தடையில்லா எறிதல் (Free throw line) கோட்டிற்கும் இடையே 3 வினாடிகளுக்கு மேல் வீரர்கள் நிற்கக் கூடாது. எந்த வீரரின் கையிலும் 5 வினாடிகளுக்கு மேல் பந்து இருக்கக் கூடாது. தங்கள் பகுதியில் பந்து கையில் கிடைத்தால் 10 வினாடிகளுக்குள் அவர்கள் முன்பகுதிக்குப் பந்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

புள்ளிகள்

பந்தை எதிரணியின் கூடையில் எறிந்து விழ வைக்கும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். கூடைக்கு முன்பு தரையில் வரைந்துள்ள அரை வட்டத்திற்கு வெளியே இருந்தவாறே பந்து எறியப்பட்டு கூடையில் விழுந்தால் 3 புள்ளிகள் கொடுக்கப்படும். அரை வட்டத்திற்கு உட்பக்கத்தில் ஒரு வட்டம் வரையப்பட்டு நடுவில் தடையில்லா எறிதலுக்காக கோடு போடப்பட்டிருக்கும். தங்கள் கூடையில் பந்து விழாமல் தடுக்கும்போது தப்பாட்டம் (Foul Play) ஆடினால் எதிரணியினர் இந்தக் கோட்டில் நின்று தடையின்றிக் கூடையை நோக்கிப் பந்தைப் போட வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது 1 புள்ளி கிடைக்கும்.

26
அறிவுச் சுட்டியின் அதிரடிஅறிவுச் சுட்டியின் அதிரடி25th July 2013
முறையாகப் பல் துலக்குவது எப்படி?1st August 2013முறையாகப் பல் துலக்குவது எப்படி?

மற்ற படைப்புகள்

2013_aug_8
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

அன்பு மடல் 7

Read More
2013_aug_9
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை: புதுப்படம் வரை!

Read More
2013_aug_59
ஆகஸ்ட்
1st August 2013 by ஆசிரியர்

கூடைப் பந்தாட்டம்(Basketball)

Read More
2013_aug_2
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

விடைகள்

Read More
2013_aug_4
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

ஜாதியைச் சாய்ப்போம்

Read More
2013_aug_24
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

கட்.. கடா.. கட்.. தந்தியின் கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • மூளையிலிருந்து நேரடியாக
    18th November 2025
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p