• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தெரியுமா?

2014_jan_2
ஜனவரி

கணினி நிரலிகளைக் கண்டுபிடித்த பெண்

ஆடா லவ்லேஸ்

கணினியைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், கணினி (Computer Programming) நிரலிகளைக் கண்டுபிடித்தவரைத் தெரியுமா? இன்று கணினியுலகில் ஏராளமான பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கணினி நிரலிகளைக் கண்டுபிடித்தவரும் ஒரு பெண்தான்.

அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்காக… 2009ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 15ஆம் தேதி ஆடா லவ்லேஸ் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பத்தில் பெண்கள் செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மறைக்கப்பட்ட உண்மைகளைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் தினம்தான் ஆடா லல்லேஸ் தினம் எனப்படுகிறது.

கணினியில் முதல் நிரலியை (Program) எழுதி 150 ஆண்டுகளுக்குமுன் சாதித்தவரே ஆடா லல்லேஸ்(Ada Lovelace). கணினியைக் கண்டுபிடித்த சார்லஸ் பாப்பேஜ், பணக்காரர்கள் கலந்து கொண்ட விருந்தில் ஒரு பெரிய பெட்டியினை டெமோ காண்பித்தார்.

அந்த விருந்தில் கலந்துகொண்டு பார்த்த ஆடாவுக்கு, அவர் தான் படித்த கணிதமும் தர்க்கமும் ஆர்வத்தைத் தூண்ட பாப்பேஜோடு நட்புக் கொண்டார். பாப்பேஜ் கண்டுபிடித்த அனலிடிக்கல் என்ஜின் உருவாக்கியதில் பெரும் பங்காற்றியுள்ளார் ஆடா.

1842ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அனலிடிக்கல் என்ஜின் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ஆடா. அனலிடிக்கல் என்ஜின் இயங்கும் விதம், அல்ஜீப்ராவின் சூத்திரங்களை அதனுள் பயன்படுத்தும் முறை, கணிதம் மட்டுமன்றி, செயல்பாடுகளை உருவாக்குவது பற்றியும் அடுத்தடுத்த விளக்கங்களைத் தெளிவான முறையில் எழுதி 1843ஆம் ஆண்டு வெளியிட்டார்.

சார்லஸ் பாப்பேஜ் சிந்திக்காத பல விளக்கங்களைத் தொகுத்துக் கொடுத்திருந்தார் ஆடா. பெர்னோலி எண்கள் என்னும் கணித சூத்திரத்தை பாப்பேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் என்ஜின் மூலம் எப்படிச் செய்வது என்பதை எழுதிக்காட்டியதே உலகின் முதல் கணினி நிரலி (Computer program) ஆகும்.

இந்தச் சாதனையை ஆடா தனது 28ஆவது வயதில் செய்துள்ளார். 1815 டிசம்பர் 10 அன்று பிறந்த ஆடா, நவம்பர் 27 1852இல் தனது 36 வயதிலேயே மறைந்துவிட்டார்.


நல்லாத்தான்யா யோசிக்கிறாங்க

 

குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது நம்ம பாட்டிமார்களும், அம்மாமார்களும் படாத பாடுபடுவார்கள். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று மூச்சு முட்டிவிடக்கூடாது என்று தலையில் ஒரு கையை வைத்து குடை போல மறைத்துக் கொள்வார்கள்.

காலம் காலமாக இப்படித்தான் நம் குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறோம். ஆனால், இந்தக் குழந்தைக்கு ஒரு குடையைத் தலையில் சொருகி அழவிடாமல் செய்துவிட்டார்களே… (ஆனா… நம்ம பயபுள்ளைக தலையில தொப்பியை மாட்டவிடாம அடம் பண்ணுவாங்களே?)

இப்போது சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் இந்தத் தொப்பி வந்துடுச்சாம்.

16
அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala)அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala)31st December 2013
டைட்டானியம் (Ti)31st December 2013டைட்டானியம் (Ti)

மற்ற படைப்புகள்

2014_jan_56
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

ENGLISH PAGE

Read More
2014_jan_14
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு எல்லாருக்கும் ஏற்ற கொய்யாப் பழம் சாப்பிடுங்க…! (Guava)

Read More
2014_jan_4
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

மேதைகளின் வாழ்வில்

Read More
2014_jan_25
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் -7

Read More
2014_jan_67
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

உலகப் புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2014_feb_1
ஜனவரி
31st January 2014 by ஆசிரியர்

குரங்கின் காற்றாடி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p