• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மணியம்மையார் பொன்மொழிகள்

2014_mar_37
மார்ச்

பாரதியாரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள்பற்று பற்றிய பாடல்களில் ஆரியப்பற்றே காணப்படுகிறது.

தமிழர்க்கு மானம் இருந்தால், தமிழ்நாடும், தமிழ்மொழியும் இழிநிலையையும், ஆரியர் ஆதிக்கம் உயர்நிலையையும் அடையுமா?

நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்து, மக்களுக்குப் பகுத்தறிவைப் போதித்து, பெரியாரின் கொள்கை பரப்பித் தொண்டு செய்வதே, நம் வாழ்நாள் லட்சியமாகும்.

நம்முடைய பொருளாதார இழிவும், நமக்கு நம் நாட்டு உரிமையற்ற தன்மையும் ஒழிந்து நாமெல்லோரும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது.

பெண்களே! அடுப்பூதும் அணங்குகளாக அடைபட்டுக் கிடக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக் கூடாது.

வீட்டிற்குள் சிறைப் பறவையாய் இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார்.

ஜாதி ஒழிய வேண்டுமென்றால், ஜாதியைக் காக்கும் அரசியல் சட்டப்பகுதி திருத்தப்பட வேண்டியது அவசியம்.

மேல் ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களில் தொழிலாளர்கள் எவரும் இல்லை. ஆனால், நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று _ தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே பெரிதும் இருந்து வருவது.

நாம் அணியும் கருஞ்சட்டை _ நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள், ஜாதியை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதோடு, பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும்!

பெண்கள் மூடநம்பிக்கை மீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும். தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகளையும் மூட நம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்.

ஜாதியற்ற சமுதாயம், மூட நம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர நமக்கு வேறு லட்சியம் இல்லை என்பது நமக்குத் துணிவும், தெளிவும் தரும் கொள்கைக் கவசங்கள்.

எதனையும் இலவசமாக சும்மா பெறுவதைவிட விலை கொடுத்துப் பெறுவது மதிப்பும், மரியாதையும் வாய்ந்தது.

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது.

14
உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்6th March 2014
உணவு: உடல் நலனுக்கே!18th March 2014உணவு: உடல் நலனுக்கே!

மற்ற படைப்புகள்

2014_mar_54
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 9

Read More
2014_mar_59
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More
2014_mar_38
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சாவித்திரி பாய்

Read More
2014_mar_23
மார்ச்
3rd March 2014 by ஆசிரியர்

இரட்டைத் திமில் ஒட்டகம்(Siberian Camel)

Read More
2014_mar_60
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சந்ததிக்கும் பங்கு வைப்போம்

Read More
2014_mar_41
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

புத்தகப் பிரியை ஃபெயித்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p