• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

2014_jul_29
ஜூலை

கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையில் பிரேசில் நாட்டின் எரீனா கோரிந்தியான் விளையாட்டரங்கில் ஜூன் 13 அன்று 20ஆவது உலகக் கால்பந்தாட்டப் போட்டி தொடங்கியது.

பிரேசில் நாட்டின் இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வோடு கலந்துள்ள கால்பந்து போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம் ஆகியன நடைபெற்றன.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடக்க விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் 300 கோடிப் பேர் ரசித்து மகிழ்ந்துள்ளனர். கால்பந்துப் போட்டிகளை நேரில் காண உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரேசிலில் குவிந்துள்ளனர்.

முதல் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி 1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1934, 1938ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946இல் கால்பந்துப் போட்டிகள் நடைபெறவில்லை. 1950ஆம் ஆண்டு முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் நடைபெற்று வருகிறது.

1930ஆம் ஆண்டு 13 அணிகள் பங்கேற்றுள்ளன. பின்னர் 16, 24 அணிகள் என உயர்ந்து 1998இல் 32 நாடுகள் பங்கேற்கும் போட்டியாக ஆகியுள்ளது. பல கட்டங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தி 32 அணிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

64 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பினைப் பிரேசில் பெற்றுள்ளது. இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி தன் சொந்த நாட்டில் வென்று கோப்பையைக் கைப்பற்றவில்லை.

உலகக் கோப்பைப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை 3,400 கோடி ரூபாயாகும். வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் அணிக்கு 207 கோடி ரூபாயும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு 148 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன.

ஜூலை 13 வரை நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை அனைவரும் உற்சாகமாக ரசித்து மகிழும் நிலையில், கால்பந்தாட்டத்திற்கு இவ்வளவு பெரிய தொகையினைச் செலவு செய்வதா என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

9
நீச்சல்நீச்சல்5th July 2014
குறையை அக்கறையுடன் பார்5th July 2014குறையை அக்கறையுடன் பார்

மற்ற படைப்புகள்

2014_jul_9
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

சாலை விதிகளைச் சற்றும் மீறோம்!

Read More
2014_jul_41
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் -13

Read More
2014_jul_20
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

தூய்மை… ஒழுங்கு… சிங்கப்பூர்!

Read More
2014_jul_54
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

கை நீட்டம்மா….. கை நீட்டு!

Read More
2014_jul_22
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நீச்சல்

Read More
2014_jul_35
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p