• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மண்ணு… சேறு… ஓவியம் பாரு!

2014_aug_19
ஆகஸ்ட்

– யுசுகே அசய்

வாட்டர் கலர், எம்போசிங், ஆயில் ஓவியம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்; வரைந்தும் பார்த்திருப்பீர்கள். மணலை வைத்து ஓவியம் வரைய முடியுமா? முடியும் என்று சாதித்துக் காட்டி, பார்த்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் பிறந்த யுசுகே அசய் என்னும் 33 வயது இளைஞர்.

பீகார் மாநிலத்தில் உள்ள சுஜாதா என்ற சிற்றூரில் ஏழைக் குழந்தைகள் படிக்கும் பொதுநலப் பள்ளி ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் சுவர் ஓவிய விழா நடைபெறுகிறது. கிராமத்தின் பல்வேறு தேவைகள், பிரச்சினைகளை நிறைவு செய்வதற்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவின்போது, இந்தியா மற்றும் ஜப்பானிலிருந்து ஓவியர்கள் வருகின்றனர்.

பள்ளியின் சுவர்களையே ஓவியம் வரையும் தாளாகப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைகின்றனர். அப்போது, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் உரிய பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இந்த ஓவிய விழாவில் பங்கேற்றவர்களுள்  யூசுகே அசயும் ஒருவர். இலை, குப்பை, மண், சேறு என கையில் கிடைக்கும் எந்தப் பொருளையும் வைத்து ஓவியம் தீட்டி விடும் அசய் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஓவிய விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு சேற்றை (mud) வைத்து எட்டுவிதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.

வகுப்பறை, மேற்கூரை என அனைத்துச் சுவர்களிலும் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். குழந்தைகளுடன் சேர்ந்து மண் சேகரித்து, அதைத் தண்ணீருடன் வெவ்வேறு அளவுகளில் கலந்து பல்வேறு நிறங்களைத் தயார் செய்துள்ளார்.

வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி போன்றது என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்த அசய் ஓவிய விழா முடிந்ததும் குழந்தைகளை அழைத்து, தன் முயற்சியில் உருவான ஓவியங்களை அழித்துள்ளார்.

9
வட்டு எறிதல்(Discus Throw)வட்டு எறிதல்(Discus Throw)1st August 2014
கடவுள்ட்ட லேப்டாப் இருக்கா?1st August 2014கடவுள்ட்ட லேப்டாப் இருக்கா?

மற்ற படைப்புகள்

2014_aug_36
ஆகஸ்ட்
1st August 2014 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2014_aug_24
ஆகஸ்ட்
1st August 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 14

Read More
2014_aug_38
ஆகஸ்ட்
1st August 2014 by ஆசிரியர்

மந்திரமா? தந்திரமா?

Read More
2014_aug_50
ஆகஸ்ட்
1st August 2014 by ஆசிரியர்

குயிலுக்குட்டி

Read More
2014_aug_47
ஆகஸ்ட்
1st August 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_aug_61
ஆகஸ்ட்
1st August 2014 by ஆசிரியர்

காட்மியம் Cd

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p