• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உணவைப் பாதுகாப்போம்!

2014_sep_5
செப்டம்பர்

உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள்  அய்க்கிய நாடுகள் மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு வீணாகும் உணவும் பூமிப்பந்தின் பாதுகாப்பும் என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டது. உணவைப் பாதுகாப்பீர், அதன் மூலம் பூமியைப் பாதுகாப்பீர், உணவை வீணாக்குவது உலகை வீணாக்குவதைப் போன்றதாகும் என்ற மய்யக் கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்களுக்காக நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியை அய்.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பும், ஜப்பானில் உள்ள உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பும் நிக்கான் நிறுவனமும் இணைந்து நடத்தின. மொத்தம் 63,700 ஓவியங்கள் வந்து சேர்ந்தன.

இவற்றுள் இலங்கையைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி கந்தகே கியாரா செனுவி பேரேரா வரைந்த ஓவியம் ஆசியா_பசிபிக் நாடுகளில் சிறந்த ஓவியமாகத் தேர்வு செய்யப்பட்டது. சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியுடன் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு பெரிய உண்டியலில் சேமிப்பதைப் போன்று பெரேரா வரைந்துள்ளார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே நாணயங்களை உண்டியலில் சேகரிக்கும் பழக்கம் உடைய பெரேரா, அந்தப் பழக்கத்தை அப்படியே காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை உணவு உண்டியலில் சேமிப்பதன் மூலம் இந்த உலகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை விளக்கும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், உலகச் சிறுவர்கள் அனைவரும் சிறு எறும்புகளைப் போல உணவைச் சேமித்தால் எதிர்காலத்தில் இந்த உலகத்தை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை இந்த ஓவியத்தின்மூலம் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் முதல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சமி ஆசிம் கானும், இரண்டாம் பரிசை ரோமானியாவைச் சேர்ந்த 10 வயது ஷ்ஆடா மரியா கியோன்டுவும் பெற்றுள்ளனர்.

16
காலியம் (Ga)காலியம் (Ga)1st September 2014
அண்ணாவின் ஆங்கிலப் புலமை1st September 2014அண்ணாவின் ஆங்கிலப் புலமை

மற்ற படைப்புகள்

2014_sep_14
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

திராட்சைப் பழம்

Read More
2014_sep_67
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

அநாதை

Read More
2014_sep_30
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

உலக நாடுகள் – பர்மா(Burma)

Read More
2014_sep_44
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

தள்ளிப் போட்டால் தள்ளப்படுவோம்!

Read More
2014_sep_57
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

கணக்கில் புலியா? நீங்களும் உலக சாதனையாளர்தான்!

Read More
2014_sep_17
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

வானத்துல குளிக்கலாமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p