• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கண்டுபிடிப்புகள்

2015_jan_14
ஜனவரி

மரத்துகளிலிருந்து பெட்ரோல்

பெட்ரோல், மின்சாரம், தண்ணீர் என எத்தனையோ மாற்றுத் தேவைகளை வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஈடு செய்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

புதுவிதமான எரிபொருளை உருவாக்குவதிலும் பல வழிகளில் எரிபொருளைப் பெறுவதிலும் பலவிதமன ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

பெட்ரோலியம் போன்ற எரிபொருள்கள் பூமிக்கு அடியில் புதைந்து மக்கி அழுகிய மரங்களில் இருந்துதானே கிடைக்கின்றன, எனவே மண்ணில் நேரடியாகக் கிடைக்கும் மரக் கழிவுகளைப் பெட்ரோலியப் பொருளாக மாற்ற முடியுமா என்ற அறிவியலாளர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மரத் துகள்களைப் பல்வேறு ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தி கச்சா எண்ணெய்ப் பொருளாக மாற்றும் வழியினை பெல்ஜியத்தைச் சேர்ந்த கே. யு. லியுவென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை ஓர் உயர் சுத்திகரிப்பு முறை என்று கூறலாம். மர ஆலைகளில் கிடைக்கும் மரத் துகள்களைச் சேகரித்து நாங்கள் உருவாக்கியுள்ள வேதிவினைக் காரணியுடன் சேர்க்கும்போது அவை மரத் தாதுவுடன் ஹைட்ரோகார்பன் சங்கிலி இணைப்பை (அல்கேன்கள்) உருவாக்கும். அல்கேன்கள் எனப்படும் வேதிவினைக் கலவையானது கச்சா எண்ணெய் போலவே இருக்கும்.

இதிலிருந்து பெட்ரோலியத்தைப் பிரித்தெடுப்பதுடன் எத்திலீன், புரப்பலீன் போன்ற ரசாயனப் பொருள்களையும் பெற முடியும். இவற்றைக் கொண்டு ரப்பர், நைலான், காப்பு நுரைகள், பிளாஸ்டிக் போன்றன தயாரிக்கலாம் என டாக்டர் பெர்ட் லாக்ரென் கூறியுள்ளார்.

மேலும் அவர் தாவரக் கழிவுகள், அறுவடையில் மிஞ்சிய பயிர்கள் என பிற இடங்களில் கிடைக்கும் மரத் துகள்களில் இருந்தும் பெட்ரோல் தயாரிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.


அவசர காலக் கதவை உடைக்கும் கருவி

பேருந்து, ரயில், மகிழுந்து, கப்பல், விமானம்… என எதில் பயணம் செய்தாலும், விபத்து என்பது எதிர்பாராமல் நடந்துவிடுகிறது. இவற்றுள், பேருந்தில் பயணம் செய்யும்போது ஏற்படும் ஆபத்துகளிலிருந்து அவசர கால வழி மூலம் தப்பிக்க உதவும் கருவியினை திருப்போரூர் எஸ்.எஸ்.என். கல்லூரி மாணவி ஸ்வேதா உருவாக்கியுள்ளார்.

பேருந்து விபத்துக்குள்ளானால் அதில் பொருத்தப்பட்டுள்ள ஆக்சிலரோ மீட்டர் என்ற சென்சார் அவசரகாலக் கதவை உடைக்க வழிவகுக்கும். பேருந்தில் நெருப்போ நச்சு வாயுவோ கசிந்தால், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மோக் சென்சார் அதனை உணர்ந்து கதவை உடைக்கும். மூன்றாவதாக, பேருந்து தண்ணீரில் விழுந்தால் லிக்விட் சென்சார் கதவை உடைக்கச் செய்யும்.

ஸ்வேதா கண்டுபிடித்துள்ள இந்தக் கருவியானது கண்ணாடிக் கதவை உடைக்கும்போது எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாதபடி வெளிப்புறம் நோக்கியே உடைக்கும். 1,200 ரூபாய் செலவில் பல உயிர்களைக் காப்பாற்றும் கருவியை இவர் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15
பூக்கள் - தெரியுமா?பூக்கள் - தெரியுமா?4th January 2015
செவ்வாய் கிரகத்தில் ஏரி4th January 2015செவ்வாய் கிரகத்தில் ஏரி

மற்ற படைப்புகள்

2015_jan_36
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

புத்துலகின் தொலைநோக்காளர் – 2

Read More
2015_jan_43
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 19

Read More
2015_jan_19
ஜனவரி
5th January 2015 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2015_jan_38
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்

Read More
2015_jan_31
ஜனவரி
5th January 2015 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2015_jan_21
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

மிதக்கும் நகரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p