• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நடுக்கடலில் ‘நச்’னு ஒரு வீடு!

2015_may_pinju29
மே

யாருமில்லாத தீவொன்று வேண்டும்… நடுக்கடலில் வீடு கட்டிக் குடியிருக்க வேண்டும் என்றெல்லாம் திரைப்படப் பாடல்களைக் கேட்டிருப்போம். அப்படியொரு தனிமை வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் வேறு செய்தி.

ஆனால், அப்படி ஒரு வீட்டை இன்றைய நவீன வசதிகளோடு உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கண்டிருக்கிறார் ஒருவர். அவர் மார்காட் கிரஸோஜவிக்.

கடலுக்கு நடுவில் மாபெரும் வீட்டினை எழுப்பும் திட்டத்தைச் சமர்ப்பித்து அதற்கு நீர்மின்சக்தி அலை வீடு என்ற பெயரினை வைத்துள்ளார் மார்காட் கிரஸோஜவிக் என்ற பெண் கட்டிடக் கலை நிபுணர்.

கடலின்மீது மிதந்தபடி வடிவமைக்கப்-பட்டுள்ள இந்த வீடு ராட்சத கடல் கிளிஞ்சல் (சிப்பி) போன்ற தோற்றத்தினை உடையது. கடல் அலையிடமிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டிற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும். இரு அடுக்குகளைக் கொண்ட இந்த வீடு ஒன்று உட்புறத்திலும் மற்றொன்று வெளிப்புறத்திலும் இருக்கும்.

குடியிருக்கும் பகுதி கான்கிரீட் கொண்டு நிலையாக இருக்கும்படி கட்டப்படும் இந்தப் பகுதிக்குத் தேவைப்படும் மின்சாரம் சூரிய ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப்படும். உட்புற அடுக்கு சுழலும் தன்மையுடன் அலுமினியம் கொண்டு கட்டப்பட்டதாக இருக்கும். ஆழ்கடல் அலையின் அசைவுக்கேற்ப இப்பகுதியானது அசையும்.

இவற்றுடன் இரண்டு காற்றால் இயங்கும் இயந்திரங்கள் (Turbine) பொருத்தப்படும். அவற்றில் ஒன்று அலையில் உண்டாகும் காற்றினை அமிழ்த்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும். காந்தம் மற்றும் தாமிரக் கம்பிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மற்றொரு இயந்திரமும் மின்சாரம் உற்பத்தி செய்யும். மின்சாரப் பவளப்பாறை நிலையம் மற்றும் ஒரு நீர்மின்சக்தி பொருத்தப்பட்ட சிறைச்சாலையை மார்காட் முன்பே வடிவமைத்திருக்கிறார்.

16
உலக நாடுகள்- கோஸ்டா ரிகாஉலக நாடுகள்- கோஸ்டா ரிகா7th May 2015
ரோவனின் கேள்வி7th May 2015ரோவனின் கேள்வி

மற்ற படைப்புகள்

2015_may_pinju61
மே
7th May 2015 by ஆசிரியர்

விடுமுறைக் கொண்டாட்டம்-2

Read More
2015_may_pinju50
மே
7th May 2015 by ஆசிரியர்

ஆறைவிட அய்ந்து பெரியது

Read More
2015_may_pinju8
மே
7th May 2015 by ஆசிரியர்

அசத்தல் அகரன்

Read More
2015_may_pinju11
மே
7th May 2015 by ஆசிரியர்

விடைகள்

Read More
2015_may_pinju10
மே
7th May 2015 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க!

Read More
2015_may_pinju7
மே
7th May 2015 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p