• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மல்லிகைப் புரட்சிக்கு நோபல் பரிசு

2015_nov_pinju12
நவம்பர்

 

நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் – தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர் களுக்கும் வழங்கப்படும், உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.

சுவீடிய அரசுக் கல்விக் கழகத்தாலும், சுவீடியக் கல்விக் கழகத்தாலும், கரோலின்சுகா நிறுவனத்தாலும், நார்வே நோபல் குழுவாலும் தனியொருவருக்கோ, நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகிறது.

இயற்பியல் 2015:

ஆர்தர் மெக்டொனால்டு (Arthur B. MCDonald)
டகாகி கஜீதா (Takaaki Kajita)

பொருளாதாரம் 2015:

ஆங்கஸ் டீடன் – ஸ்காட்லாந்து
(Angus Deaton)

மருத்துவம் 2015:

வில்லியம் சி. கம்ப்பெல்
(William C. Campbell)
சடோகி ஒமுரா (Satoshi Omura)
யுயுது (You You Tu)

வேதியியல் 2015:

தாமஸ் லிண்டால் (Thomas Lindahl)
பால் மோட்ரிச் (Paul Modrich)
ஆசிஸ் சங்கார் (Aziz Sancar)

அமைதி 2015:

துனிசிய தேசியக் கலந்துரையாடல் அமைப்பு
(The National Dialogue Quertet)

இலக்கியம் 2015:

ஸ்வெட்லாலானா அலெக்ஸிவிச்சு (Svetlana Alexievich)

பொருளாதாரம் 2015 : ஆங்கஸ் டீடன் – ஸ்காட்லாந்து. “வறுமை ஒழிப்பு நிபுணர்”

ஆங்கஸ் டீடன் 1945 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இங்கிலாந்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றிய பிறகு பிரிட்டனில் இருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளராகச் சேர்ந்தார்.

“நுகர்வு, வறுமை மற்றும் நலன், குறித்த இவரது ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இயற்பியல் 2015 : இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜப்பான் விஞ்ஞானி தகாக்கி கஜிதாவுடன், கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டொனால்டு “நியூடிரினோ” (Nutrinos) ஆராய்ச்சிக்காக பெற்றுள்ளனர்.

நியூடிரினோ பற்றி மெக்டொனால்டு கூறும்போது,

“நியூடிரினோ துகள் இயற்பியலில் நான் செய்த ஆய்வுகள் பரிதியை (சூரியனை) இயக்கிவரும் அணுப்பிணைவு (Nucfear fusion reations that power the sun)  இயக்கங்களை அளக்க உதவும். சூரியனின் இயக்க அளப்பாடுகளைத் துல்லியமாக அறிய முடிவது, பூமியில் செய்யப்படும் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளப் பேரளவு உதவுகிறது” என்றார்.

அமைதி – 2015 : அமைதிக்கான நோபல் பரிசு துனிஷியாவைச் சேர்ந்த சமூகக் குழுக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
The National Dialogue Quortet என்று அழைக்கப்படும் துனிஷியாவின் சமூக அமைப்புகளின் ஒன்றியத்துக்கு அமைதிக் கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு துனிஷியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கு எதிரான அமைதிப் புரட்சியை ஆங்கிலத்தில் “Jasmine Revolution of 2011” என்கிற பெயரில் அழைக்கிறார்கள். இதன்மூலம் துனிஷியா வில் பன்மைத்துவ ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப இந்த சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

இலக்கியம் – 2015 : உலக இலக்கியத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர், பேலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வெட்லானா அலெக்ஸ்யெவிச் என்ற பெண் எழுத்தாளர்.

“கடந்த 40 வருடங்களாக இவர் சோவியத் மற்றும் பிற்பட்ட காலத்து வரலாற்றைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது சம்பவங்களின் வரலாறு அல்ல, உணர்ச்சிகளின் வரலாறு, இவருடைய எழுத்துகள், நம் காலத்தின் கடும் துன்பங்களும், சோகங்களும் எழுதப்பட்ட ஒரு நினைவுச் சின்னமாக விளங்கும் பலகுரல் ஒலிப்பு”.

வேதியியல் 2015 : சுவீடனைச் சார்ந்த தாமஸ் லிண்டாஸ், அமெரிக்காவைச் சார்ந்த பால் மோட்ரிச், துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் அஜீஸ் சான்சார் ஆகிய மூவருக்கும் வழங்கப் பட்டுள்ளது.

மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மேலும், பல்வேறு பரம்பரை நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்தும், புற்றுநோய், வயது முதிர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான மூலக்கூறு மாற்றங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரும் உதவி புரிந்துள்ளன.

மருத்துவம் 2015 : மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப் படுகிறது. அந்த வகையில் வில்லியம் சி. கம்ப்பெல், சடோசி ஒமுரா மற்றும் யுயுது ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப் பட்டுள்ளது.

இந்த நோபல் பரிசு இரண்டு கண்டுபிடிப்புகளுக்காக, இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது ஒன்று நாக்குப் பூச்சி ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் சி.கம்ப்பெல் சடோசி ஒமரா ஆகியோருக் கும், மற்றொன்று மலேரியாவிற்கான சிகிச்சை முறை குறித்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக யுயுது என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

24
போட்டிபோட்டி3rd November 2015
சும்மா மொக்க போடாதீங்க3rd November 2015சும்மா மொக்க போடாதீங்க

மற்ற படைப்புகள்

2015_nov_pinju56
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

கண்களிரண்டைக் காப்போமே!

Read More
2015_nov_pinju13
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

போட்டி

Read More
2015_nov_pinju57
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

எங்கள் தந்தை!

Read More
2015_nov_pinju21
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

Paper

Read More
2015_nov_pinju1
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

பிஞ்சுகளே! பேச்சாற்றல் வளருங்கள்!

Read More
2015_nov_pinju6
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p