• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

எளிய அறிவியல் தொடர், மின்சாரம் எதனால் ஆனது?-3

2016_apr_pinju27
ஏப்ரல்

கீ கொடுக்கும் சக்கரத்தை நாம் சுற்றுவதன் மூலம் கைக்கடிகாரத்திற்குத் தேவையான எந்திர விசையினை உருவாக்குவதுபோல, காந்தப்புலத்தை சுழலச் செய்து அதன் நடுவே மின் கடத்தியை வைப்பதன் மூலம் மின் விசையினை உருவாக்குகிறோம் என சென்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம்.

நாம் தற்போது பெருமளவில் உபயோகித்துக் கொண்டிருக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்களும் இதே போன்று சுழலும் காந்தப் புலத்திற்கு நடுவில் மின் கடத்தியை வைத்துதான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனவா? ஆம். அவ்வாறுதான் உருவாக்குகின்றன.
நாம் தற்போது பயன்படுத்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில:

1. அணுமின் நிலையங்கள்

2. அனல்மின் நிலையங்கள்

3. நீர்மின் நிலையங்கள்

4. காற்றாலை மின் நிலையங்கள்

ஆனால், இந்த அனைத்து மின் நிலையங்களும் ஒரே வகையில் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மிகப் பெரிய டர்பைன்களில் (Turbine) காந்தங்களை இணைத்து அவற்றை சுழலச் செய்வதன் மூலம் ‘சுழலும் காந்தப் புலத்தை’ உற்பத்தி செய்து, அதன் நடுவே ஒரு மின் கடத்தியை வைப்பதன் மூலமாக மின் விசையினை உற்பத்தி செய்கின்றனர்.

கைக்கடிகாரங்களில், நம் கைகளால் கீ கொடுப்பது போல இந்த வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் வெவ்வேறு வழிகளில் டர்பைன்களை சுழலச் செய்கின்றனர். அணுமின் நிலையங்களில், அணுப் பிளப்பு மூலம் உருவாகும் அளப்பறியா ஆற்றலைப் பயன்படுத்தி நீரினைக் கொதிக்க வைத்து நீராவியினை உற்பத்தி செய்து, அந்த நீராவி மூலமாக டர்பைன்களை சுழலச் செய்கின்றனர் (நீராவி இன்ஜினைப் போன்று).

அனல்மின் நிலையங்களில் நிலக்கரியினை எரித்து அதன் மூலமாக கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி நீராவியினை உற்பத்தி செய்து அந்த நீராவி மூலமாக டர்பைன்களை சுழல செய்கின்றனர்.

நீர்மின் நிலையங்கள் பொதுவாக அணைகளில்தான் நிறுவப்பட்டிருக்கும். திறந்து விடப்படும் அணைகளில் இருந்து ஓடும் நீர், அங்கு இணைக்கப்பட்டுள்ள டர்பைன்களை சுழலச் செய்யுமாறு அவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல, காற்றாலைகளில், பெரிய இராட்சத டர்பைன்களை வீசும் காற்று சுழலச் செய்யுமாறு அதிகமான காற்று வீசும் பகுதிகளில் அந்த டர்பைன்கள் நிறுவப்பட்டிருக்கும். ஆகவே, அனைத்து மின் நிலையங்களும் ஒரே வடிவமைப்பின்படிதான் இயங்குகின்றன. அதாவது, மின் காந்தங்கள் இணைக்கப்பட்டிருக்கும் டர்பைன்களை சுழலச் செய்து அதன் நடுவே மின் கடத்தியினை வைப்பதன் மூலம் மின்விசை உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனைத் தெளிவாக அறியலாம்.

ஆகவே, மின்சாரம் என்பது ஒரு விசைதான் என்பதனையும், அந்த விசை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதனையும் தெளிவாகவும், மிக எளிதாகவும் பார்த்தோம். ஆனால், நடைமுறையில் மின்னியல் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. மின்விசையினைப் பற்றிப் பேசும்போது வோல்டேஜ் (Voltage), வாட்ஸ் (Watts), ஆம்பியர் (Ampere) என பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்துவோம்.

இவை எல்லாம் என்னென்ன? இப்போதெல்லாம் ஒரு சாதாரண மின் சாதனம் வாங்க கடைக்குச் சென்றால்கூட இவைகளைப் பற்றிய அடிப்படை அறிவு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இவற்றைப்-பற்றியெல்லாம் அடுத்த கட்டுரையில் எளிமையாகவும், விரிவாகவும் காணலாம். <

10
உலகப் புத்தக நாள் விழா-ஏப்ரல் 23உலகப் புத்தக நாள் விழா-ஏப்ரல் 238th April 2016
பிரபஞ்ச ரகசியம்-338th April 2016பிரபஞ்ச ரகசியம்-33

மற்ற படைப்புகள்

2016_apr_pinju40
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

வாட்ஸ்-அப்-பில் வந்தது

Read More
2016_apr_pinju27
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

எளிய அறிவியல் தொடர், மின்சாரம் எதனால் ஆனது?-3

Read More
2016_apr_pinju41
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

சொற்சிலம்பம் ஆடியவர்

Read More
2016_apr_pinju45
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More
2016_apr_pinju11
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

குழந்தைகள் நாடகம்

Read More
2016_apr_pinju50
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p