• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by -விழியன்

எங்கே இருக்கு சின்னு மரம்?

2016_aug_pinju9
ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு

-விழியன்

ஓவியம்:கி.சொ

சின்னு மரம். உஷ் உஷ் என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம், காட்டின் நடுவிலே இருக்கின்றது. அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றித் தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும்.

இந்த மரத்தை சின்னு மரம், சின்னு மரம் என்று தான் அழைப்பார்கள். பக்கத்துக் காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்தக் காட்டிற்கு வந்து வழி கேட்டால், சின்னு மரத்திற்கு முன்னால் போங்க, “சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்குச் சின்னு மரம் காட்டின் முக்கியச் சின்னமாகக் கருதப்பட்டது. அது சரி அது என்ன சின்னு மரம். அந்தக் கதை ரொம்பச் சுவாரஸ்யமா இருக்குமா?

முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில்கள் வாழ்ந்து வந்தன. அவர்களுக்குச் சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது. பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களைப் போல அமைதியாக நல்ல பிள்ளையாகத்தான் இருந்தது.. ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை… பயங்கர வால்தனம். எந்த மரத்திற்குச் சென்றாலும் கலாட்டாதான்.

கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது. குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், வேண்டும் என்றே அடம்பிடித்தால் யாருக்குதான் பிடிக்கும் சொல்லுங்க. மற்ற அணில்கள் விளையாடும்போது, தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் எனச் சொல்லும்.

தங்களுடைய வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர். சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது. சின்னு என்ற பெயரைக் கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்?

பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது எனச் சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்தக் கவலையில் செம்பன், செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டனர். சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா, அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்குப் பயந்து இருந்தது. இப்போது அட்டகாசம் தாங்க முடியவில்லை. எல்லா அணில்களும் கூடி ஒரு முடிவினை எடுத்தன ‘நாங்கள் அனைவரும் உனக்குத் தினமும் வேண்டிய உணவினைத் தருகிறோம்.

இந்த மரத்தைவிட்டு வரவே வராதே’ என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர். அதன்படி தினமும் பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது.

காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இதுதான் பேச்சு. சிங்கம், புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தைக் காண வந்தன. மரத்தின் உச்சியில் சின்னு இருந்ததால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தின் உயரம் முப்பது அடி இருக்கும். பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கிக் கொள்ளும். காட்டிலே ஒரு காட்சிப் பொருளாகி விட்டது சின்னு,

மற்றக் காடுகளில் இருந்தும்கூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன. முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவோ செய்தது. தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது. அப்பா _ அம்மா சொல்லைக் கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது. சின்னச் சின்ன வேலைகளை மெதுவாகச் செய்ய ஆரம்பித்தது. உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது. நல்ல அணிலாக மாறிவிட்டது.

சின்னுவிற்கு சில மாதங்களில் அந்தப் பெரிய வால் மறைந்து. மற்ற அணில்களைப் போல மாறிவிட்டது. பொறுப்பும் வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது. ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்குச் சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்கச் சொல்வது அந்தக் காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது.

24
இயற்கையைப் பாதுகாப்போம்...இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!இயற்கையைப் பாதுகாப்போம்...இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!2nd August 2016
ஆசிரியர் தாத்தாவிடம் வரிசை கட்டி கேள்வி கேட்ட பிஞ்சுகள்2nd August 2016ஆசிரியர் தாத்தாவிடம் வரிசை கட்டி கேள்வி கேட்ட பிஞ்சுகள்

மற்ற படைப்புகள்

2023_jan_8
கதை கேளு கதை கேளுஜனவரி 2023
5th January 2023 by விழியன்

மூழ்காக் கப்பல்

Read More
24
கதை கேளு கதை கேளுடிசம்பர் 2023பிஞ்சு 2023
13th December 2023 by விழியன்

”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்”

Read More
28
கதை கேளு கதை கேளுஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by விழியன்

டடங்

Read More
1
கதைகதை கேளு கதை கேளுஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by விழியன்

புபியின் அன்பான தொகுதியும் ஆருயிரான பகுதியும்

Read More
2017_jan_pinju14
கதை கேளு கதை கேளுஜனவரி
6th January 2017 by விழியன்

கறுப்பழகியின் புன்னகை

Read More
2018_nov_v44
கதை கேளு கதை கேளுநவம்பர் 2018
29th October 2018 by விழியன்

”ரோலிங் சர்ர்ர்ர்ர்”

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p