• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செவ்வாய்க் கிரகம் போலாமா?

2016_aug_pinju40
ஆகஸ்ட்

காட்டிலிருந்து வெகு தொலைவில் நீர் தேடி வந்து கொண்டிருந்தன கஜா, மகா என்ற இரண்டு குட்டி யானைகள்.

“கஜா! இன்னும் எவ்வளவு தூரம் நடப்பது. எனக்கு இப்போதே கால்கள் வலிக்கத் தொடங்கி விட்டன. அம்மாவிடம் வேறு சொல்லாமல் வந்துவிட்டேன். அவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள்’’ என்றது மகா.
“என்ன மகா செய்யறது. காட்டுல குடிக்கத் தண்ணீர் இல்லையே. அருகே ஒரு கிராமம் இருக்கிறது. கண்டிப்பாக அங்கே தண்ணீர் கிடைக்கும். சோம்பல் படாமல் வா… குடித்துவிட்டு வரலாம்.’’

“கஜா! பூமியில தண்ணீர்த் தட்டுப்பாடு வர்றதுக்கு என்ன காரணம்?’’

“தேவைதான் காரணம்’’

“புரியலையே கஜா’’

“அதாவது மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக காட்டினை ஆக்கிரமித்தனர். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களுக்கு மரங்களை வெட்டினர். அலங்காரத்திற்கும் ஆகாரத்திற்கும் மிருகங்களை அழித்தனர். இப்படி இயற்கை அழித்து, மேலும் எதை அழித்தால் நாம் வாழலாம் என தேடிக் கொண்டிருக்கிறார்கள்.’’

“இவர்களை தட்டிக் கேட்க யாருமில்லையா கஜா?’’

“இருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் அரசாங்கம்… ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக ஒரு மரக்கன்றை நடச் சொல்கிறது. இவர்கள் வாகனங்கள் மூலம் மிருகங்களுக்கு விபத்து என்றால் தண்டனைத் தருகிறது. ஆனால் அவற்றை எல்லாம் மீறுவதையே இவர்கள் விரும்புகிறார்கள் மகா’’ என்றது குட்டி யானை கஜா.

“அப்படின்னா நம்மைப் போன்றவர்கள் வாழவே முடியாதா கஜா?’’

“முடியும் மகா. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், நுண்ணியிரிகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களும் வளர்ந்து வாழ்ந்து-தானே இயற்கையாக எல்லாம் உருவாகி-யிருக்கின்றன. ஆனால் ஆறறிவை நாம் பெற்றிருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் மனிதர்கள், தேனீக்கள் சேகரிக்கும் தேன் துளிகளைக் களவாடுவது, மிருகங்களை அடிமைப்-படுத்தி வேலை வாங்குவது, நாய்களைப் பழக்கப்-படுத்தி வீட்டினைக் காவல் காக்க வைப்பது எனப் பலவற்றை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் பரவாயில்லை இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தாலே போதும்…’’ என்றது கஜா.

“அப்படின்னா நாம இந்தப் பூமியை விட்டு செவ்வாய்க் கிரகத்திற்கு சென்று விடலாமே கஜா’’

“நீ நினைக்கிற மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது மகா’’

“ஏன் கஜா’’ என வருத்தத்துடன் கேட்டது குட்டி மகா.

“பூமியில் இருப்பதைப் போன்று, செவ்வாய்க் கிரகத்திலும் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது உண்மைதான். ஆனால் அக் காற்று மண்டலத்தில் பூமியில் இருப்பதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உயிர்வளி (ஆக்ஸிஜன்)தான் இருக்கிறது. ஆனால் ஏராளமான பங்கு கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. இதனால் உயிரினங்கள் சுவாசிப்பது கடினமாகிவிடும்…’’

“அங்கு தண்ணீர் இருக்கிறதா கஜா’’ இடைமறித்துக் கேட்டது மகா.

“பூமியில் இருப்பதைப் போல நீர்ப்பகுதி இல்லாமல் செவ்வாய்க் கிரகத்தில் நீர்ப்பகுதி மிகமிகக் குறைவு. நிலப்பகுதியின் பரப்பளவுதான் அதிகம். அதனால் அங்கே மேகங்கள் உருவாகாது. மேகங்கள் இல்லையென்றால் மழை பொழியாது.

அதுமட்டுமல்லாமல் பனி மூடிய சிகரங்கள் உள்ளன. ஒருசில நீரோடைகள் இருக்கின்றன. பூமியில் ஏற்படுவது போன்று பருவநிலை மாற்றங்களும் ஏற்படுகின்றன. ஆனால் அவை பூமியைப் போல இருக்காது மகா’’ எனத் தனக்கு தெரிந்த செய்தியைத் தெளிவாக விளக்கியது கஜா.

“கஜா! அங்கே பார் ஒரு ஏரி தெரிகிறது வா.. போகலாம்’’ என்றது உற்சாகமாக.

“இரு மகா! அவசரப்படாதே. நாம் காட்டிலிருந்து நாட்டிற்கு வரும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு ஏதாவது ஆபத்தை நேரும்படி செய்திருப்பார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நீயும் ஏதாவது ஆபத்து தென்படுகிறதா என கவனமாக பார்’’ என்றது கஜா.

சுற்றும் முற்றும் பார்த்தன குட்டியானைகள்.

“ஆமாம் கஜா! நீ சொன்னது உண்மைதான். ஏரிக்கு அருகில் மின்சார வேலி அமைத்திருக்-கிறார்கள்’’ என்றது மகா.

“கவலைப்படாதே மகா! மனிதர்களை விட ஓரறிவுதான் நமக்குக் குறைவு. நாம் குனிந்து துதிக்கையை மட்டும் வேலிக்கு கீழே விட்டு அசைக்காமல் நீரைப் பருகலாம் வா…’’ என்றது கஜா.

தாகம் தீர்ந்தது. “கஜா. நீ புத்திசாலிதான்’’ என்றது மகா.

“நான் மட்டுமல்ல; மிருகங்கள் எல்லாமே புத்திசாலிகள்தான்’’ என்றது கஜா.

“ஆமாம்… ஆமாம்…’’ என்று கூறிக்கொண்டே மகா சிரிக்க…. அச்சிரிப்பொலியில் சேர்ந்து கொண்டது குட்டியானை கஜா.

15
தமிழ் பிறந்தநாள் பாடல்27th July 2016
சுற்றுச் சூழல்2nd August 2016சுற்றுச் சூழல்

மற்ற படைப்புகள்

2016_aug_pinju11
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

ஆசிரியர் தாத்தாவிடம் வரிசை கட்டி கேள்வி கேட்ட பிஞ்சுகள்

Read More
2016_aug_pinju25
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

பொருத்துக

Read More
2016_aug_pinju39
ஆகஸ்ட்
1st August 2016 by ஆசிரியர்

அறிவால் உணர்வை ஆளவேண்டும்!

Read More
2016_aug_pinju18
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_aug_pinju37
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2016_aug_pinju59
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

விடைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p