• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஆதிக்கக் கோட்டைகளை நொறுக்கிய பிடல் காஸ்ட்ரோ!

2016_dec_pinju3
டிசம்பர்

ஆதிக்கக் கோட்டைகளை நொறுக்கிய பிடல் காஸ்ட்ரோ!

கியூபா அழகான குட்டி தீவு. அந்த அழகிய குட்டி தீவில் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ல் ஏஞ்சல்காஸ்ட்ரோ-லினா இணையருக்கு மகனாகப் பிறந்தார் பிடல் காஸ்ட்ரோ. அவரின் இயற்பெயர் பிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ். 1945 ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது அரசியல் மற்றும் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கல்லூரி மாணவராக இருந்த போதே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

மேடையில் இவர் உணர்ச்சி பொங்கப் பேசுவதைக் கேட்கவே பெரும் கூட்டம் சேர்ந்தது. 1952 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து கியூபாவை ஆட்சி செய்த கொடுங்கோல் சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்து புரட்சி செய்த காரணத்தால் கைது செய்யப்பட்ட காஸ்ட்ரோவிற்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் மக்களின் கிளர்ச்சியால் இரண்டு ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார்.

மெக்சிகோவிற்கு கள்ளத் தோணி மூலம் சென்று கொரில்லா போர் முறையை கற்றுத்தேர்ந்த இவர் சேகுவரா உடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் கியூபா வந்து மக்களை புரட்சிக்குத் தயார் செய்தார்.

“தாய்நாட்டிற்காக விடுதலை அல்லது வீரமரணம்”, “வரலாறு என்னை விடுதலை செய்யும்” போன்ற வீர முழக்கங்களால் ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் அதிரச் செய்தார். இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவோடு 1959 பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரைத் தன்வசம் இழுக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சி செய்தது. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத அவர் கியூபா நாட்டு வளங்கள் அனைத்தும் கியூபா நாட்டு மக்களுக்கே சொந்தம் என அறிவித்து அனத்தையும் பொதுவுடைமை ஆக்கினார்.

50 ஆண்டுகள் அமெரிக்காவை அஞ்சி நடுங்கவைத்த உலகின் ஒரே புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ. இவரை கொலை செய்ய அமெரிக்கா 638 முறை முயற்சி செய்த போதும் இந்த வரலாற்றுப் புரட்சியாளரை நெருங்க முடியவில்லை. 49 ஆண்டுகள் கியூபாவின் அதிபராக இருந்து 11 அமெரிக்க அதிபர்களின் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் அஞ்சாமல், கியூபாவின் வளர்ச்சியில் மட்டுமே குறியாக இருந்த சோசலிச சிந்தனையாளரான பிடல் காஸ்ட்ரோ 2016 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் தனது 90 வயதில் மறைந்தார்.

மிகச்சிறந்த பேச்சாளரான காஸ்ட்ரோ 1960 ஆம் ஆண்டு ஜநா பொதுசபையில் 269 நிமிடங்கள் தொடர்ந்து பேசி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்கும் அடிபணியாத புரட்சியாளரை வரலாற்றின் புகழில் இருந்து ஒருபோதும் விடுவிக்க முடியாது.

காஸ்ட்ரோவின் மறைவிற்காக வீரவணக்கம் செலுத்தியுள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “இறுதியில் ஆதிக்க கோட்டைகள் நொறுங்கும், உரிமைக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதற்கான அடையாளச் சின்னம் பிடல் காஸ்ட்ரோ” என புகழாரம் செலுத்தியுள்ளார்.

வாழ்க புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ!!

– தமிழ் கா.அமுதரசன்

18
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு7th November 2016
’பலூன்’ பாடம்7th December 2016’பலூன்’ பாடம்

மற்ற படைப்புகள்

2016_dec_pinju52
டிசம்பர்
7th December 2016 by ஆசிரியர்

காஸ்ட்ரோ தாத்தாவின் வாழ்த்துப் பெற்ற பெரியார்

Read More
2016_dec_pinju51
டிசம்பர்
7th December 2016 by ஆசிரியர்

நலக்கதிராய் வாழ்க! வாழ்க!

Read More
2016_dec_pinju22
டிசம்பர்
7th December 2016 by ஆசிரியர்

ஆசிரியர் கி.வீரமணி தாத்தா பிறந்தநாள்: டிசம்பர் 2

Read More
2016_dec_pinju5
டிசம்பர்
7th December 2016 by ஆசிரியர்

உலகம் சுற்றி – 4

Read More
2016_dec_pinju12
டிசம்பர்
7th December 2016 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2016_dec_pinju13
டிசம்பர்
7th December 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p