• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

Walt Disney World எதிர்கால மாதிரி நகரம்

2017_mar_s26
மார்ச்

மிகச் சிறந்த கற்பனைகளை நினைத்து அவற்றை நனவாக்கிச் செயல்படுத்துவதில் தலைசிறந்தவர் வால்ட் டிஸ்னி! அவர் கற்பனை என்ன தெரியுமா? 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு நகரத்தைப் படைப்பது. மேலே வீடுகள், மற்றவை. நிலத்திற்குக் கீழே பேருந்துகள், கார்கள் போக்குவரத்து போன்றவை இருக்கும். அறிவுலகத்தின் அத்தனைப் படைப்புக்களையும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தி மகிழ்வுடன் வாழ்வார்கள். உலகின் பல பகுதியிலிருந்தும் இந்த நகரத்தில் வாழ்வார்கள். “எதிர்கால மாதிரி நகரம்EPCOT  ( Experimental Proto Type Community of Tomorrow) என்று பெயரிட்டார். புகை பிடித்ததால் வந்த நுரையீரல் புற்று நோயால் அவர் இறந்துவிட, அவரில்லாமல் நம்மால் இந்த நகரத்தை உருவாக்க முடியாது என்று கைவிட்டு விட்டனர். ஆனால் பெயரை மட்டும் அப்படியே வைத்துள்ளனர்.

 

இப்போது அங்கே இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உலகில் எங்குமே இல்லாத எட்டு கட்டிடங்கள், அவற்றைக் கட்டிடங்கள் என்று சொல்ல முடியாது படைப்புக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றொரு பகுதியில் உலகின் பதினொரு நாடுகளின் சிறப்புப் படைப்புகளும், பண்பாட்டின் வெளிப்பாடுகளும் ஒரு பெரிய ஏரியைச் சுற்றி அமைந்துள்ளன.

முதல் பிரிவின் சில படைப்புகளைப் பார்ப்போமா?

அழகான பூச்செடிகள் அமைக்கப்பட்ட பூங்கா போன்ற பெரிய இடம். அதன் நுழைவாயிலில் ஒரு பெரிய கோல்ப்ஃ பந்து போன்ற ஒரு படைப்பு! அதன் முழு அமைப்புமே பெரிய அற்புதந்தான். அது படைக்கப்பட்டுள்ள பொருளுமே தனித்தன்மை வாய்ந்தது. 18 மாடிகள் உயரம். அதன் உள்ளே கற்காலத்திலிருந்து இப்போது வரை மனிதர்கள் எப்படிச் செய்தி பரிமாறிக் கொண்டார்கள் என்பதை அப்படியே காட்டும் அமைப்புக்கள். நாம் ஓர் ஊர்தியிலே அமர்ந்து இருட்டிலே மேலும் கீழும், வளைந்தும், உருண்டும், சாய்ந்தும் செல்வோம். தலைக்கு மேலே வின்மீன்கள், கீழே மக்கள். பலவகை கற்கள், ஓசை எழுப்பும் கருவிகள், காகிதம், செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, கணினி என்று படிப்படியான முன்னேற்றத்தைக் கண்முன்னே காண்போம். முடிந்து கீழே இறங்கும் போது சில மணித்துளிகளில் பல்லாயிரம் ஆண்டுப் பயணத்தை முடித்த பெருமை தோன்றும்.

அதற்குப் பெயர் “வானத்தில் பூமி உருண்டை!’

அடுத்து மக்கள் கூட்டம் அலைமோதுவது ‘வாழுங் கடல்’ என்ற அரங்கத்திற்கு. ஆம். மிகப்பெரிய கடல் நீர் தொட்டி தான் அந்த அரங்கம். 5.7 மில்லியன் அமெரிக்க கேலன் கடல் நீரால் நிரப்பப்பட்ட கடல் உலகத்திற்குச் செல்வோம். அங்கே நம்மைக் கடலுக்கு அடியில் போகும் மாதிரி உணரச் செய்வார்கள். நாம் இருந்த இடத்தில்தான் இருப்போம். ஆனால் சுற்றிலுமுள்ளவை குலுங்குவதும், காற்றுக் குமிழிகள் மேலே எழும்புவதும் நாம் கடலுக்குள் போவது போன்ற உணர்ச்சியை உண்டாக்கி விடும். அங்கு சுறா உள்ளிட்ட பலவகைக் கடல் வாழ் மீன்கள் என்று எல்லாம் நம் அருகில் உயிருடன் நீந்திச் செல்லும். மிக அழகான கடற்பாறைகளையும், பாசிகளையும் அப்படியே இயற்கையாக இருக்கும்படி (ஆனால் செயற்கை தான்) பார்ப்போம். இதையெல்லாம் நேரே பார்த்தால் இன்னும் வியப்பு பன்மடங்காக இருக்கும். பார்ப்போம் உங்களில் எத்தனை பேர் இதையெல்லாம் நேரே பார்க்கப் போகின்றீர்கள் என்று! எங்கோ பிச்சாண்டார்கோவில் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் தந்தை பெரியார், கல்விவள்ளல் காமராசர் முயற்சிகளால் வந்து பார்த்துள்ளபோது அறிவிற் சிறந்த நீங்களெல்லாம் நன்கு படித்து முன்னேறி சுற்றுப்பயணம் வந்து கட்டாயம் பார்ப்பீர்கள்தானே?

-டாக்டர் சோம.இளங்கோவன்

17
புகை நமக்கு பகை!புகை நமக்கு பகை!24th February 2017
போட்டி நீட்டிப்பும் ஓரெழுத்துக்குப் பரிசு அறிவிப்பும்24th February 2017போட்டி நீட்டிப்பும் ஓரெழுத்துக்குப் பரிசு அறிவிப்பும்

மற்ற படைப்புகள்

2017_mar_s43
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_mar_s42
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2017_mar_s49
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

பிஞ்சினும் பிஞ்சுகளுக்கு…

Read More
2017_mar_s25
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

புகை நமக்கு பகை!

Read More
2017_mar_s29
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

சுடோகு

Read More
2017_mar_s7
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

பிஞ்சுகளே! எச்சரிக்கை!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p