• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அசரவைத்த அறிவியல் கண்காட்சி நாங்களேதான் செய்தோம்!

2017_mar_s35
மார்ச்

“ச்சே! ஏன் நம்ம அறிவை யாருமே ஏத்துக்க மாட்டேங்கறாங்க-? எதைச் செஞ்சாலும், ஏப்பா… இது நீ எழுதுனதுதானா? இல்லை… மண்டபத்தில யாராவது எழுதிக் குடுத்தாங்களா? அப்படின்னு கேட்கறதே இவங்களுக்கு பொழப்பாப் போயிடுச்சு!’’

இது புழல் மத்திய சிறைக்கு நேர்எதிராக காந்தி முதன்மைச் சாலையிலுள்ள ‘அரசு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி’யில் பயிலும் ஹேமாசிறீயின் ஆதங்கம்! இல்லையில்லை, கோபம்! வீட்டில் என்றால்கூட பரவாயில்லை. பள்ளியிலும் அப்படித்தான் என்று நினைத்திருந்தாள். அன்று தனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் செய்தியாளர் என்று ஒருவர் வந்து தானும், தனது நண்பர்களும் சேர்ந்து ரொம்…பவும் மெனக்கெட்டு செய்திருந்த சூரியகுடும்பம், பருப்பொருளின் தன்மைகள், மனிதசெரிமான மண்டலம், மனிதநுரையீரல், நவதானியங்கள் போன்றவற்றை எல்லாருக்கும் புரியும் வண்ணம் உருவங்களை உருவாக்கியும், அழகாக எழுதியும் வைத்திருந்ததைப் பார்த்து, “அருமையாக இருக்கிறது. (ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி) இதை நீங்களாகவே செய்தீர்களா? இல்லை உங்கள் வகுப்பாசிரியர் உதவி செய்தாரா?’’ என்று எல்லோரையும் போல கேட்டுவிட்டார்.

எனக்கோ, கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. ஆனாலும் சிரித்துக் கொண்டே, எங்கள் ஆசிரியரை பக்கத்தில் வைத்துக்கொண்டே, “இல்லையில்லை சார்… நாங்களேதான் செய்தோம்.’’ என்றேன். அந்த செய்தியாளர் விடுவதாக இல்லை. “உண்மையாகவா சொல்கிறீர்கள்?’’ என்று மீண்டும் கேட்டுவிட்டார். எனக்கோ சுயமரியாதை பொங்கிவிட்டது பொங்கி! “வேணும்னா வீடியோ இருக்கு காட்டட்டுமா சார்.’’ என்று பொசுக்கென்று கேட்டுவிட்டேன். இப்படி யாராவது கேட்பார்கள் என்றுதான் நாங்கள் எல்லாவற்றையும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தோம். நான் எதிர்பார்த்தற்கு மாறாக அந்த செய்தியாளரின் கண்களில் மின்னல் தெரிந்தது. ஆம் அசந்தே போய்விட்டார். அந்த மின்னல் பார்வை என்னுடன் ஏதோ பேசியது. ஆம்! அவர் எங்களை முற்றிலுமாக அங்கீகரித்து விட்டார். அதுமட்டுமல்ல எங்களது அறிவியல் ஆசிரியருக்கும்கூட இது புது அனுபவம்தான். என்னதான் பெரியவர்கள் நம்மை அங்கீகரிப்பது போல இருந்தாலும், அவர்களது ஈகோ நம்மை மட்டம் தட்டிவிடுமே என்ற பயமும், அடுத்து என்ன சொல்லப்போகிறாரோ என்றும் எனக்குள்ளே பரபரப்பாக இருந்தது. ஆனால், அவரோ எங்களுக்கு வெட்கம் வரும்வகையில் தொடர்ந்து மனம்விட்டு பாராட்டினார். எங்களை மட்டுமல்ல, எல்லோரையும் இப்படியே பாராட்டி மகிழ்ந்தார்.

இந்த அறிவியல் கண்காட்சி நான் பயிலும் புழல் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றாலும், கண்ணம்பாளையம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகரையைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கரையைச் சேர்ந்த ஊராட்சி தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளிலிருந்தும் மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இவையெல்லாம் எங்கள் பள்ளியில் நடப்பது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ம்… அப்புறம் இதை தொடங்கி வைக்க உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எப்சிமா, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசஃபின், புழல் மத்திய சிறை ஆசிரியர் இராஜேந்திரன் ஆகியோரும் வந்திருந்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். எங்கள் தலைமையாசிரியரான சரளா அவர்கள் சுற்றிச்சுழன்று ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருந்தார்.

இது மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது. இதன் இலக்கு அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் உயர்வு! என்பதுதான். நிச்சயமா நாங்க அறிவியல் மனப்பான்மையோட ஒரு உயர்வான நிலைக்கு வருவோம்!

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… என்னை கேள்வி கேட்ட செய்தியாளர், ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழில் இருந்து வந்தவராம்.

– ஹூவாமை

21
வால்மிளகு ராஜாவால்மிளகு ராஜா24th February 2017
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பயணம்24th February 2017விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பயணம்

மற்ற படைப்புகள்

2017_mar_s23
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

உயிர்நேயம் கொண்ட துணிச்சல் சிறுமி

Read More
2017_mar_s30
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

புதிய தொடர் ஆரம்பம்

Read More
2017_mar_s7
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

பிஞ்சுகளே! எச்சரிக்கை!

Read More
2017_mar_s49
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

பிஞ்சினும் பிஞ்சுகளுக்கு…

Read More
2017_mar_s29
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

சுடோகு

Read More
2017_mar_s13
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

பேசாதன பேசினால் : 6 மண்புழுவின் மன வருத்தம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p