• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியாரின் கதை – 2

2017_may_s25
மே

பெரியார் பெயர் ஈ.வெ.ராமசாமி, ‘ஈ’ என்றால் ஈரோடு, ‘வெ’ என்றால் வெங்கட்ட நாயக்கர், ராமசாமி என்பது பெரியாருடைய பெயர். பெரியாரின் அப்பா வெங்கட்ட நாயக்கர் பெரிய பணக்காரர். எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் உடையவர்.

பெரியாரின் அம்மா பெயர் சின்னத்தாய் அம்மையார், நல்ல உழைப்பாளி.

முதலில் பெரியாரின் அப்பாவும், அம்மாவும் வறுமையில்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். பெரியாரின் அப்பா கூலிவேலை செய்தார். பிறகு வாடகைக்கு வண்டி ஓட்டினார். பணம் சேர்ந்தது. சிறிய மளிகைக்கடை வைத்தார். இறுதியில் மண்டிக்கடை வைத்து பெரிய முதலாளி ஆனார்.

அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. நம் பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். அவருக்கு ஓர் அண்ணன் உண்டு. அவர் பெயர் ஈ.வெ.கிருஷ்ணசாமி. இரண்டு தங்கைகள் உண்டு. ஒருவர் பெயர் பொன்னுத்தாய் அம்மாள், மற்றொருவர் கண்ணம்மாள்.

பெரியார் பாட்டி வீட்டில் வளர்ந்தார். பாட்டிக்கு செல்லப்பிள்ளை. பாட்டி வீட்டில் பெரியாருக்கு கண்டிப்பு கிடையாது. கட்டுப்பாடு கிடையாது. பெரியார் தன் விருப்பப்படி வளர்ந்தார். முரட்டுப் பிள்ளையாக மாறிவிட்டார்.

பெரியாருக்கு வயது ஆறு.

பெரியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பெரியார் படிக்கும் பள்ளியைச் சுற்றி ஒடுக்கப்பட்ட ஜாதியினர் வசிக்கும் வீடுகள் இருந்தன. அந்த வீட்டுப் பிள்ளைகள்தான் பெரியாருக்கு நண்பர்கள். அவர்கள் வீடுகளில்தான் பெரியார் தண்ணீர் வாங்கிக் குடிப்பார். இது பெரியாருடைய அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

ஒருநாள் பெரியாரை அம்மா அழைத்தார்.

‘இனி நீ தாழ்ந்த ஜாதிக்காரங்க வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடாது’ என்று பெரியாரிடம் கூறினார்.

‘தாகம் எடுத்தால் நான் என்ன செய்ய?’ என்று வினவினார் பெரியார்.

‘ஆசிரியர் வீட்டில் வாங்கிக்குடி’ என்றார் அம்மா.

பெரியாரும் ‘சரி அம்மா’ என்று தலையாட்டினார்.

ஒரு நாள் பெரியார் ஆசிரியர் வீட்டில் போய் தண்ணீர் கேட்டார். ஆசிரியருடைய மகள் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். தம்ளரில் வாய் வைத்துக் குடிக்காதே என்று பெரியாருக்கு உத்தரவும் போட்டாள். பெரியாருக்கு தம்ளரில் வாய் வைத்துக் குடித்துதான் பழக்கம். திடீரென்று ஆசிரியர் மகள் இவ்வாறு கூறவே, பெரியார் தடுமாறினார்.

பெரியார் தம்ளரை வாய்க்கு நேராக தூக்கிப் பிடித்துக் கொண்டு தண்ணீரை ஊற்றினார். தண்ணீர் வாய்க்குப் போகாமல் மூக்குக்குள் போனது. உடையிலும் கொட்டியது. பெரியார் திண்டாடிவிட்டார். ஆசிரியர் மகள் தலையிலடித்துக்கொண்டு விலகினாள்.

பிறகு பெரியார் தம்ளரைத் தரையில் வைத்தபோது, அந்தப் பெண் தம்ளரை மூன்றுமுறை தண்ணீர் தெளித்து எடுத்துப் போனாள். பெரியார் இதைப் பார்த்தார். அவருக்கு வெறுப்பு வந்தது.

ஆசிரியர் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். ஜாதிப் பெருமை காரணமாகவே அந்தப் பெண் அவ்வாறு நடந்துகொண்டாள் என்று பெரியார் நினைத்தார். சிறுவயதில் இருந்தே பெரியாருக்கு ஜாதி வேற்றுமை பார்ப்பது பிடிக்காது. அதனால் இனிமேல் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடாது என்று முடிவு செய்துகொண்டார்.

அதற்குப் பிறகு பெரியார் தாழ்த்த்ப்பட்ட ஜாதியைச் சேர்ந்த தன் நண்பர்களின் வீட்டில்தான் தண்ணீர் வாங்கிக் குடிப்பார். தம்ளரில் வாய்வைத்து மகிழ்ச்சியாகக் குடிப்பார். அவர்கள் வீட்டில் தரும் முறுக்கு, வடையெல்லாம் வாங்கிச் சாப்பிடுவார்.

இவையெல்லாம் பெரியாரின் அம்மாவுக்குத் தெரிந்தது. ‘அய்யையோ… நம்ம ஜாதிப் பெருமை கெட்டுப் போச்சே’ என்று பெரிதாகக் கத்தினார். அதைக் கேட்டு பெரியார் கவலைப்படவில்லை.

‘சேரக் கூடாத ஜாதிப் பையன்களுடன் சேர்ந்து முரடனாகி விட்டாய். உன்னை சும்மா விடக் கூடாது’ என்று பெரியார் அம்மா ஒரு முடிவுக்கு வந்தார்.

பெரியாரின் கால்களுக்கு விலங்கு போடப்பட்டது. பெரியார் என்ன செய்தார், தெரியுமா? அந்த விலங்குகளை கைகளில் தூக்கிக் கொண்டு அந்தப் பையன்களுடன் விளையாடப் போய்விட்டார்.

பத்து வயது வரைதான் பெரியார் படித்தார். அதற்குப் பிறகு அவர் பள்ளிக்கூடமே போகவில்லை.

– கதை : சுகுமாறன்

23
கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவைகொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை5th May 2017
புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!5th May 2017புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!

மற்ற படைப்புகள்

2017_may_s25
மே
5th May 2017 by ஆசிரியர்

பெரியாரின் கதை – 2

Read More
2017_may_s23
மே
5th May 2017 by ஆசிரியர்

கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை

Read More
2017_may_s6
மே
5th May 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
மே
1st May 2017 by ஆசிரியர்

ஒரு பக்கம் அலை; மறுபக்கம் அமைதி – ஏன்?

Read More
2017_may_s2
மே
5th May 2017 by ஆசிரியர்

கோடை விடுமுறைப் பயன்!

Read More
2017_may_s14
மே
5th May 2017 by ஆசிரியர்

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • மூளையிலிருந்து நேரடியாக
    18th November 2025
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p