• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!

2017_may_s29
மே

எதிர்கால மனிதர்களுக்காக 7 புதிய உலகங்கள் தயாராக உள்ளன. நமது சூரியனைச் சுற்றி 8 கோள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல் நாம் பல்வேறு நட்சத்திரங்களைச் சுற்றி பல கோள்கள் இருப்பதையும் பூமியைப்போன்ற பல கோள்கள் இருப்பதையும் பிரபஞ்ச ரகசியத்தொடரில் படித்திருக்கிறோம். நாசா விண்வெளி ஆய்வு நிலையம் கெப்ளர் விண்வெளி ஆய்வு மூலம் பூமி போன்ற பல கோள்கள் உள்ள விண்மீன்களை தொடர்ந்து ஆய்வுசெய்துகொண்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டு ஆல்பா அக்வேரி எனப்படும் கும்ப ராசி விண்மீன் மண்டலத்தின் அதிக வெளிச்சம் கொண்ட விண்மீனை ஆய்வு செய்துவந்தபோது அதன் அருகில் ஒரு சிறிய அளவு வெண்புள்ளி மிகவும் மங்கலாகவும் அடிக்கடி ஒளி மறைந்து பிறகு அதிகரித்தும் காணப்பட்டது. மிகவும் மங்கலாக காணப்பட்ட இந்த விண்மீனுக்கு தாராப்பிஸ்ட் 1 என்று பெயர் சூட்டி அதைக் கதிரியக்கத் தொலைநோக்கியால் ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது இதுவரை நாம் கேள்விப்பட்ட கோள்களிலேயே முழுக்க முழுக்க கடல், கடற்கரை, தரை, மலை, சமவெளி என அனைத்தையும் தன்னகத்தே அடக்கிய 4 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அதேபோல் நமது துருவப் பகுதிகளைப் போன்றே உறைபனியைக் கொண்ட கோள்களும் அங்கே இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த விண்மீன் நமது பூமியிலிருந்து சுமார் 44 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்த விண்மீனைச் சுற்றி 7 விண்மீன்கள் உள்ளன என்று கண்டுபிடித்த வானியல் ஆய்வாளர்கள், இதில் 3 கோள்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வானியல் ஆய்வாளர் மைக்கேல் கில்லான் கூறியபோது, இவற்றில் நீர் மற்றும் உயிர் வாழ்க்கைக்கான மூலக்கூறுகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. அனைத்துக் கோள்களும் சீரான சுற்றுப் பாதையில் பயணிப்பதால் இங்கு பூமியைப் போன்ற காலநிலை மாற்றங்கள், பருவச் சூழல்கள், மழை மற்றும் புயல்கள் தோன்றும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது எனக் கூறுகிறார்.

தாராப்பிஸ் விண்மீன் நமது சூரியனைவிட மிகவும் சிறிய விண்மீன் ஆகும். இந்த விண்மீனைச் சுற்றி 7 கோள்கள் இருப்பது மிகவும் வியப்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. முக்கியமாக சூரியனைப் போன்ற நடுத்தர விண்மீன்கள் மட்டுமே உயிரோட்டமான கோள்களைத் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் என்று கூறிவந்த நிலையில் சூரியனைவிட பல மடங்கு மிகவும் குறைவான வெப்பம் கொண்ட சிறிய விண்மீன் உயிரோட்டமான கோள்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது வானியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் புதிய தகவலாகவே படுகிறது. இந்தக் கோள்கள் அனைத்தும் சில மணி நேரங்களில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சில நாட்களில் தனது விண்மீனையும் சுற்றிக் கொள்கின்றன.

கலீஸ் என்ற விண்மீனைச் சுற்றிப் பல பெரிய கோள்கள் இருப்பது குறித்து 2009-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோள்கள் அனைத்தும் நமது பூமியைவிட மிகப் பெரியவை. அக்கோள்களில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். அங்கு மனிதர்கள் சென்றால் அவர்களால் நகரவே முடியாது. அதுமட்டுமல்லாமல் இங்கு 60 கிலோ எடைகொண்ட ஒரு மனிதர் அக்கோளுக்குச் சென்றால் அவரின் எடை 400 கிலோ ஆக மாறியிருக்கும். ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள கோள்கள் முழுக்க முழுக்க நமது பூமியை ஒத்த கோள்கள் ஆகும். இக்கோள்களுக்கு தாராப்பிஸ்ட் B,C,D,E,F,G,H என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை முழுக்க முழுக்க பூமியின் மாதிரியைப் போன்றே உள்ளன.

புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்தக் கோள்களில் மனிதர்கள் வாழக்கூடியத் தன்மைகள் உள்ளனவா என்பது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்திய பின்பே உறுதியாகக் கூற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

– சரவணா இராசேந்திரன்

23
பெரியாரின் கதை - 2பெரியாரின் கதை - 25th May 2017
மீண்டு எழும் தனுஷ்கோடி5th May 2017மீண்டு எழும் தனுஷ்கோடி

மற்ற படைப்புகள்

மே
1st May 2017 by ஆசிரியர்

ஒரு பக்கம் அலை; மறுபக்கம் அமைதி – ஏன்?

Read More
2017_may_s6
மே
5th May 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_may_s5
கதை கேளு கதை கேளுமே
5th May 2017 by விழியன்

கானக்குயிலும் கனராஜனும்

Read More
2017_may_s31
மே
5th May 2017 by ஆசிரியர்

மீண்டு எழும் தனுஷ்கோடி

Read More
2017_may_s17
மே
4th May 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு

Read More
2017_may_s12
மே
5th May 2017 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p