• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மீண்டு எழும் தனுஷ்கோடி

2017_may_s31
மே

நீண்ட நாட்களாக நான் காண விரும்பிய தீவான _ கடல் சீற்றத்தால் அழிந்துபோன தனுஷ்கோடி துறைமுக நகரை நாங்கள் குடும்பத்தோடு சென்று பார்த்தோம்.

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி உள்ளது.

சுற்றுலா வருபவர்களுக்காக உள்ள சில கடைகள், மற்றும் சில குடிசை வீடுகள் மட்டுமே ஊரில் இப்போது இருக்கின்றன.

அங்கு இருந்த 65 வயது பெரியவர் ஒருவர், “எனக்கு வயது 12 இருக்கும்போது கடல் நீர் உள்ளே புகுந்து ஊரையே தன்னோடு இழுத்துக்கொண்டு போனபோது, அதோ அங்கே தெரியுதே அந்த 20 அடி மணல்மேட்டில் ஏறி தப்பித்தேன்’’ என்று இன்னமும் கண்களில் பயத்தோடு சொல்லும்போது அந்தக் கொடுமை எங்கள் மனக்கண்களில் வந்துபோனது.

டிசம்பர் 23ஆம் தேதி 1964 அன்று நடந்த அந்த அமைதிக்கடலின் கோரத்தாண்டவத்தால் அழிந்தவர்கள் அங்கு பெரும் பகுதியாக வாழ்ந்த மீனவர்களும், பார்ப்பனர்களும் ஆவர்.

பார்ப்பனர்கள் இங்கு இருந்துதான் நாள்தோறும் இராமேசுவரம் கோயிலுக்குச் சென்று கோயில் பணிகளை செய்தார்களாம்.

இந்த நகரத்தின் இரண்டு புறமும் பாக் வளைகுடாவும் (றிணீறீளீ தீணீஹ்), லட்சத்தீவு கடலின் ஒரு பகுதியான மன்னார் வளைகுடாவும் எல்லையாக உள்ளன. அலைகள் வேகமாக உள்ள பாக் வளைகுடா அந்தப் புயலின்போது ஒன்றும் செய்யவில்லை. ஆனால், எப்போதும் அமைதியாக இருக்கும் மன்னார் வளைகுடாக் கடல் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து, வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்டபோது “மினி சிங்கப்பூர்’’ என்றழைக்கப்பட்ட தனுஷ்கோடியை அழித்துவிட்டது. பக்கத்து நாடான இலங்கையின் சில பகுதிகளையும் சேர்த்தே அழித்துவிட்டது.

நாங்கள் எல்லோரும் இந்தக் கடலில்தான் 250 அடி வரை உள்ளே சென்று குளித்தோம். ஒரு பெரிய குளம் போன்று-தான் அது அப்போது எங்களுக்குத் தோன்றியது. ஆனால், இந்த கடல்தான் அந்த புயலடித்தபோது ஊரையே நாசப்படுத்தியுள்ளது என்பதை நம்பவே முடியவில்லை.

இடிந்து கிடக்கும் ரயில்வே நிலைய தண்ணீர்த் தொட்டி பகுதியும், பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட தேவாலயமும்,  சுமார் 200 ஆண்டுகள் பழைமையான மருத்துவமனையும் புயலின் பாதிப்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. கடல் சீற்றத்தால் அழிந்துபோன அழகான நகர் வரிசையில் தனுஷ்கோடி நமக்கு இன்றும் சாட்சியாக இருக்கிறது.

அங்கிருந்த ஒரு கடைக்காரர் எங்களிடம் பேசியபோது, “இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள “ராமர் பாலம் என்று நம்பப்படுகின்ற ஒன்று இல்லை. பவளத் திட்டுக்களான பாறைகளும் அவை’’ என்று சொன்னார். அவர் மட்டுமல்ல அந்த ஊரில் மணல் திட்டுகளுமே இருக்கும் மற்றவர்களும்  அப்படித்தான் சொன்னார்கள். தனுஷ்கோடி என்ற தீவு அந்தப் புயலுக்குப் பிறகு காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

அங்கே போடப்பட்டுள்ள புதிய சாலை வசதியால் சுற்றுலாத் தளமாக விரைவில் மீண்டு எழும் தனுஷ்கோடி என்று காத்திருக்கிறார்கள் இராமேஸ்வரம் தீவு மக்கள்.

_ இ.ப.இனநலம்,

பெரியார் மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்.

21
புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!5th May 2017
பெரியார் திடலுக்கு கல்விச் சுற்றுலா!5th May 2017பெரியார் திடலுக்கு கல்விச் சுற்றுலா!

மற்ற படைப்புகள்

2017_may_s29
மே
5th May 2017 by ஆசிரியர்

புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!

Read More
2017_may_s3
மே
5th May 2017 by ஆசிரியர்

மண்டையில முடி முளைச்சதுக்கு பதிலா…

Read More
2017_may_s32
மே
2nd May 2017 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2017_may_s12
மே
5th May 2017 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

Read More
2017_may_s30
மே
1st May 2017 by ஆசிரியர்

கணிதப் புதிர்

Read More
2017_may_s14
மே
5th May 2017 by ஆசிரியர்

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p