• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 3

2017_june_1_b41
ஜூன்

 

பெரியாருக்கு 12 வயது.

அப்பாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். வியாபாரம் செய்வதில் கெட்டிக்காரர் ஆனார்.

பெரியார் ஓய்வு நேரத்தில் கடைக்கு வருகிறவர்களிடம் வாதம் செய்வார். எந்த விஷயத்தைக் கேட்டாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பார்.
‘எல்லாம் ஆண்டவன் செயல். தலைவிதிப்படி தான் நடக்கும்’ என்று சொன்னால் நம்பமாட்டார்.
ஒரு சமயம் பெரியார் ஒரு வம்பு செய்தார்.

ஈரோட்டு கடைத் தெருவில் ராமநாத அய்யர் என்பவர் கடை வைத்திருந்தார். அவருக்கு தலைவிதி மீது அதிக நம்பிக்கை.
‘எது வந்தாலும் அதற்கு தலைவிதிதான் காரணம்’ என்பார் ராமநாத அய்யர்.

‘நீர் சொல்வது உண்மைதானா? எல்லாவற்றையும் தலைவிதி என்று ஏற்பீரா?’ என்று பதிலுக்குக் கேள்வி கேட்டார் பெரியார்.
‘ஏற்கிறேன்’ என்றார் அய்யர்.

அய்யர் கடைமுன் தட்டி கால் கொடுத்து தூக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தட்டியை பெரியார் காலால் தட்டிவிட்டார். தட்டி அய்யரின் தலைமீது விழுந்தது.
அய்யர் கோபத்துடன் திட்டிக்கொண்டு பெரியாரை துரத்தினார்.

“தலைவிதி தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறீர்?” என்று சொல்லிக் கொண்டே பெரியார் ஓடிவிட்டார்.

பன்னிரண்டு வயதிலே பெரியாருக்கு ‘தலைவிதி’ என்ற முட்டாள்தனத்தில் நம்பிக்கை இல்லை.

பெரியார் செய்த விளையாட்டு

பெரியாருக்கு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 19. அவருடைய மனைவி பெயர் நாகம்மை. நாகம்மை மீது பெரியாருக்கு மிகுந்த அன்பு இருந்தது. நாகம்மையை தன் கொள்கை வழிக்கு மாற்றுவதற்காக பெரியார் செய்த செயல்கள் விளையாட்டாகவும், குறும்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.

பெரியாருடைய அம்மா மதப்பழக்க வழக்கங்களில் ஈடுபாடு உடையவர். வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். அவருடன் சேர்ந்து நாகம்மையும் விரதம் இருக்க வேண்டும். இது பெரியாருக்கு

பிடிக்கவில்லை.

பெரியாருக்கு மாமிச உணவு மீது எப்போதும் கொள்ளை ஆசை. விரத நாளன்று வீட்டில் மாமிச உணவு சமைக்கக் கூடாது என்பது அம்மாவின் உத்தரவு.

நாகம்மை பெரியாருக்கு மட்டும் தனியாக மாமிச உணவு சமைத்துக் கொடுப்பார். பிறகு தீட்டுப் போக குளித்து விடுவார். பெரியார் சமையலறைக்குள் நுழையக் கூடாது. பெரியாரின் அம்மா உத்தரவுப்படி நாகம்மை நடந்துகொண்டார்.

இது பெரியாருக்குப் பொறுக்கவில்லை. அவருடைய விளையாட்டுப் புத்தி வேலை செய்தது. ஒரு வெள்ளிக்கிழமை நாகம்மை நோன்பு இருந்தார். விரத நாளன்று தனக்கு மாமிச உணவு வேண்டுமென்று பெரியார் பிடிவாதம் செய்தார்.

நாகம்மையும் மாமிச உணவு சமைத்தார். பிறகு குளிக்கப் போனார். அந்த சமயம் பார்த்து பெரியார் சமையலறைக்குள் நுழைந்தார். நாகம்மை உண்பதற்குரிய விரதச் சோறு தனியாக இருந்தது. ஒரு எலும்புத் துண்டை அந்தச் சோற்றுக்குள் புதைத்து வைத்தார்.

 

நாகம்மை சாப்பிடும்போது அந்த எலும்புத் துண்டு தலையை நீட்டியது. பயந்து போனார். இது பெரியாருடைய விளையாட்டு என்று புரிந்துகொண்டார். பெரியாருடைய விருப்பப்படி நாகம்மை விரதம் இருப்பதை விட்டு விட்டார்.

15
வாழ்த்துகள் பிஞ்சுகளே!வாழ்த்துகள் பிஞ்சுகளே!2nd June 2017
மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியைப் படைத்த மாணவர்...2nd June 2017மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியைப் படைத்த மாணவர்...

மற்ற படைப்புகள்

2017_june_1_b48
ஜூன்
2nd June 2017 by ஆசிரியர்

பிஞ்சுகளை வருத்தும் பிழையான எண்ணங்கள்!

Read More
2017_june_1_b43
ஜூன்
3rd June 2017 by ஆசிரியர்

என்ன பார்க்கிறீகங்க?

Read More
2017_june_1_b53
ஜூன்
5th June 2017 by ஆசிரியர்

தந்தையைப் போற்றுவோம்!

Read More
2017_june_1_b15.1
ஜூன்
3rd June 2017 by ஆசிரியர்

வண்ணம் தீட்டி விடுவியுங்கள்!

Read More
2017_june_1_b52
ஜூன்
5th June 2017 by ஆசிரியர்

நன்றி சொல்லப் பழகுவாய்

Read More
2017_june_1_b12
ஜூன்
2nd June 2017 by ஆசிரியர்

மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியைப் படைத்த மாணவர்…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p