• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பாட்டி சுட்ட வடையும் ஏமாந்த நரியும்

2017_sep_s4
செப்டம்பர்

– தம்பி அழ.பிரபு

நரிக்கூட்டத் தலைவன் நரி, தமது பாரம்பரியத்தைக் கெடுத்த நரியை வசைபாடிக்-கொண்டு இருந்தது. தங்கள் உணவுக் கலாச்சாரத்தையே மாற்றும்படியான செய்கையை செய்த நரியினை அதன் அம்மா நரி, அப்பா நரி, தம்பி நரி, பக்கத்து வீட்டு நரி, எதிர்த்த வீட்டு நரி, ஒத்தக்கால் நரி என எல்லோரும் திட்டித் தீர்த்தனர்.

எல்லாம் அந்த வடையால் வந்தது.

“பசிக்கிற வயித்துக்கு எதைத் தின்னா என்ன? மனசுக்குப் பிடிச்சத சாப்பிடக்கூடாதா? யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுருக்கலாம், அந்த மந்திரி நரிப்பயல்தான் வாய்க்குள் வடையை திணிக்கிற கணம் கையும் களவுமாகப் பிடித்து தலைவரிடம் மாட்டி கொடுத்துவிட்டான்”  என நினைத்து அழுதது நரி.

“பாவம் அந்த காக்கையாவது நிம்மதியா சாப்பிட்டுருக்கும். அதையும் சாப்பிட விடாம பாட்டு பாடு, குத்தாட்டம் ஆடுன்னு ஏமாத்தி கஷ்டபட்டு வடைய லவட்டிகிட்டு வந்தா இவங்க ரொம்பதான் நாட்டாமை பண்றாங்க” எனப் புலம்பியது நரி.

“சரி! நாம் போய் அந்த காக்காகிட்ட மன்னிப்பு கேட்போம்” னு முடிவு பண்ணி காக்கையைப் போய் பாத்துச்சு நரி. சோகமா இருந்த காக்காவிடம் போய் மன்னிப்புக் கேட்ட நரிகிட்ட காக்கையும் வடையை – – தான் பாட்டியிடம் இருந்த ஒத்த வடையை திருடுனதா சொல்லுச்சு.

இரண்டு பேரும் சேர்ந்து பாட்டியிடம் மன்னிப்புக் கேட்க பாட்டி வீட்டிற்கு போனார்கள்..

பாட்டியின் வீட்டருகே சென்றபோது பாட்டி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

பாட்டி ஒரு வடையினை எடுத்து எலி பிடிக்கும் பொறிக்குள் புகுத்திக் கொண்டிருந்தாள்.

“ஏன் பாட்டி இன்னிக்கு வேற வடையை வைக்கிற’’ எனக் கேட்டான் பாட்டியின் பேரன்.

“காலையிலே எலிப்பொறிக்குள் வைக்க வச்சிருந்த பருப்பு வடையை ஒரு காக்கா தூக்கிகிட்டுப் போயிருச்சுடா பேரா.. அதான் உளுந்த வடையை பொறிக்குள்ளாற வைக்கிறேன்” என்று பாட்டி தன் பேரனிடம் புலம்பியது கேட்டது.

“ஆகா! எலியைப் பிடிக்க வச்சிருந்த விஷ வடையைதானே நாம் திருடினோம், அதைப் போயி நரி நீயும் அபகரிச்சு தின்னப்போனியே!” னு வருத்தப்பட்டது காக்கை.

“நல்ல வேளை மந்திரி நரி மட்டும் வரலைன்னா? நான் அந்த வடையை தின்னு செத்துப் போயிருப்பேன்” என காக்காவிடம் அழுதது நரி.

“அது சரி அந்த வடை எங்கே?” என கேட்டது காக்கை.

“அதை அப்பவே நான் எறும்பு புத்துக்குள்ளே தூக்கிப் போட்டுட்டேனே” என்றது நரி.

“வா! நாம் போய் எறும்புகளை காப்பாத்துவோம்” என்று காக்கையும் நரியும் விரைந்தன எறும்பு புற்றை நோக்கி.

அங்கே எறும்புகள் தங்கள் புற்றை தண்ணீரையும் சோப்பையும் கொண்டு நன்றாக கழுவிக் கொண்டிருந்தன.

காக்கை மெதுவாகச் சென்று ஒரு எறும்பிடம் பேச்சு கொடுத்தது. “எறும்பண்ணே! என்ன விஷேசம்.? எல்லோரும் சேர்ந்து உங்க வீட்ட சுத்தப்படுத்திகிட்டு இருக்கீங்க..”

“எவனோ ஒரு களவாணிப்பயல் ஊசிப்போன வடையை எங்க வீட்டுக்குள்ள போட்டுட்டு போயிட்டான். அதை சாப்பிட்டு என் தாத்தா கட்டெறும்புக்கு வயித்தால போயிருச்சு. அதான் மிச்சமிருக்கிற வடையை தூக்கிகிட்டு போயி குப்பைத் தொட்டியில போட்டுட்டு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்துறோம்” என விளக்கம் சொன்னது எறும்பு.

நரி முகத்தை மறைத்துக்கொண்டு, வாயை உம்மென வைத்துக் கொண்டு காக்கையை முறைத்தது.

பிறகு இருவரும் தனித்தனியே தம் வீட்டுக்குச் சென்றனர்.

கதை சொல்லும் நீதிகள்

1.     அடுத்தவர் வீட்டு முன்னால் நம் உணவுப் பண்டங்களை போடக்கூடாது.

2.     எந்தப் பொருளையும் திருடக்கூடாது; ஏமாற்றி அபகரிக்கக் கூடாது; அதனால் நமக்குப் பயன் விளையாது.

3. ரயில் நிலையங்களில், பொது இடங்களில் கேட்பாரற்று இருக்கும் பொருள்களை எடுக்காதீர்கள், வெடிகுண்டாக இருக்கலாம் என்று அறிவிப்பு செய்யப்படுகிறதே… அதுவும் இப்படித்தான். <

36
துள்ளல் உணர்வைத் தந்த பெரியார் பிஞ்சு27th September 2017
கிளியோபாட்ரா27th September 2017கிளியோபாட்ரா

மற்ற படைப்புகள்

2017_sep_s46
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு

Read More
2017_sep_s23
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

எழுத்தோவியம்

Read More
2017_sep_s18
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

இணையத்திலிருந்து

Read More
2017_sep_s21
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

பொது நலமே இவர் சுயநலம்!

Read More
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

அதிக நேரம் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி

Read More
2017_sep_s40
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p