• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தேசிய விழாவில் பாராட்டுப் பெற்ற பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த கதை

2017_dec_s21
டிசம்பர்

சாகித்ய அகாடமியின் சார்பில் விஜயவாடாவில் பால சாகித்ய புரஷ்கார்  2017 விருது வழங்கும் விழாவில் The Evolution of Chidren’s literature    கருத்தரங்கமும்  வாசிப்பு அமர்வும் நடைபெற்றது.

நவம்பர் 14ஆம் தேதி அன்று பால சாகித்ய புரஷ்கார்  2017 விருது வழங்கும் விழாவில் அஸ்ஸாமி, பெங்காலி, பொடோ, டோகிரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடா, காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி நேப்பாலி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 24 மொழிகளில் குழந்தைகளுக்கான கதை, பாடல், நாடக நூல்களை படைத்தளித்த எழுத்தாளர்களுக்கு ”பால     சாகித்ய புரஷ்கார்” விருது வழங்கப்பட்டது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் வேலு சரவணன் அவர்களுக்கு தமிழ் மொழிக்காக இவ்விருதினை வழங்கிச் சிறப்பித்தது சாகித்ய அகாடமி. நம் பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் குழந்தைகளுக்கு நன்கு பழக்கமானவர் வேலு மாமா என்றழைக்கப்படும் வேலு சரவணன்.

நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற குழந்தைப் பாடல்கள் வாசிப்பு அமர்வில் தமிழில் கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் தான் எழுதிய குழந்தைப் பாடல்களைப் பாடி சிறப்பித்தார். தெலுங்கு, பொடோ, இந்தி, அஸ்ஸாமி, மராத்தி, மைதிலி, மொழியிலும் குழந்தைப் பாடல்கள் எழுதும் கவிஞர்களும் இதில் பங்கேற்றனர்.

கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் பாடல்களை ராகத்தோடு ஆடிப்பாடிக் காட்டியதால் மொழி புரியாதவர்களும் கைதட்டி தலையாட்டி ரசித்தனர்.

நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற குழந்தைக் கதைகள் வாசிப்பு அமர்வில் பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் கலந்து கொண்டு “பெரியார் பிஞ்சு” மாத இதழில், தான் எழுதிய ‘கோபுரத்துப் புறாக்கள்’ கதையை வாசித்தார். தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் குழந்தைகளுக்கான கதை எழுதி வாசித்தவர்கள் அனைவரும் நகைச்சுவையான, புராணங்களைத் தழுவிய கதைகளை வாசித்தபோது மூடநம்பிக்கையற்ற பகுத்தறிவு சார்ந்த கதைகளை தமிழிலும், அதையே ஆங்கிலத்திலும் வாசித்தது அனைவரையும் ஈர்த்தது.

மு.கலைவாணன், வேலு சரவணன், மு. முருகேஷ் ஆகிய மூவரும் சாகித்ய அகாடமி விழாவில் பங்கேற்று தமிழ் நாட்டுக்கும், தமிழின் குழந்தை இலக்கியங்களுக்கும் பெருமை சேர்த்தது பாராட்டுக்குரியது.

19
பகுத்தறிவுப் பாலகன்பகுத்தறிவுப் பாலகன்1st December 2017
வரைந்து பழகுவோம்1st December 2017வரைந்து பழகுவோம்

மற்ற படைப்புகள்

2017_dec_s3
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

கலசமில்லாக் கோபுரம்

Read More
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்? அம்மன் சக்தியாலா?

Read More
2017_dec_s26
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2017_dec_s7
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பிஞ்சு செய்திகள்

Read More
2017_dec_s23
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2017_dec_s11
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சு – தேசிய சதுரங்கப் போட்டியில் வென்ற பெரியார் பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p