• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 13

2018_apr_s15
ஏப்ரல்


– சுகுமாரன்

பெரியாரின் கொள்கை

பெரியார் வழக்கம்போல ஒரு கூட்டத்தில் கடவுளை கல் என்றும், அதை வணங்குபவனை காட்டுமிராண்டி என்றும் பேசினார்.

கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு கோபம் வந்துவிட்டது.

பெரியாரிடம் சென்றார். அவரைப் பார்த்து, நீங்கள் கடவுளை கல் என்று சொல்லலாமா? இது சரியா? என்று கேட்டார்.

அதற்குப் பெரியார், ஆமாம், சொன்னேன். என்ன தப்பு. வேண்டு-மானால் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் என்ற பெரியார் கோயிலுக்குப் புறப்பட்டார். கையிலிருந்த தடியை தரையில் தட்டினார்.

கேள்வியைக் கேட்டவர், அந்தக் கல்லுக்கு மந்திரம் செய்யப்-பட்டிருக்கிறது. அதனால் அதைக் கடவுள் என்று வணங்குகிறோம் என்றார்.

அதற்குப் பெரியார், கல்லுக்கு மந்திரம் சொல்லி கடவுளாக்க முடியுமானால், ஜாதியால் தாழ்த்தப்-பட்டுள்ள மனிதர்களுக்கு மந்திரம் சொல்லி அவர்களை உயர்ந்த ஜாதியார் ஆக்க முடியாதா? என்றார்.

கேள்வி கேட்டவர் பெரியாரின் பதில் கேள்வியால் திகைத்துப் போனார். பின் பெரியார் சொன்னதை ஏற்றார்.

பெரியாருடைய கொள்கை மனிதனுக்குத் தொண்டாற்றுங்கள் என்பதுதான். புரிந்ததா?

கடவுளை மற, மனிதனை நினை. மதங்கள் மனித ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்றன. மூட நம்பிக்கையை வளர்க்கின்றன.

===================

பெரியார் எளிமையே உருவானவர்.

ஒருமுறை தென்ஆற்காடு மாவட்டம் திருக்கோயிலூரில் ஆதிதிராவிடர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் அதில் கலந்துகொண்டு பேசினார்.

உணவு வேளை! பெரியாரை காளியப்பா என்பவர் உணவு உண்ண அழைத்துச் சென்றார். பெரியாருக்கு உணவு பரிமாறப்பட்ட இடம் எது தெரியுமா? ஒரு மாட்டுக்கொட்டகை. வைக்கோல் தரை! அதன்மேல் துணி விரிக்கப்பட்டது. அங்கே பெரியார் அமர்ந்தார். வாழை இலைகூட இல்லை. தையல் இலையில் சோறு, பரங்கிக்காய் குழம்பு. அது குழம்பாக இல்லை, ரசம் மாதிரி இருந்தது.

பெரியார் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவாறு சாப்பிட்டார்.

பெரியார் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்கிறவர். கூட்டங்களை ஏற்பாடு செய்கிறவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவர். அவர்கள் தருகிற எப்படிப்பட்ட உணவையும் சாப்பிடுவார்.

இந்த எளிமை போற்றுதலுக்குரியது.

இக்காலத்தில் விளம்பரத் தலைவர்கள் பலர் உள்ளனர். பெரியார் விளம்பரத்தில் விருப்பம் இல்லாதவர். எல்லோருக்கும் எளிய வாழ்வே ஏற்றதென்று அடிக்கடி கூறுவார்.

என்னை நான் சின்னவன் என்றும், குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று ஒருமுறை பெரியாரே கூறியுள்ளார்.

23
என் நட்புஎன் நட்பு10th April 2018
வியப்பிற்குரிய வாழ்க்கை ஸ்டீபன் ஹாக்கிங்10th April 2018வியப்பிற்குரிய வாழ்க்கை ஸ்டீபன் ஹாக்கிங்

மற்ற படைப்புகள்

ஏப்ரல்
10th April 2018 by ஆசிரியர்

நெருப்புக் கோழி

Read More
2018_apr_s21
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

படக்கதை : பாபாசாகேப் அம்பேத்கர்

Read More
2018_apr_s25
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

கிரேக்கக் குடியரசு

Read More
2018_apr_s19
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2018_apr_s17
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2018_apr_pinju1
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p