• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை

y10.jpg - 669.64 Kb
ஜூன்
பெரியாரின் நேரந் தவறாமை

 

அறுபது வருடங்களாக பெரியார், தான் கலந்து கொண்ட கூட்டங்களுக்குக் காலதாமதமாக போனது கிடையாது. மாலையில் கூட்டம் நடக்கும் ஊருக்கு காலையிலேயே போய்விடுவார். தாமதம் என்பதை பெரியார் அறியார்.
ஒருமுறை அவருக்கும் ஒரு சோதனை வந்தது. பெரியார் ஒரு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த வண்டி (வேன்) பழுதாகி விட்டது, வண்டியை பழுது நீக்க  போதிய நேரமில்லை. பெரியார் தடியை தரையில் தட்டிக்கொண்டு செய்வதறியாது நின்றார்.

வழக்கமாக சீக்கிரமாக வந்துவிடும் பெரியாரைக் காணாமல் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பெரியார் இல்லாமல் கூட்டமும் தொடங்கிவிட்டது, தொடக்கப் பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு லாரி வந்து நின்றது. எல்லோரும் லாரியை பார்த்தார்கள். நம் பெரியார் லாரியிலிருந்து இறங்கினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் ஒரு நிமிடம் திகைத்தது. ‘சரியான நேரத்திற்கு வந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு நிம்மதி’ என்று சொல்லிக் கொண்டே மேடையில் வந்து அமர்ந்தார். சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று பெரியார் செய்த செயலைக் கண்டு எல்லோரும் வியந்தனர்.

காங்கிரசில் பெரியார் இருந்த காலத்தில், இராஜாஜி அவர்கள் ஒருமுறை பெரியாரை அவசரமாகக் காணவந்தார். இராஜாஜி முகத்தில் கவலைக்குறி காணப்பட்டது. ‘என்ன?’ என்று கேட்டார் பெரியார்.

‘ஒரு பிரச்சினை. எவ்வளவு சிந்தித்தும் எனக்கு விடை தெரியவில்லை’ என்றார் இராஜாஜி.

‘சொல்லுங்கள்’ என்றார் பெரியார்.

y9.jpg - 166.35 Kb

இராஜாஜி பிரச்சினையைச் சொன்னார். பெரியார் தீர்வு கூறினார். அதைக் கேட்ட இராஜாஜி தயங்கினார். ‘மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்றார்.

“மக்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்குபவர்கள் பொதுவாழ்வுக்கு லாயக்கற்றவர்கள். மக்கள் பின்னால் நாம் செல்லக்கூடாது. மக்களை நாம்தான் சரியாக வழிநடத்த வேண்டும்” என்றார் பெரியார்.

இன்னொரு சம்பவம்.

மணியாச்சி ரயில் நிலையம். தந்தை பெரியாரும் _ முத்தமிழ்க் காவலர் என்று பின்னாளில் அழைக்கப்பட்டவரும் பெரியாரின் தொண்டருமான கி.ஆ.பெ.விசுவநாதமும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பார்ப்பனர்கள் தங்கள் இருவரையும் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்வதை கி.ஆ.பெ.விசுவநாதத்திடம் காட்டிச் சொன்னார் பெரியார், ‘அவர்கள் இருவரும் நம்மைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராகப் பாடுபடுகின்றவர்கள் நாம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றார்கள்.

அவர்களுக்குத் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிரி யார் என்பது தெரிகிறது? ‘இதுபோல்  நமக்காகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்று தெளிவாக அறியும் சக்தி நம் மக்களுக்கு உள்ளதா? இதைச் சிந்தியுங்கள்!’ என்றார்.
பெரியார் பெரிய சிந்தனையாளர்.<

29
பெரியார் பிஞ்சு பழகுமுகாம் - 2018பெரியார் பிஞ்சு பழகுமுகாம் - 201813th June 2018
செய்து அசத்துவோம் அழகிய கைப்பை14th June 2018

மற்ற படைப்புகள்

ஜூன்
13th June 2018 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை

Read More
ஜூன்
14th June 2018 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் அழகிய கைப்பை

Read More
ஜூன்
12th June 2018 by ஆசிரியர்

சுயமரியாதை கொள்!

Read More
ஜூன்
13th June 2018 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

Read More
ஜூன்
13th June 2018 by ஆசிரியர்

சின்னச் சின்னச் கதைகள்

Read More
y27.jpg - 809.19 Kb
ஜூன்பழகுமுகாம்
13th June 2018 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு பழகுமுகாம் – 2018

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p