• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இவ்வுலகம் பஞ்சபூதத்தால் ஆனதா ?

ஜூலை

இந்த உலகம் பஞ்சபூத சேர்க்கையால் ஆனது. இந்த உடல் பஞ்சபூத சேர்க்கை என்று பரம்பரையாகச் சொல்லி வருகின்றனர். இது பெரும் தவறு ஆகும். இந்த அறிவியல் சார்ந்த செய்தியை பிஞ்சுகள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

காரணம், பஞ்சபூதம் என்பதே தவறு!

1. நிலம், 2. நீர், 3. காற்று, 4. நெருப்பு, 5. வான் என்ற அய்ந்தும் பஞ்சபூதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அய்ந்தும் சேர்ந்தே உலகு உருவாகிறது, உடல் உருவாகிறது என்றால் இந்த அய்ந்தும் தனிப் பொருட்களாக இருக்க வேண்டும் (தனிமங்களாக இருக்க வேண்டும்).

நிலம், நெருப்பு, நீர், காற்று, வான் என்ற அய்ந்தில் முதலில் நீர் என்பதை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீர் என்பது ஒரு தனிமமா? தனிப் பொருளா? என்றால் இல்லை.

ஹைட்ரஜன்+ஆக்ஸிஜன் என்ற இரண்டு வாயுக்களும் ஒன்றிணைந்து அழுத்தத்திற்கு உட்படும்போது நீர் உருவாகிறது. ஆக, நீர் என்பது ஒரு சேர்மம். சேர்மம் எப்படி ஒரு தனிப் பொருளாகும்? தனிப்பொருளாக இல்லாதது எப்படி ஒரு பூதமாக இருக்கமுடியும்?

அடுத்து காற்றை எடுத்துக் கொள்ளுங்கள். காற்று என்பது ஒரு சேர்மம். அதில் ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் என்று பல வாயுக்கள் அடங்கியுள்ளன. எனவே, காற்று என்பது ஒரு தனிப் பொருள் அல்ல. எனவே, அதை ஒரு பூதமாகச் சொல்வது தவறு. மூன்றாவதாக நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நிலம் என்பது ஒரு தனிப் பொருளா? இல்லையே! அதில் எண்ணற்ற கனிமப் பொருட்கள், மண், எண்ணெய்ப் பொருட்கள் என்று ஏராளம் உள்ளன. எனவே, நிலம் என்பதும் ஒரு தனிப் பொருள் அன்று. எனவே, தனிப் பொருள் அல்லாத நிலத்தை ஒரு பூதம் என்பது தவறு.

அடுத்து நெருப்பு. நெருப்பு என்பது ஒரு பொருளா? இல்லை. அது பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றல். ஆற்றல் வேறு. பொருள் வேறு. மின்னாற்றல், காந்த ஆற்றல் போல நெருப்பு என்பது வெப்ப ஆற்றல். ஆற்றல் என்பது தற்காலிக வெளிப்பாடு.

உரசுவதால் உருவாகக்கூடிய வெப்ப வெளிப்பாடு. எனவே, அதை ஒரு பூதமாகச் சொல்வது தவறு.

இறுதியாக ஆகாயம். -அதாவது வான். ஆகாயம் என்பது ஒரு பொருளே அல்ல. உயரே தெரிவதால், அது ஏதோ ஒரு திரை போன்ற ஒன்று என்று கருதப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் உயரே இல்லை.

ஆகாயம் என்றால் வெறுமை. அதாவது வெளிப்பரப்பு (வெட்டவெளி). சென்று கொண்டேயிருந்தால் எதுவும் தென்படாது. நமக்குத் தெரிகின்ற திரை போன்ற காட்சி நமது கண்ணின் பார்வை எல்லை! அவ்வளவே!

ஒன்றுமில்லை என்பது ஒரு பொருளா? எனவே, வெறுமை என்பது ஒரு பொருள் அல்ல.

இவ்வாறு பஞ்சபூதங்கள் என்று கூறப்படுகின்ற எந்த ஒன்றும் தனிப் பொருள் அல்ல. (எனவே, அவை பூதங்களும் அல்ல.) ஆக, அவை சேர்ந்து இந்த உடல் உருவாகிறது; இந்த உலகம் உருவாகிறது என்பது அடிமுட்டாள் தனமாகும்; அறியாமையாகும்! <

26
மந்திரியை மடக்கிய குட்டிக்கர்ண  மன்னன் !மந்திரியை மடக்கிய குட்டிக்கர்ண மன்னன் !6th July 2018
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்6th July 2018

மற்ற படைப்புகள்

ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
கதை கேளு கதை கேளுஜூலை
6th July 2018 by விழியன்

குட்டி முயல் பூவிழி

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

பாகிஸ்தானை கலக்கும் பதினொரு வயது பிஞ்சு

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

மலேசிய

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

தென்மேற்குப் பருவக்காற்றின் பயணம்

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவன் வள்ளல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p