• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியாரின் பார்வை

ஜூலை

பெரியாரின் பார்வை கூர்மையானது. இங்கு நான் அவருடைய கண்பார்வையைக் குறிப்பிடவில்லை.

ஒரு விசயத்தை அவர் அலசும் கோணத்தையே குறிப்பிடுகிறேன். உதாரணமாக பெண்கள் விடுதலை பற்றி பெரியார் குறிப்பிட்டுச் சொன்னதைப் பார்க்கலாம்.

‘பெண்கள் விடுதலை ஆண்களால் உண்டாகாது; பெண்களே தங்கள் விடுதலைக்குப் பாடுபட வேண்டும்… எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிக்கு விடுதலை உண்டாகுமா?’

* * *

ஒரு விசயத்தில் கோணம் மட்டுமல்ல, கோணல்கூட பெரியாரின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. சுட்டிக் காட்டுவார்.

மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்று திருத்தம் செய்து வெளியிடப்பட்டிருந்தது.

‘எங்கள் நாடு’ பாடல்.

‘மன்னும் இமயமலை யெங்கள் மலையே’ என்று தொடங்குவது. முதல் இரண்டு பத்திகளிலும் ‘பாரத நாடெங்கள் நாடே’ என்று இடம் பெற்றுள்ளது. மூன்றாவது பத்தியில் ‘ஆரிய நாடெங்கள் நாடே’ என்று திருத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதுகுறித்து 1929-_லேயே தன் கட்டுரையில் எடுத்துக் காட்டினார் பெரியார். (10.02.1929)

பெரியாரின் பார்வை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்ல நேரம் பார்த்துத் தானே செய்ய வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டபோது,

பெரியார் ‘டக்’கென்று பதில் சொன்னார்.

இராமனுடைய திருமணம் வசிஷ்டர் என்னும் ரிஷியால் நல்ல நேரம் பார்த்துத்தான் செய்யப்பட்டது. ராமன்_சீதை வாழ்க்கை எவ்வளவு சின்னாபின்னப்பட்டது? என்று கேட்டார்.

பெரியார் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற முறையில் பேசுவார்.

‘வழா வழா… கொழா… கொழா…’ காரியம் கிடையாது. இத்தன்மை பெரியார் பார்வையின் அடிப்படை ஆகும்.


பெரியாரின் சோம்பலின்மை

ஒருசமயம் பெரியார் ஒரு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்குப் பேசச் சென்றிருந்தார். அன்றே வேறொரு கிராமத்தில் நடக்கும் கூட்டத்தில் பேச வேண்டும்.

அந்தக் கிராமத்திலிருந்து செல்ல வாகன வசதிகள் இல்லை. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரியாருக்காக ஒரு குதிரை வண்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் குதிரை வத்தல் தொத்தலாக மெலிந்து காணப்பட்டது. குதிரை வண்டியை இழுத்துச் செல்லுமா என்றே சந்தேகமாக இருந்தது.

பெரியாரும் அவருடன் வந்தவரும் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்கள். வண்டிக்காரன் குதிரையை விரட்டினான். குதிரை மெல்ல நடந்தது. வண்டி மாப்பிள்ளை ஊர்வலம் போல் நகர்ந்தது.

பெரியாருக்கு பொறுக்க முடியவில்லை. அடுத்த கூட்டத்திற்கு நேரமாகிவிட்டது. சோம்பேறிபோல் வண்டியில் உட்கார்ந்து போகமுடியுமா?

பெரியார் வண்டியைவிட்டு இறங்கினார். தடியை கையில் எடுத்துக் கொண்டார். ‘விறுவிறு’ என்று நடந்தார். உடன் வந்தவருக்கு வண்டியை விட்டு இறங்க மனம் வரவில்லை. ஆனால் பெரியார் வேகமாக நடந்துகொண்டிருந்தார்.

சோம்பல் நோய் பெரியாருக்கு வந்தது கிடையாது.

பெரும்பாலும் பெரியார் பகலில் தூங்கமாட்டார். எதையேனும் படித்துக்கொண்டே இருப்பார். படிக்காத நேரங்களில் சிந்தனை செய்வார். தனிமையில் இருக்கும்போது எழுதிக் கொண்டிருப்பார். எஞ்சிய நேரங்களில் நண்பர்களுடன் வாதம் புரிந்து கொண்டிருப்பார்.

பெரியார் சோம்பல் இல்லாதவர், ஊக்கம் நிறைந்தவர்.<

25
அயின்ஸ்ரூலி6th July 2018
தொடர் வண்டி !1st August 2018தொடர் வண்டி !

மற்ற படைப்புகள்

2018_jul_y8
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

மந்திரியை மடக்கிய குட்டிக்கர்ண மன்னன் !

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

மகளதிகாரம்

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

மாற்றம்

Read More
ஜூலை
5th July 2018 by ஆசிரியர்

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவன் வள்ளல்

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

அயின்ஸ்ரூலி

Read More
ஜூலை
6th July 2018 by ஆசிரியர்

இவ்வுலகம் பஞ்சபூதத்தால் ஆனதா ?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p