• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியாரின் தயவு தாட்சணியமின்மை

2018_oct_v9
அக்டோபர் 2018

தந்தை பெரியாரின் கதை

சுகுமாரன்

ஓவியம்: கி.சொ

ஒரு பேட்டியின்போது பெரியார் கூறினார்.

கேள்வி: உங்களுக்கு துன்பம் தருவது எது?

பதில்: என்னைப் புரிந்துகொள்ளாமல் போலித்தனமாக என்னைப் புகழ்வது.

இத்தகைய மனோபாவம் பெரியாருக்கு தயவு தாட்சணியமின்மையைக் கொடுத்தது.

பெரியார் பாதை கொள்கை வழிசெல்வது. பெரியாருக்கு நபர்கள் முக்கியமல்ல. அவர்களின் முகமும் முக்கியமல்ல.

அதனால் அவர் தம்முடைய போராட்டங்களை தம்மை ஆதரித்த கட்சிகளின் ஆட்சியிலும் நடத்தினார். நண்பர்கள் ஆட்சியில் இருந்தபோதும் நடத்தினார்.

1933ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் பெரியார் ரயில்வே தொழிலாளர்களை ஆதரித்துப் போராடி சிறை சென்றார். அப்போது பெரியார் நீதிக்கட்சிக்காரர்.

நீதிக்கட்சித் தலைவர் குமாரராஜா முதலமைச்சராக இருக்கும்போது போராட்டங்கள்  நடத்திச் சிறை சென்றார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். அப்போது முதலமைச்சர் அவருடைய நண்பர் இராஜாஜி.

விநாயகர் சிலை உடைப்புப் போராட்டத்திற்காகச் சிறை சென்றார். இராமர் பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அப்போது முதலமைச்சர் அவர் ஆதரித்த காமராசர்.

தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் பெரியார் போராட்டங்கள் நடத்தத் தயங்கவில்லை. கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

பெரியாரும் -_ இராஜாஜியும் சிறந்த நண்பர்கள்.

ஆனால், கொள்கையில் பெரியார் தென்துருவம், இராஜாஜி வடதுருவம்.

இராஜாஜி அரை நாள் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் அதை எதிர்த்து ஒழித்தார்.

இராஜாஜி இந்தியை ஆதரித்தார். பெரியார் முழு மூச்சாக எதிர்த்தார்.

அரசியலில் பெரியார் இராஜாஜியை எதிர்த்தார். காமராஜரை ஆதரித்தார்.

பெரியார் வழி வேறு. இராஜாஜி வழி வேறு. ஆனால், இருவருடைய நட்பும் மாறவில்லை. மறையவில்லை.

இராஜாஜி பொது மருத்துவமனையில் இருந்தார். இராஜாஜி இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன் பெரியார் அவரைக் காண வந்தார்.

பெரியாருக்கும் உடல் நலமில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க ஒருவர் தள்ளிவந்தார்.

இராஜாஜி நிலைமையைப் பார்த்ததும் பெரியார் கண் கலங்கினார். பெரியாரை இராஜாஜி அருகில் அழைத்தார். பெரியார் அருகில் போனார்.

இராஜாஜியின் கைகள் பெரியார் முகத்தைத் தேடின. இராஜாஜியின் விரல்கள் பெரியாரின் முகத்தை ஆசையோடு தடவின.

இருவருடைய நட்பின் ஆழத்தை நினைத்து அருகிலிருந்தவர்கள் கண் கலங்கினர்.

பெரியாருக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.விற்கும் இருந்த நட்பும் சிறப்பானது.

பெரியார் மருத்துவமனையில் இருந்தார். பலரும் பார்க்க வந்தனர். திரு.வி.க. வந்தபோது பெரியார் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

திரு.வி.க. ஒருமுறை சொன்னார்: நான் இறந்தால் எனக்காக அழுகிறவர் பெரியாராகத்தான் இருக்கும்.  முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்னும் வள்ளுவர் நெறியில் பெரியாரின் நட்பு அமைந்திருந்தது.

24
கடந்த இதழ் சுடோகு விடை:கடந்த இதழ் சுடோகு விடை:5th October 2018
என் உணவு என் உரிமை5th October 2018என் உணவு என் உரிமை

மற்ற படைப்புகள்

2018_oct_v29
அக்டோபர் 2018
6th October 2018 by விழியன்

தும்தும் நம்நம் சாகரா

Read More
2018_oct_v19
அக்டோபர் 2018
5th October 2018 by ஆசிரியர்

என் உணவு என் உரிமை

Read More
2018_oct_v36
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

மகளதிகாரம்

Read More
2018_oct_v42
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

மன்னிச்சூ…

Read More
2018_oct_v35
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

அணுகுண்டால் அழியாதா கரப்பான் பூச்சி?

Read More
2018_oct_v37
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p