• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியாரின் எழுத்துத் திறமை!

2018_nov_v33
நவம்பர் 2018

சுகுமாரன்

ஓவியம்: கி.சொ

பெரியார் சொன்னதைச் செய்வார். செய்வதைச் சொல்வார்.

பெண் விடுதலைக்காகப் பெரியாரைப்போல் புரட்சிக் கருத்துகள் சொன்னவர்கள் வேறு யாருமில்லை. பெரியார் சொன்னதுடன் நிற்கவில்லை. அப்புரட்சியை தன் குடும்பத்திலும் செய்து காட்டியவர்.

அந்தக் காலத்தில் விளையாட்டுத்தனமாக பொம்மைக் கல்யாணம் போல் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இவ்விபரீதப் பழக்கத்தால் கொடிய துன்பத்திற்குப் பெண்கள் உள்ளானார்கள்.

பெரியாரின் தங்கை மகளுக்கும் இக் கொடிய துன்பம் நேர்ந்தது. பெரியாரின் தங்கை மகளின் பெயர் அம்மாயி. அவருக்கு 10 வயதில் திருமணம் நடந்தது. கணவன் 13 வயது சிறுவன். அவனுக்கு ஒரு நாள் விஷபேதி வந்தது. இறந்து போனான்.

அம்மாயி 10 வயதில் விதவையானாள். என்ன கொடுமை இது?

வளர்ந்து பெரியவள் ஆன அம்மாயிக்கு தன் நிலைமை புரிய ஆரம்பித்தது. திடுக்கிட்டாள். துடிதுடித்து அழுதாள்.

கணவன் இல்லாத அம்மாயி பூ வைத்துக் கொள்ளக் கூடாது. பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. தன்னை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. ஏன், நல்ல உணவுகூட சாப்பிடக் கூடாது. எத்தனையோ கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும்.

வாழ்விழந்து நின்ற அம்மாயிக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வீட்டிலுள்ள பெரியவர்கள் கனவிலும் பயந்தார்கள்.

அம்மாயி மாமாவான பெரியாரின் காலில் விழுந்து அழுதாள். எனக்கு 10 வயதில் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி நான் கேட்டேனா? எனக்கு ஏன் இந்த நிலைமை மாமா? என்று கதறி அழுதாள்.

அம்மாயி படும் துன்பத்தைப் பார்த்து பெரியாரும் அழுதுவிட்டார். அந்த நிமிடமே பெரியார் ஒரு முடிவுக்கு வந்தார். அம்மாயிக்கு மறுமணம் செய்து வைப்பேன் என்று சபதம் செய்தார்.

வீட்டில் பெரியார் மெதுவாக அம்மாயியின் மறுமணப் பேச்சை எடுத்தார். அவ்வளவுதான். பெரியவர்கள் தாம்தூம்… என்று குதித்தார்கள். கூடாது என்று கெட்ட சாத்திரம் பேசினார்கள். ஜாதிப் பெருமையைக் காட்டினார்கள்.

பெரியார் பின் வாங்கவில்லை. ஒரு ரகசியத் திட்டம் தீட்டினார்.

பெரியாரின் குணம் எல்லோருக்கும் தெரியுமே. சொன்னதை செய்து விடுவார் அல்லவா? அதனால் வீட்டிலுள்ள பெரியவர்கள் மிகப் பயந்தார்கள். அம்மாயியை வெளியே எங்கும் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரியாரையும் கண்காணித்து வந்தார்கள்.

பெண்கள் கோயிலுக்குச் செல்லத் தடை இல்லை அல்லவா? அம்மாயியை சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்தார் பெரியார். தனது மைத்துனரின் சகோதரரை சந்தித்து அம்மாயியை திருமணம் செய்துகொள்ள வேண்டினார். அவரும் சம்மதித்தார். மாப்பிள்ளையைத் தனியாக சிதம்பரம் அனுப்பினார். சந்தேகம் வந்துவிடக் கூடாது அல்லவா? அதனால் பெரியார் அத்திருமணத்திற்குச் செல்லாமல், தன் நண்பரைக் கொண்டு தன் மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.

பெரியார் சொல்லிலும் செயலிலும் உண்மையாக இருந்தார்.

சிறைப் பறவை

ஒருமுறை பெரியார் சென்னையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அரசாங்கத்தைத் தாக்கிப் பேசியிருந்தார். அதனால் அவர்மீது வழக்குப் போடப்பட்டது.

வழக்கில் ஆஜராக பெரியார் சென்னை வந்தார். திரு.வி.க. வீட்டில் தங்கினார். திரு.வி.க. வீடு ராயப்பேட்டையில் இருந்தது. இருவரும் இரவு 10 மணி வரை நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டு இருந்தனர்.

பிறகு பெரியார் ஒரு திண்ணையிலும், திரு.வி.க. ஒரு திண்ணையிலும் படுத்துத் தூங்கினர்.

இரவு 11 மணி இருக்கும். நல்ல மழை பெய்யத் தொடங்கியது. திரு.வி.க. எழுந்துகொண்டார் பெரியாரை எழுப்பினார். பெரியார் கண்விழிக்கவில்லை.

மழை கடுமையாக பெய்தது. தெருவில் வெள்ளம் பெருகிறது.

திரு.வி.க. பெரியாரை மீண்டும் மீண்டும் எழுப்பினார். பயனில்லை. பெரியார் உறக்கத்திலிந்து எழவில்லை.

மழை இரவு முழுவதும் பெய்தது. பெரியார் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுந்தார்.

திரு.வி.க.வுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. என்ன வைக்கம் வீரரே, இரவு மழை பெய்தது. தெரியுமா? என்று கேட்டார்.

மழையா? எனக்குத் தெரியாதே! என்றார் பெரியார்.

நாளைக்கு வழக்கு இருக்கிறது. சிறைத் தண்டனை நிச்சயம் உண்டே! கவலை இல்லாமல் தூங்கினீரே. ஆச்சரியம் அய்யா, உமது குணம் என்றார் திரு.வி.க.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை _ எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற பாவேந்தரின் கவிதை வரிகள் பெரியாருக்குப் பொருந்தும். பெரியார் சிறைப் பறவையாக வாழ்ந்தார்.

30
குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்29th October 2018
கராத்தே வெற்றியாளர்கள்29th October 2018கராத்தே வெற்றியாளர்கள்

மற்ற படைப்புகள்

2018_nov_v46
நவம்பர் 2018
29th October 2018 by ஆசிரியர்

மல்லிகை

Read More
2018_nov_v23
நவம்பர் 2018
29th October 2018 by ஆசிரியர்

மேடைக் கூச்சமா? அப்படின்னா?

Read More
2018_nov_v35
நவம்பர் 2018
29th October 2018 by ஆசிரியர்

நோபல் பரிசு 2018

Read More
2018_nov_v47
நவம்பர் 2018
27th October 2018 by ஆசிரியர்

அன்பு

Read More
2018_nov_v10
நவம்பர் 2018
29th October 2018 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்!

Read More
2018_nov_v12
நவம்பர் 2018
29th October 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p