• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்

2018_dec_v15
டிசம்பர் 2018

18 வயதுக்கு முன் ஜாதி -மதங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்பது உட்பட முக்கிய கருத்துகள் அன்று 29.9.2018 திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் பிரகடனமாக அறிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதனை வெளியிட்டு, அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தப் பிரகடனம் வருமாறு:

நம் நாட்டில் குழந்தைகளுக்குச் சட்டப்படி தெளிவான பக்குவம் 18 வயதில்தான் வருகிறது என்று அரசுகள், சட்டங்கள் கூறுகின்றன. அதனால்தான் பெற்றோர்களையோ அல்லது உற்றார், உறவினர்களையோ குழந்தைகளின் காப்பாளர்களாக (Guardians) போடுகிறார்கள்! 18 வயதுக்குப் பிறகுதானே அவர்களுக்கு வாக்குரிமை தரப்படுகிறது – நமது ஜனநாயகத்தில்!

* அப்படி இருக்கும்போது குழந்தைகளை இந்த மதத்தவர், இந்த ஜாதியினர் என்று எப்படி முத்திரை குத்துகிறீர்கள்? சட்டப்படி எப்படி அவ்வாறு குறிப்பிடுகின்றீர்கள்?

* 18 வயதுக்குப் பின் எந்த மதம் என்று தேர்வு செய்யவோ அல்லது எந்த மதமும், ஜாதியும் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் – நாங்கள் மனிதர்கள் என்று அறிவித்திடவோ அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதானே நியாயம் – அதுதானே மனித உரிமையும்கூட!

* அதுவரை குழந்தைகளுக்கு ஜாதி, மத, முத்திரை குத்தாமல் மனிதர்கள் என்று சொல்ல உரிமை தரவேண்டும் என்பது அடிப்படைக் கோரிக்கையாகும்.

* மதச் சுதந்திரம் என்பதில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும். பெற்றோர்கள் விரும்புவதாலேயே அவர்கள் விரும்பும் ஜாதியிலோ, மதத்திலோ இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

* பெரியவர்கள் என்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். எனவே, அவர்களை மத வணக்கக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லுவது தவறு. பள்ளிகளில் கட்டாயமாக மதங்களை அவர்களிடத்தில் ஏன் புகுத்த வேண்டும்?

* குழந்தை மணம் எப்படித் தவறானதோ அது போன்றதே குழந்தைகள் மதமும்கூட!

* இதைத் தடுக்கப் புது சட்டம் தேவையே! பதினெட்டு வயதில் எடுக்கவேண்டிய முடிவுகளை பச்சிளம் வயதில் அவர்கள் மீது திணிக்காதீர்கள்!

* இது மனித உரிமைக்கும் எதிரானது!

* குழந்தைகள் மதமற்றவர்கள்; ஜாதியற்றவர்கள் என்று இம்மாநாடு பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

* சட்டங்கள் பல இருந்தும் செயல்பாட்டில் முடக்கங்களே  அதிகம்.

குழந்தைத் திருமணங்கள்,

குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தல்,

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை,

குழந்தைகள் கடத்தல்

இவற்றின் மீது உடனடியான தீர்ப்புகள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் இக்குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. குறிப்பாகப் பெண் குழந்தைகள் பிரச்சினைகள் பற்றி சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் எடுத்துரைக்க பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தைக் குறட்டைத் தூக்கத்திலிருந்து எழுப்பி நிறைவேற்ற வேண்டும்.

 

* பாடப் புத்தகச் சுமையை குழந்தைகள் முதுகில் ஏற்றி, சிறிய வயதிலேயே முதுகுகளை ஒடிக்கக் கூடாது.

* படிப்பென்றால் பயம் – அச்சுறுத்தல் என்ற நிலையை பிஞ்சு உள்ளத்தில் விதைக்கக் கூடாது.

* படிக்கும் அறிவில் ஒருவன் கெட்டிக்காரன், இன்னொருவன் முட்டாள் என்ற பேதத்தை ஊட்டக் கூடாது.

* கூழாங்கற்களையும் வைரமாக மாற்றுவதற்குத் தானே பள்ளிக்கூடம்.

 

* இரண்டு வயது, மூன்று வயதுகளிலேயே பள்ளிகளுக்கு பிள்ளைகளை துரத்தாதீர்கள்.

* கண்டிப்பாக பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஏன் யாருமே பிள்ளைகளை அடிக்கக் கூடாது.

* விளையாட்டு, ஆடல், பாடல், கலையம்சத்தோடு பிள்ளைகளை கல்வியின் பால் ஈர்க்க வேண்டும்.

* குழந்தைகளுக்கான நூல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

(மாநாட்டு செய்தி தொடரும்)

16
வெடிக்கத் தடை விதிக்கலாமா?வெடிக்கத் தடை விதிக்கலாமா?4th December 2018
அறிவியலுக்கு ஆர்வமே முக்கியம்6th December 2018அறிவியலுக்கு ஆர்வமே முக்கியம்

மற்ற படைப்புகள்

2018_dec_v38
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

கின்னஸ்

Read More
2018_dec_v25
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

மடப் பேர்வழிகளுக்கு மகத்துவம் உண்டா?

Read More
2018_dec_v35
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம்

Read More
2018_dec_v44
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

பெரியாரின் நேர்மை

Read More
2018_dec_v27
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
டிசம்பர் 2018
3rd December 2018 by ஆசிரியர்

உரிமை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p