• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியாரின் பெருந்தன்மை

2019_jan_v11
ஜனவரி 2019

22 பெரியாரின் கதை

சுகுமாரன்

ஓவியம்: கி.சொ


விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார்.

யாரோ சில கயவர்களால் தூண்டப்பட்ட ஒருவன் திடீரென்று மேடையில் ஏறி, பெரியாரை கத்தியால் குத்த முயன்றான்.

குத்த வந்தவனின் கையைப் பெரியார் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவனால் அசைய முடியவில்லை.

பெரியார் அவனை உற்றுப் பார்த்தார். அப்பாவி மனிதன், எய்தவன் இருக்க வெறும் அம்பாகப் பாய்ந்திருக்கும் இந்த மனிதனை ஏன் தண்டிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணமிட்டார்.

அந்த மனிதன் பயத்தால் நடுங்கினான். அவனை அப்படியே மேடையிலிருந்த நாற்காலியில் உட்காரவைத்தார். அவன் பதட்டத்தை தணித்தார்.

அருகிலிருந்த தோழர்கள் அவனை போலீசில் ஒப்படைக்கலாம் என்று கூறினர். பெரியார் அதை ஏற்கவில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினருக்கு ஆத்திரம் பொங்கியது.

பெரியாரைக் குத்த வந்தவனை அடிக்கவும் உதைக்கவும் முன் வந்தனர்.

பெரியார் எல்லோரையும் அடக்கினார். கூட்டத்தினரின் ஆத்திரத்திலிருந்து காப்பாற்றி அவனைப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

எதிரிக்கும் நன்மை செய்த பெரியாரின் பெருந்தன்மையை மக்கள் புகழ்ந்தனர்.

பெரியாரின் அன்புள்ளம்

தள்ளாத வயதில் உடல்நிலை இடங்கொடுக்காத நிலையிலும் பெரியாரின் சேவை தொடர்ந்தது. காரணம், பெரியாரின் அன்புள்ளம், மக்கள் மீது அவர் கொண்ட அன்பு அளவிடற்கரியது.

அதுபோல பெரியாரின் மீது தமிழ்மக்கள் கொண்ட அன்பு இமயமலையை விடப் பெரியது.

பெரியார் உயிருடன் இருந்த காலத்திலே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அவருக்கு சிலைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் மக்கள் தங்கள் அன்பை எடை போடுவதுபோல் பெரியாரின் எடைக்கு எடை வழங்கிய பொருள்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

1964ஆம் ஆண்டு உணவு நெருக்கடிக் காலம், அரிசிக்குப் பஞ்சம் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் பெரியாரின் 86ஆவது பிறந்த நாள் விழா நடந்தது. பெரியாரின் எடைக்கு எடை அரிசி வழங்கப்பட்டது.  ஆனால், பெரியார் அரிசியை மக்களுக்கு நியாய விலையில் கிடைக்க கூட்டுறவு சங்கத்திற்கே வழங்கிவிட்டார்.

திருவாரூரில் கொடுக்கப்பட்ட அரிசியை பிள்ளைகளின் மதிய உணவுக்குக் கொடுத்து-விட்டார்.

நீதிமன்றங்களில் பெரியாருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மக்களே வசூல் செய்து கட்டினர்.

பெரியாருக்கு மூன்று முறை பிரச்சார வேன்கள் வழங்கப்பட்டன.

பெரியார் மக்களிடம் அன்பு வைத்தார். மக்கள் தங்கள் அன்பில் அவரை இன்னும் வேலை வாங்கினர்.

28
அழகிய பென்சில் கிரீடம்அழகிய பென்சில் கிரீடம்31st December 2018
மன்னிச்சூ…31st December 2018மன்னிச்சூ…

மற்ற படைப்புகள்

2019_jan_v40
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

’அவ்னி’யைக் கொன்றது சரியா?

Read More
2019_sep_v10
ஜனவரி 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

யாவும் ஆசான்!

Read More
2019_jan_v4
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

மேழித் திருநாள்!

Read More
2019_jan_v52
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்

Read More
2019_jan_v56
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_jan_v41
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

இவற்றை ருசிப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p