• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

போகிப் பண்டிகை என்பது சரியா?

2019_jan_v47
ஜனவரி 2019

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்


தமிழர்கள் கொண்டாடும் அர்த்தமுள்ள விழா பொங்கல் விழா! தமிழர்கள் தொன்று தொட்டு பகுத்தறிவுடன் வாழ்ந்தார்கள். ஆனால், ஆரிய ஊடுருவலுக்குப் பின்தான் அறிவிழந்தார்கள்; அடிமையானார்கள்!

தனக்குப் பயன்படுவதற்கு நன்றி செலுத்தினார்கள், உயர்ந்தவற்றை மதித்தார்கள். இதைத் தவிர அவர்களிடம் மூடச் செயல்கள் எதுவும் இல்லை.

அவர்களது நன்றியுணர்வின் அடையாளமே பொங்கல் விழா. தமிழர்களின் தலையாயத் தொழிலாகிய உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக நின்றவை மழை, சூரியன், மாடு, உழைப்பாளி. இந்த நான்கு காரணிகளுக்கும் நன்றி சொல்லும் விழாவே பொங்கல் விழா! மழைக்கு நன்றி சொல்லும் விழா மாரிப் பொங்கல், சூரியனுக்கு நன்றி சொல்லும் விழா சூரியப் பொங்கல்,

மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழா மாட்டுப் பொங்கல், உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் விழா உழவர் பொங்கல். சூரியனுக்கு நன்றி சொல்ல சூரிய ஒளியில் பொங்கி படையலிட்டு, அதை உண்டு மகிழ்வர். மாட்டுக்கு நன்றி சொல்ல, அதைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, உணவு கொடுத்து மகிழ்வர்.

உழவர்களுக்கு நன்றி சொல்ல, உழைப்பாளிகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, புத்துணவு, பொருட்கள் கொடுத்து உபசரிப்பர்.

மழைக்கு நன்றி சொல்ல, வேண்டும்போது மழை வராது. எனவே, மழைத் திருநாள் அன்று ஒரு சொம்பில் நீர் வைத்து அதற்குப் படையல் செய்து நன்றி செலுத்தினர். இந்த நன்றி செயலைப் பின்னாளில் புரட்டித் திரித்து மூடச் செயலாக்கினர்.

மழை என்பதற்கு மாரி என்று வேறு சொல் உண்டு. எனவே, மாரிப் பொங்கல் என்று அழைத்தனர். மாரி என்பதை மாரியாத்தாள் என்று மாற்றி, மாரியாத்தாளுக்குப் படைப்பது என்று ஆக்கிவிட்டனர். நீர்ச் சொம்பில் வேப்பிலைச் செருகி, மாவு இடித்து தட்டில் வைத்துப் படையல் செய்யும் மூடத் தனத்தைப் புகுத்தினர்.

மழைத் திருநாளை மாரியாத்தாள் திருநாளாக ஒரு பக்கம் மாற்ற, மறுபக்கம் இந்திரத் திருவிழா என்று திரித்துக் கூறினர்.

மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்குப் போகி என்று பெயர். எனவே, அப்பண்டிகையைப் போகிப் பண்டிகை என்றனர்.

போகியென்பதும் புரட்டு, மாரியென்பதும் மடமை. மழைக்கு நன்றி சொல்லும் மழைத் திருநாள் என்பதே சரி. ஆனால் நன்றி எதிர்பார்க்காத சூரியன், மழை ஆகியவற்றுக்கு படையல் செய்து வணங்குதல் அவசியமற்றது.

இயற்கையைக் கொண்டாடுவதும் என்பதும், இன்றைய சூழலில் இயற்கையைக் காப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துவதுமே இவ்விழாக்களின் பொருளாக இருக்க வேண்டும்.

சிவந்த உடல் சிறப்பு?

உலகில் பெருமளவு பேசப்படும் சிக்கல்களுள் இதுவும் ஒன்று. குறிப்பாக தமிழகத்தில் அதிலுங்குறிப்பாக பெண்களுக்கு இது பெருஞ்சிக்கல்.

ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் கருப்பு நிறம்தான் நலத்தின் அடையாளம். அதுவே நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்கது.

தற்போது கருப்பு நிற ஆண்களைப் பெண்கள் விரும்புவது மிகுந்து வருகிறது. காலப்போக்கில் கருப்புப் பெண்களை விரும்பும் மனப்போக்கு வளரும். அதுதான் அறிவிற்குகந்த எதிர்பார்ப்பும் ஆகும். எனவே, சிவப்பு சிறப்பு என்ற எண்ணம் தப்பானதாகும். சிவப்பு வேண்டும் என்பது உளவியல் சார்ந்த ஓர் அறியாமையே! சிவப்பை உயர்வாக தப்பாக எண்ணியே தமிழன் ஆரியர்க்கு அடிமையானான். அத்தவறுகள் இனியுந் தொடரக்கூடாது.

உறுதி


தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்கள், 2011இல் தானே புயலின் போதும், இப்போது தாக்கிய கஜா புயலின்போதும் புயலின் வேகத்தை எதிர்கொண்டு விழாமல் தாக்குப் பிடித்திருக்கின்றன. தலைக்கனம் இல்லாவிட்டால் எதையும் சமாளிக்கலாம் என்பார்கள். பனை மரத்தைப் பொறுத்தவரை, அதன் தலைப்பகுதி கனமானது அல்ல என்னும் பழமொழிக்கு ஏற்ப கஜா புயலை எதிர்கொண்டு விழாமல் நிலைத்து நிற்கிறது.

தாவரவியல் முன்னாள் தலைவர் எம்.நரசிம்மன் கூறும் மூன்று முக்கிய காரணங்கள்.

1.     பனைமர வேரின் அமைப்பு, பனைமர வேர் நார்த்தன்மை கொண்டது என்றாலும், அதன் சுவாசத் திறன் அதிகம்.

2.     பனைமரத் தண்டின் நாள அமைப்பு அதை இலகுவானதாக வைத்திருக்கிறது.

3.     மரத்தின் உச்சிப் பகுதி, மடங்கிய இலைகளும், அதன் அமைப்பும் காற்றையும் தாக்குப் பிடித்து நிற்க உதவுகிறது.

எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்து கொள்ள முடியும். ஏனெனில் பனை மரத்தின் வேர்கள் மிக ஆழமாக ஊடுருவக் கூடியவை என்கிறார்.

பனை மரத்தின் உச்சிப் பகுதி, தண்டுப் பகுதி, வேர்ப் பகுதி ஆகியவற்றின் தனித்தன்மைகள், பேரழிவுகளைத் தாங்கும் வலிமையை அம்மரத்துக்கு அளிக்கின்றன என்கிறார் தாவரவியல் துணைத் தலைவர் டாக்டர் பி.ரவிச்சந்திரன்.

பனை மரத்தின் வேர்கள், நார்த்தன்மை கொண்டவை, அய்ந்தடி சுற்றளவில் படர்ந்திருக்கும் பனைமர வேர்கள், நிலத்துக்குள் 5 முதல் 10 அடி ஆழம் வரை ஊடுருவியிருக்கும். எனவே, பனை மரம் அத்தனை எளிதில் வேரோடு சாய்ந்துவிடாது

மேலும், பனை மரத்தின் வெளிப்புற அடுக்கு கடினத் தன்மை கொண்டதாகவும், நெகிழ்வுத் தன்மையுடனும் இருப்பதால், எத்தனை வேகம் கொண்ட காற்றையும் தாங்கி நிற்கும். எளிதில் முறியாது என்கிறார் அவர்.

27
இவற்றை ருசிப்போம்!இவற்றை ருசிப்போம்!3rd January 2019
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!3rd January 2019தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

மற்ற படைப்புகள்

2019_jan_v20
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

வலிமை

Read More
2019_jan_v5
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர் பொன்னூசல்

Read More
2019_jan_v58
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

களை கட்டிய காலை நிகழ்ச்சி

Read More
2019_jan_v21
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

ருமேனியா

Read More
2019_jan_v36
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வெறுபாடு!

Read More
2019_jan_v16
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

காந்தியார் படுகொலை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p