• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?

2019_mar_141409586216_News_NewsRevision_10011
மார்ச் 2019

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்

வானொலி நிகழ்ச்சியிலும், தொலைக்-காட்சியிலும் குறிப்பாக இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்கள் இக்கேள்வியை நியாயமாகவும் எண்ணுகிறார்கள். இது அவர்களின் அறியாமையின் அடையாளமாகும்.

ஜாதியில்லை என்ற சொல்லிவிடுவதால் ஜாதி இல்லாமல் போகாது. ஜாதியை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, ஜாதியை ஜாதி அடிப்படையில் ஒழிப்பதே இம்முயற்சி.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எந்த சமுதாயம் ஜாதியின் பெயரால் அடக்கப்பட்டதோ; உரிமை பறிக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்டதோ அந்த சமுதாயத்திற்கு உரிமை தந்து உயர்த்த வேண்டுமானால் ஜாதி மூலமாகத்தானே அவர்களை அடையாளங்காண வேண்டும்.

எந்த ஜாதியின் பேரால் ஒடுக்கப்பட்டார்களோ அதே ஜாதியின் பேரால் அவர்களுக்கு வாய்ப்பளித்து உயர்த்த வேண்டியது கட்டாயம் ஆகும்.

நமது நிலமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான உரத்தை நாம் போடுவதில்லை. ஒவ்வொரு நிலத்தையும் மண் பரிசோதனை செய்து அந்தந்த மண்ணின் வளப்பத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு ஏற்பவே உரம் இடவேண்டும்.

அதேபோல், ஜாதியால் அடையாளங் கண்டு அவர்களின் கீழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்பு அளிக்க ஜாதியைக் கேட்க வேண்டியுள்ளது.

வாழைப்பழம் எளிதில் செரிக்கும் என்பது சரியா?

வாழைப்பழம் வழவழ கொழ கொழ என்று இருப்பதால் அது எளிதில் செரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும்.

வாழைப்பழம் மென்மையாக இருந்தாலும், அது எளிதில் செரிப்பதில்லை. வாழைப்பழம் செரிப்பதற்கு 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே, வாழைப்பழத்தை விரும்பும்போதெல்லாம் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். வாழைப்பழத்தை காலை உணவிற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து உண்பது நல்லது. வாழைப்பழத்தை அளவோடும் உண்ண வேண்டும்.

வெப்ப நோய் கண்டவர்களுக்குப் (அம்மை வார்த்தவர்களுக்கு) பேயம் பழம் சிறந்த உணவு. அதிகம் கொடுக்க வேண்டும். மலைப்பழம் உடலுக்கு வலு சேர்க்கக் கூடியது. மலச்சிக்கல் வராது தடுக்கும்.

நரிக்கொம்பு வைத்திருந்தால் நல்லது நடக்குமா?

மூடநம்பிக்கையின் உச்சகட்டம் இது. உண்மையில் நரிக்குக் கொம்பே கிடையாது. நரியின் ரெண்டு காதுகளுக்கு நடுவில் கொம்பு மாதிரி ஒரு சிறிய மேடும், அதில் சிறிது முடியும் இருக்கும். அதைத்தான் சிலர் கொம்பு என்று சொல்லி விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான நரிகள் கொல்லப்பட்டு, இப்போது நரி இனமே அரிய இனமாக மாறிவிட்டது. நரி பருவகாலத்திற்கு ஏற்ற மாதிரி என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உண்ணும் பழக்கம் கொண்டது. இதை மனிதர்களும் பின்பற்றினால் உணவு மலிவாகவும் கிடைக்கும் உடலுக்கும் நன்மை.

குள்ளநரி என்பது சாதாரண நரியைக் காட்டிலும் சற்றுக் குள்ளமாக இருக்கும். மேலும், யானைவால் மயிரை மோதிரத்தில் சேர்த்துப் போட்டால் நல்லது என்பதும் மூடநம்பிக்கையே. அதனால் எந்தப் பயனும் வராது. இந்த மூடநம்பிக்கையால் யானை மயிர் பிடுங்கப்பட்டு யானைக்குத்தான் கேடு வருகிறது.

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பதாகப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது முழுவதும் தவறான கருத்தாகும்.

சர்க்கரை ஒவ்வொரு மனித-னுக்கும் கட்டாயத் தேவையாகும். எதிலும் ஓர் அளவு வேண்டும் என்பதுபோல் சர்க்கரை சாப்பிடுவதிலும் அளவு வேண்டும். மற்றபடி சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறு.

நமது உடலில் கணையம் என்ற உறுப்பு உள்ளது. அதிலுள்ள பீட்டா செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன.

இந்த ஹார்மோன்தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை (சர்க்கரையை) சக்தியாக (ஆற்றலாக) மாற்றுகிறது.

இன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சக்தியாக மாற்றப்படாமையால், அதிகரிக்கும் அளவே சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது-. இன்சுலின் சுரக்கும் கணையம் நாளமில்லா சுரப்பியாகும்.

கணையம் பழுதுறாமல் வலுவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அது ஆற்றலாக மாற்றி விடும். அதனால், இரத்தத்தில் சர்க்கரை சேராது.

கணையம் பழுதுறாமல் இருக்க வேப்பிலை, பாகற்காய், சிறுகுறிஞ்சான் கீரைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

எனவே, சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறு. கணையம் பழுதுற்றால்தான் சர்க்கரை நோய் வரும். உடற்பயிற்சியும், மனஇறுக்கம் இல்லாமல் இருப்பதும் கணையத்தைக் காப்பாற்றும்.

ஆக, சர்க்கரை நோயாளிகள்தான் சர்க்கரை சேர்க்கக் கூடாதே தவிர, நலமாகவுள்ளவர்கள் சேர்க்கலாம். 40 வயதுக்கு மேல் சர்க்கரை குறைவாகச் சாப்பிடுவது நல்லது.

இளம் வயதில் அளவிற்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்தால் போதும். மற்றபடி இனிப்பைக் கண்டு பயப்படத் தேவையில்லை. செயற்கை இனிப்புகளே கேடு தரும். சீனியைவிட வெல்லமும், பனைவெல்லமும் சிறந்தது.

21
சின்னச் சிறகு சிட்டுக் குருவி!சின்னச் சிறகு சிட்டுக் குருவி!28th February 2019
அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (1920-2019) தொடங்கும் மார்ச் 10-ஆம் தேதி முதல் விடுதலை நாளேட்டில்…28th February 2019அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (1920-2019) தொடங்கும் மார்ச் 10-ஆம் தேதி முதல் விடுதலை நாளேட்டில்…

மற்ற படைப்புகள்

2019_mar_123
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2019_mar_v34
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

அழகிய பென்சில் ஸ்டேண்ட்

Read More
2019_mar_v7
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_mar_Moondru-peigalum
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும்

Read More
2019_mar_v22
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_mar_v28
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

நூற்றாண்டு காணும் அன்னை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p