• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறப்பு

2019_mar_v14
மார்ச் 2019

சின்னச் சின்னக் கதைகள்

கதை: மு.கலைவாணன்

ஓவியம்: மு.க.பகலவன்

இரை தேடி வெ-கு தூரம் பறந்து வந்தது ஒரு மீன் கொத்தி.

பெரிய கால்வாயில் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் என்பதால் மிக வேகமாக வந்தது.

கால்வாய் நடுவில் இருந்த பட்டுப்போன மரக்கிளையில் உட்கார்ந்தது மீன்கொத்தி…

சூரிய வெளிச்சத்தில் தண்ணீர் பளிங்குபோல் பளபளத்தது.

கெண்டை மீன்கள் கூட்டங்கூட்டமாய் நீந்திக் கொண்டிருப்பது மீன்கொத்தியின் பார்வையில் பட்டது.

நீந்தும் மீன்கள் அனைத்துமே தண்ணீர் போகும் போக்கில் போகாமல் எதிர்த்தே நீந்திக் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் பசியை மறந்து ஆராய்ச்சியில் இறங்கியது மீன்கொத்தி.

நீரின் வேகத்தை எதிர்த்து மிகுந்த சிரமப்பட்டு மீன்கள் நீந்துவதைப் பார்த்து -ஏன் இத்தனை சிரமத்துடன் எதிர்நீச்சல் போட வேண்டும்? நீர் போகும் போக்கிலே போனால்தான் என்னவாம்? என்று உரக்கக் கேட்டது.

பக்கத்துப் பாறைமேல் உட்கார்ந்திருந்த தவளை பட்டென பதில் சொன்னது,

சற்று தூரத்தில் இந்த ஆறு கடலில் கலக்கிறது. நீர் போகும் போக்கிலேயே இந்த ஆற்று மீன்கள் போனால் உப்புக் கடலில் விழுந்து, உயிர்விட வேண்டியதுதான். அதனால்தான் இப்படி எதிர்நீச்சல் போட்டுப் போராடி தம் இன்ப வாழ்வை இனிதாய் வாழ்கின்றன இந்த மீன்கள்.

அந்த நேரத்தில் செத்து மிதந்த சில மீன்கள், ஆற்று நீர்போ-கும் போக்கில் போய்க் கொண்டிருந்தன.

அதைப் பார்த்ததும் தெளிவுபெற்றது மீன்கொத்தி…

வயிற்றுப் பசியைவிட, அறிவுப் பசிக்கு விடை கிடைத்த மகிழ்வுடன் சொன்னது…

“போகிற போக்கில் போவது இறப்பு…

போராடி வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு”

23
உலக நாடுகள்உலக நாடுகள்28th February 2019
வாட்ஸ் அப்-பில் வந்தது28th February 2019வாட்ஸ் அப்-பில் வந்தது

மற்ற படைப்புகள்

2019_mar_v33
கதை கேளு கதை கேளுமார்ச் 2019
1st March 2019 by விழியன்

சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல்

Read More
2019_mar_v29
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

பூ மட்டுமா?

Read More
2019_mar_v23
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2019_mar_v34
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

அழகிய பென்சில் ஸ்டேண்ட்

Read More
2019_mar_v15
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

வாட்ஸ் அப்-பில் வந்தது

Read More
2019_mar_v5
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p