• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிளாஸ்டிக் தேவையா?

2019_apr_800px-thumbnail
ஏப்ரல் 2019

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தற்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகிறது. அவசியத்தோடு பழுதடைந்த உறுப்புகளைச் சீர் செய்ய கொண்டு வரப்பட்ட இம்முறை, தற்போது அழகுபடுத்திக் கொள்ளவும் பயன்படுகிறது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்றதும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உறுப்புகளை உடலில் பொருத்துவார்கள் என்கின்ற எண்ணம் (கற்பனை) பலருக்கும் இருக்கிறது.

அப்படி எண்ணுவது தவறு. இந்த அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் சம்பந்தப்படுவதே இல்லை. இந்த அறுவை சிகிச்சையில் உடலில் ஓரிடத்திலிருந்து சதை வெட்டியெடுக்கப்பட்டு, தேவையான பகுதியில் ஒட்டப்படுகின்றது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒருவருக்கு உதடு பொக்கையாக இருந்தால் தொடைப் பகுதியில் இருந்து சதையை எடுத்து, அந்தப் பொக்கையை அடைப்பார்கள். மூக்கு சப்பையாக இருந்தால் அதை அழகுபடுத்துவார்கள்.

இவ்வாறு எந்த உறுப்பு சரி செய்யப்பட்டாலும் உடலில் வேறு ஒரு பகுதியிலிருந்து சதை எடுக்கப்பட்டே பொருத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் பெயர் 1839-லேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 70 ஆண்டுகள் கழித்து 1909-ஆம் ஆண்டில் தான் நாம் இன்று நாள்தோறும் பயன்படுத்தும் பொருளில் (meaning) பிளாஸ்டிக் என்ற சொல் லியோ பேக்கிலாண்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து உருவாக்கப்படும் இன்றைய பயன்பாட்டுப் பொருளான நெகிழியைக் குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது கடந்த நூற்றாண்டில் தான். ஆனால், செதுக்குதல், சீர்செய்தல், வடிவமைத்தல் என்னும் பொருளில் 1598-ஆம் ஆண்டு முதலே வழக்கில் உள்ளது. இச் சொல்லின் வேர்ச் சொல் கிரேக்கத்தில் உள்ளது. அது 2000 ஆண்டு காலத்திற்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சதை மாற்றி வடிவம் தரும் அறுவை சிகிச்சைக்கும், இன்று பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் (நெகிழி)கும் தொடர்பில்லை. ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளுடன் பயன்படுத்தப்படுவது அனைத்து மொழிகளிலும் உள்ள ஒரு நடைமுறை தான். அப்படித்தான் பிளாஸ்டிக் சர்ஜரி என்பதில் வரும் பிளாஸ்டிக் – பெயர் உரிச் சொல்லாகவும் (adjective), பொருட்கள் தயாரிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) -_ பெயர்ச் சொல்லாகவும் (noun) வெவ்வேறு பொருள் தருகின்றன.

ஊசி போட்டால்தான் பயன் அதிகமா?

மக்களிடையே இப்படியொரு நம்பிக்கை ஆழமாகக் காணப்படுகிறது. ஆனால் இது தவறான நம்பிக்கையாகும்.

மருத்துவரிடம் சிகிச்சை பெறச் செல்லும்போது ஊசி போடுங்கள் என்று வற்புறுத்தும் நோயாளிகளைப் பார்க்கலாம்.

நோயாளிகளின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு, போலி மருத்துவர்களும் தேவை-யில்லாமலே ஊசி போடுவதுண்டு.  அதுவும் கிராமப்புறங்களில், அங்கீகாரம் பெறாத மருத்துவர்கள் எதற்கெடுத்தாலும் ஊசி போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் நோக்கம் காசு பறிப்பதாகும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் தேவையான மருந்தை தேவையான வழியில் நாங்களே தருவோம் என்று கண்டிப்பு காட்டி வருவார்கள்.

வாயினால் மருந்து எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் மட்டுமே ஊசியைப் பயன்படுத்த வேண்டும். சில மருந்துகளை ஊசியின் மூலம் மட்டுமே கொடுக்க வேண்டும். மற்றபடி ஊசியின் மூலம் மருந்து செலுத்தினாலும், வாய்வழியே மாத்திரை சாப்பிட்டாலும் பயன் ஒன்றுதான் _  இன்சுலின் போன்ற சில ஊசிகளைத் தவிர!. (மருந்துகளின் பலன் ஒன்றுதானே தவிர, அவை உட்செலுத்தப்படும் வழிகள் வேறு என்பதுதான். ரத்தத்தில் செலுத்தப்படும் ஊசிகளும், சதையில் போடப்படும் ஊசிகளும், வாய்வழியாக உட்கொள்ளப்படும் மருந்துகளும் அவற்றின் தன்மைக்கேற்ப தயாரிக்கப்படும். அவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடாது).

எய்ட்ஸ் விரைவாய் பரவி வரும் இக்காலத்தில்,  ஊசி வழியேயும் எய்ட்ஸ் பரவ வாய்ப்பிருப்பதால் ஊசியைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முடிந்த மட்டும் ஊசி போடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

ஊசி போட்டுக் கொள்ளும் அவசியம் வரும்போது மட்டும், ஒருமுறை மட்டுமே உபயோகிக்கும் ஊசியைப் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது.

ஓரே குடும்பத்தவராயினும் தனித் தனியே ஊசியைப் பயன்படுத்த வேண்டும். காரணம் எய்ட்ஸ் நோய் யாரிடம் உள்ளது, யாரிடம் இல்லையென்று வெளித் தோற்றத்தால் மட்டும் கண்டறிய முடியாது. ஒரே குடும்பத்தில் உள்ளவராயினும் அவரவர் நடத்தையும், ஒழுங்கும் வேறு வேறானவை அல்லவா?

வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியுமா?

அது பழமொழிக்காக சொல்லப்பட்டது. இப்போதெல்லாம் வைரங்களை அறுக்கவும், வைரத்தில் ஒரு ரோமத்தின் குறுக்களவேயுள்ள மிக நுண்ணிய துளைகளைப் போடவும் எலெக்ட்ரான் கதிர் (ELECTRON RAY) பயன்படுகிறது. DIAMOND SAW எனப்படும் ஒரு வகை ரம்பத்தைப் பயன்படுத்தி வைரங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டுவதும் உண்டு. அதேபோல மற்ற நவரத்தினக் கற்களை துண்டுபோட DIAMOND CUTTER என்று கருவியும் பயன்பாட்டில் உள்ளது.

28
அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கன்அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கன்3rd April 2019
பிஞ்சு & பிஞ்சு4th April 2019பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2019_apr_v15
ஏப்ரல் 2019பிஞ்சுகள் பக்கம்
4th April 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_mar_v22
ஏப்ரல் 2019
4th April 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_apr_Page-35
ஏப்ரல் 2019
4th April 2019 by ஆசிரியர்

திசை அறிதல்

Read More
2019_apr_v17
ஏப்ரல் 2019
4th April 2019 by ஆசிரியர்

சின்னைக்கைச் சித்திரம்

Read More
2019_apr_v6
ஏப்ரல் 2019
2nd April 2019 by ஆசிரியர்

புல்லைத் தாண்டாமல் வெளியேற வழி சொல்லுங்கள்!

Read More
ஏப்ரல் 2019
3rd April 2019 by ஆசிரியர்

பெருக்கலுக்கு ஒரு குறுக்கு வழி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p