• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விண்ணை நோக்கி – ’மணியம்மையார் சாட்’

2019_may_a7
மே 2019

ஆசியாவில் முதல்முறையாக முற்றிலும் மாணவிகள் உருவாக்கிய செயற்கைக் கோள்

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஏரோஸ்பேஸ், கணினி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்று பல்துறை சார்ந்த மாணவிகள் 15 பேர் இணைந்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்தில் பயிற்சி பெற்று ‘ அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி இந்த செயற்கைக்கோளை வடிவமைத்தனர். அது ஆசியாவிலேயே முதன்முதலாக பெண்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஏவும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்ரோ’ நிறுவனத்தின் மேனாள் திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்பித்தார்.

‘எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்’ (SKI-NSLV 9 Maniammaiyar Sat)   என்ற பெயரைக் கொண்ட இந்த பலூன் செயற்கைக்கோள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 21.4.2019 காலை 11.42 மணிக்கு ஏவப்பட்டு மாலை 4.45க்கு தரையிறங்கியது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன், வான்வெளியில் 70 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்று, அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் தரையிறங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘மணியம்மையார் சாட்’ என்ற இந்த செயற்கைக்கோள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் அடி உயரம் சென்று, 4 மணி நேரத்துக்குப் பின்னர், 20 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் குலமங்கலம் சாலையில் உள்ள சங்கத்திடல் என்ற கிராமத்தில் உள்ள வயலில், பாராசூட் மூலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கிச் செல்லும்போதும், கீழே தரையிறங்கும் போதும், அதில் பெருத்தப்பட்டு உள்ள கேமரா உதவியுடன் வான்வெளியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்து கண்டறிந்து, நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதனுடன் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மற்றும் வெப்பநிலை கணக்கிடும் கருவி ஆகியவை அட்சரேகை, உயரம், திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தியதால், பலூன் செயற்கைக்கோள் எங்கு செல்கிறது என பேராசிரியர்களும், மாணவர்களும் கணினி உதவியுடன் பார்த்துக்கெண்டே இருந்தனர்.

இந்நிகழ்வை ஆசியா புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாகப் பதிவு செய்து கொண்டனர். தன்னுடைய பயண நேரத்தில் 1600க்கும் மேற்பட்ட மின்னணுத் தகவல்களை, கட்டுப்பாட்டு அறைக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது மணியம்மையார் சாட்.

துணைவேந்தர் பேராசிரியர் வேலுசாமி,  பதிவாளர் தன்ராஜ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் மாணவிகளைப் பாராட்டி ஊக்கமளித்தனர்.

செயற்கைக்கோளின் சிறப்பம்சம்

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டில் அவரது நினைவைப் போற்றும் விதமாக மணியம்மையார் சாட்’’ எனும் பெயரில் ஏவப்பட்ட-தோடு, அதன்மீது அன்னை மணியம்மையாரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் வேளாண்மையில் சிறந்தோங்கும் தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏவப்படுதவதால், மாணவிகள் அதில் விவசாயத்தை முன்னிறுத்தும் விதமான படங்களைச் சுற்றியும் இணைத்து வேளாண்மை தொழிலுக்குப் பெருமை சேர்த்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அமைந்திருப்பது காவிரி டெல்டா மாவட்டம் என்பதனை நினைவு கூறும் விதமாக, செயற்கைக்கோளின் மேற்கூரை மூங்கில் குச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான இந்தச் சாதனைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் நம் ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் குழுவினரைப் பாராட்டினார். இன்னும் பல சாதனைகளுக்குத் தயாராகி வருகிறது நம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்.

22
பிஞ்சு வாசகர் கடிதம்பிஞ்சு வாசகர் கடிதம்25th April 2019
சின்னக்கைச் சித்திரம்26th April 2019சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2019_may_a12
மே 2019
27th April 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
2019_may_v3
மே 2019
25th April 2019 by ஆசிரியர்

பெற்றோர் கவனத்திற்கு…

Read More
2019_may_a9
மே 2019
26th April 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_may_a18
மே 2019
29th April 2019 by ஆசிரியர்

சின்னச் சின்னக் கதைகள்

Read More
2019_may_v6
மே 2019
27th April 2019 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2019_may_a4
மே 2019
25th April 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p