• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா?

2019_jul_v5
கட்டுரைஜூலை 2019

சிகரம்

 

காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

காலையில் (வைகறை) எழுந்ததும் சாணி தெளிக்க வில்லையென்றால் மூதேவி உள்ளே வந்துவிடுவாள்; சீதேவி வெளியே போய்விடுவாள் என்பார்கள்.

இதில் மூதேவி சீதேவிக்கெல்லாம் வேலை-யில்லை. அதிகாலைப் பொழுதில் இவ்வாறு தெளிப்பதை தவறாது செய்யவேண்டும் என்பதற்காக கூறப்பட்ட அச்சுறுத்தலே இதுவாகும். மற்றபடி இது உண்மையல்ல.

காலைப் பொழுதில் சாணி கலந்த நீரைத் தெளிப்பது தூய்மை சார்ந்த ஒரு வழக்கமேயாகும்.

ஓரிடத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் சாணமிட்டு மெழுகுவதை அக்காலத்திலிருந்து வழக்கத்தில் வைத்திருக்-கின்றார்கள். மண் தரையுள்ள வீடுகளை வாரம் ஒருமுறை சாணமிட்டு மெழுகுவார்கள். இவையெல்லாம் தூய்மையைக் காக்கவேயாகும்.

காலையில் ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் ஒரு மாங்காய் அளவு சாணத்தைக் கரைத்து வீட்டின்முன் தெளிப்பார்கள்.

இரவு வேளைகளில் ஏதாவது சிறு பூச்சிகள் வெளியில் அடைந்திருந்தாலும், பாம்பு போன்றவை பதுங்கியிருந்தாலும் இந்த நீர் பட்டதும் ஓடிவிடும்.

மேலும், மண்ணின் புழுதி பறக்காமல் இருக்கவும், எச்சில் போன்ற அசுத்தங்கள் மறையவும் இது பயன்படுகிறது.

அது மட்டுமின்றி இவ்வாறு தெளித்த பின் கூட்டி கோலம் போட்டு அழகுபடுத்துவார்கள். இதைத் தவிர வேறு நோக்கம் இவ்வழக்கத்திற்கு இல்லை.

வேண்டுமானால், சாணத்திற்கு மாற்றாக டெட்டால் கலந்த நீர் தெளித்தும் தூய்மைப்படுத்தலாம். அந்தக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்தது சாணம். சாணந்தான் தெளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

எலுமிச்சைக் காவு கொடுத்தால் விபத்து வராதா?


புது வாகனங்களை முதன் முதலில் பயன்படுத்தும் போது அதன் சக்கரத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து, அதன்மீது வாகனத்தை ஏற்றி நசுக்கிச் செல்வார்கள். இதற்குக் காவு கொடுத்தல் என்று பெயர்.

இது மூடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயலாகும். புதுவாகனங்கள் காவு கேட்கும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. எனவே, முன்கூட்டியே அதற்கு எலுமிச்சம் பழத்தைக் காவு கொடுத்துவிட்டால், அதன்பின் அது உயிர்ப்பலி எதுவும் கேட்காது என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது.

எந்திரங்கள் உயிரற்றவை. அவற்றுக்கு உணர்வுகளோ, உள்ளமோ, சிந்தனையோ கிடையாது. அப்படியிருக்க அது எப்படி காவு கேட்கும்? காவு கொடுக்கப்படுவதை அவை அறியப் போவதோ, உணரப் போவதோ இல்லை; அறிந்து அமைதி அடையப் போவதும் இல்லை.

காவு கொடுத்து விட்டோம். இனி நமக்கு இடர் வராது என்று போலித்தனமான மனநிறைவு கொள்ளவே இது பயன்படும்; மற்றபடி காவு கொடுப்பதால் எவ்வகைப் பயனும் இல்லை; பாதுகாப்பும் இல்லை.

திருவிழாக் காலங்களில் கூட எலுமிச்சைப் பழங்களை காவு கொடுப்பார்கள். அதாவது, அந்த விழாவின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்விதம் செய்யப்படுகிறது.

ஆனால், எலுமிச்சை காவு கொடுப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நாம் எச்சரிக்கையோடும், முன்னேற்பாட்டோடும், திட்டமிட்டும் செயல்படுவதன் மூலம் மட்டுமே உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமேயன்றி இப்படிப்பட்ட மூடச் செயல்களால் அல்ல.

அம்மை வார்த்த வீட்டில் வேப்பிலை செருகுதல்


ஒரு வீட்டில் யாருக்காவது அம்மை வந்தால், உடனடியாக அந்த வீட்டின் கூரை முகப்பில் ஒரு வேப்பிலைக் கொத்தைச் செருகி வைப்பார்கள்.

அடுத்தவர்கள் அந்த வீட்டில் அம்மை வளர்த்துள்ளது என்பதை அறிந்து கொள்ள ஓர் அடையாளமாகவே அது செருகப்பட்டது.

அதை அறிந்தவர்கள் அவ்வீட்டிற்கு வருவதையோ அல்லது அவ்வீட்டில் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் கேட்பதையோ தவிர்த்து விடுவார்கள்.

தெருவில் போகும் பிச்சைக்காரர்கள் கூட அந்த வேப்பிலை அறிவிப்பைப் பார்த்து, அவ்வீட்டில் எதுவும் பிச்சை கேட்காமல் சென்றுவிடுவார்கள்.

அம்மை ஒரு தொற்றுநோய். அம்மை வந்தவர் வீட்டிலிருந்து பொருளை பிறர் பெறாமல் இருக்கவே இந்த அறிவிப்பு.

வேப்ப இலை அம்மை நோய்க்கு உரிய மருந்து. வேப்ப இலையையும் மஞ்சள் தூளையும் நீருடன் சேர்த்து காய்ச்சி கால் டம்ளர் அளவிற்கு ஒரு நாளைக்கு மூன்று வேளைப் பருகினால் அம்மை வந்தவர்க்கு விரைவில் குணமாகும். வராதவர் பருகினால் அம்மை வராமல் தடுக்கும். அம்மை வந்தவர்க்கு உடல் அரிக்கும் அப்போது விரலால் சொறியாமல் வேப்பிலையால் வருடினால் நல்லது.

மற்றபடி வேப்பிலைக்கு தெய்வீக சக்தி என்று எதுவும் இல்லை. அது ஒரு மருந்து.<

23
காரணமின்றி ஏற்காதீர்கள் !காரணமின்றி ஏற்காதீர்கள் !30th May 2019
சின்னக்கைச் சித்திரம்26th June 2019சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2019_dec_a24
கட்டுரைடிசம்பர் 2019
27th November 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! : கணவன் பெயரைச் சொல்லக்கூடாது

Read More
2020_feb_a32
கட்டுரைகட்டுரைபிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : தேங்காய்க்குக் குடுமி ஏன்?

Read More
2019_jul_a9
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

ராஜாவுக்கு குரங்கு காட்டிய நன்றி!

Read More
2019_jul_a15
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

உலக நாடுகள் : நைஜீரியா

Read More
2019_nov_v29
கட்டுரைகட்டுரைநவம்பர் 2019
1st November 2019 by ஆசிரியர்

மன்னரை முட்டாளாக்கிய அர்ச்சகர்

Read More
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் மடல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p