• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம்

2019_aug_a12
ஆகஸ்ட் 2019கதைசிறார் கதை

ஊருக்கு ஒதுக்குப்புறம்,

பாழடைந்த மண்டபம்.

அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது.

அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித் தின்னும். விடியும் நேரத்தில் திரும்பி வந்து இருட்டு மண்டபத்தின் உத்திரத்தில் தலைகீழாய்த் தொங்கும்.

அங்கே தனியாகத் தங்கியிருக்கப் பயந்தது வௌவால்.

யாரையாவது ஏமாற்றி துணைக்கு அழைத்து வர முடிவு செய்தது.

விடியற்காலை நேரத்தில் ஊருக்குள் போனது.

ஒரு காகத்திடம் சென்று “காகமே, அதோ தெரியும் அற்புதமான வேலைப்பாடு நிறைந்த அந்த மண்டபத்தைப் பார்…

அது ஓர் அதிசயமான இடம்… அங்கு ஒருநாள் இரவு தங்கினால் போதும்… நம் வாழ்வில் நினைத்ததெல்லாம் நடக்கும்…

அந்த மண்டபத்தின் உள்ளிருக்கும் உத்திரத்தில் தலைகீழாய் தொங்கினால் போதும் அடுத்த பிறவியிலும் ஆனந்தம் கிடைக்கும், மோட்சம் பெறலாம், வாழ்க்கையே வளமாகும்.

அப்படிப்பட்ட அதிசய மண்டபத்தில் தங்கியிருக்க நீ வருகிறாயா?’’ என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.

அதற்கெல்லாம் மயங்காத கறுப்புக் காகம்,

“அட மண்டு வௌவாலே! பாழடைந்த அந்த இருட்டு மண்டபம் பலன் தரும், நலம் தரும்னு யாருக்கிட்ட கதை விடுறே… நீ போயி அதிலே தங்கு, தொங்கு. என்னை எதுக்குக் கூப்பிடுறே?… உன்னோட மூடப் பேச்சை நம்ப நான் முட்டாள் இல்லே…

இருட்டு அறையிலே தொங்குனாலும் சரி, தங்குனாலும் சரி, எந்த மாற்றமும் வராது…

இவ்வளவு காலமாத் தொங்குற நீ, இன்னும் வாய்வழியாகத்தானே மலங்கழிக்கிறே! உனக்கே எந்த மாற்றமும் நடக்கலே….

இதுலே என்னையும் எதுக்குக் கூப்பிடுறே? மரியாதையா ஓடிப்போயிடு! இல்லே… உன்ன கொத்தியே கொன்னுப்புடுவேன்…’’

என்று கோவமாகத் திரும்பியது காகம்.

வௌவால் அதற்குள் வெகுதூரம் பறந்து போனது.

“தன்னை ஏமாற்ற நினைத்த வௌவால் வேறு யாரையும் ஏமாற்றிவிடக் கூடாது’’ என நினைத்த காகம், மற்றவரை எச்சரிக்க உரத்த குரல் எழுப்பியபடி பறந்தது.

“மூடத்தனத்தை நம்பாதே!

மூளைக்கு விலங்கிட்டுக் கொள்ளாதே!’’

22
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி2nd August 2019
பிஞ்சு & பிஞ்சு2nd August 2019பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2022_jan_v26
கதைஜனவரி 2022
4th January 2022 by ஆசிரியர்

படக்கதை: தீவிர கம்யூனிஸ்ட் தோழர் எம்.என்.ராய்

Read More
2022_mar_p11
கதைமார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

படக்கதை

Read More
2019_aug_a1
ஆகஸ்ட் 2019கதை
2nd August 2019 by ஆசிரியர்

கிலி பிடித்தது கிளி ஜோசியருக்கு!

Read More
2023_april_28
ஏப்ரல் 2023கதைகதை கேளு கதை கேளு
5th April 2023 by விழியன்

ட்டி-சர்-நிர்-தோர்-கர்

Read More
6
அக்டோபர் 2024கதைபிஞ்சு 2024
3rd October 2024 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணம்

தொடர் கதை: காட்டுவாசி – எங்க அந்தப் பசங்க?

Read More
2020_mar_v33
கதைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

படக்கதை: ஊடுருவிப் பார்த்த ரோண்ட்ஜன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p